செய்திகள் :

`135 கிலோவில் இருந்து 89 கிலோவாக குறைந்துவிட்டேன்' - அமைச்சர் நிதின் கட்கரி சொல்லும் ரகசியம்!

post image

மத்திய சாலைபோக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி எப்போதும் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பவர். நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வரும் நிதின் கட்கரி தனது உடல் நலனிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

கொரோனா காலத்திற்கு முன்பு நிதின் கட்கரி 135 கிலோ எடை இருந்தார். ஆனால் இப்போது எடையை குறைத்து மிகவும் ஸ்மார்ட்டாக மாறி இருக்கிறார். எவ்வாறு உடல் எடையை குறைத்தார் என்பது குறித்து பாலிவுட் பட இயக்குனர் பராகானுடன் நிதின் கட்கரி பகிர்ந்து கொண்டுள்ளார்.

இயக்குனர் பரா கான் பிரபலமானவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் சமையல் முறையை வீடியோ எடுத்து தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வீட்டிற்கு சென்றிருந்தார்.

பரா கானுடன் நிதின் கட்கரி

2.30 மணி நேரம் உடற்பயிற்சி

இந்த சந்திப்பின் போது நிதின் கட்கரி கூறுகையில்,''எனக்கு அதிகாலை 1 மணி வரை சந்திப்புகள் இருக்கும். அப்படி இருந்தும் காலை 7 மணிக்கு எழுந்து இரண்டரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன். முன்னர் நான் 135 கிலோ எடை இருந்தேன். ஆனால் இப்போது 89 கிலோவாக எடையை குறைத்து இருக்கிறேன். கொரோனாவிற்கு பிறகு 46 கிலோ எடையை குறைத்துள்ளேன். கொரோனா காலத்தில் என்னுடன் இருந்த பல உயிரிழந்துவிட்டனர். அதன் பிறகுதான் எனது உடல் நலனில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

பல ஆண்டுகளாக வேலையின் காரணமாக எனது உடல் ஆரோக்கியத்தை கவனிக்காமல் விட்டுவிட்டேன். எனக்கு மிகவும் திட்டமிடப்படாத, ஒழுங்கற்ற வாழ்க்கை இருந்தது. ஆனால் இப்போது உடற்பயிற்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இப்போது நான் தினமும் இரண்டு முதல் இரண்டரை மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். உடல் ஆரோக்கியமே சிறந்த செல்வம் ஆகும். உடல்நிலை சீர்குலையத் தொடங்கினால், தொழில்முறை வெற்றியோ அல்லது பொது வாழ்வில் உள்ள அந்தஸ்தோ பெரிதாகப் பயனளிக்காது" என்று வலியுறுத்தினார்.

உடல் பயிற்சியில் பிராணாயாமம், உடலை நீட்டும் பயிற்சிகள், தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை பயிற்சியாளர் ஒருவர் துணையோடு செய்வதாக குறிப்பிட்டார். சாப்பாடு விசயத்தில் தினமும் ஒரு முறை மட்டுமே அரிசி சாதம் எடுத்துக்கொள்வதாகவும், அனைத்து விதமான ஆயில் உணவுகளையும் தவிர்த்துவிட்டதாகவும், புரோட்டின் மற்றும் நார்சத்துள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.!

41 ஆண்டுகளுக்கு முன்பு தத்து கொடுக்கப்பட்டவர்; அம்மாவை தேடி நாக்பூர் வந்துள்ள நெதர்லாந்து மேயர்!

நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹீம்ஸ்டேட் என்ற நகரத்தில் மேயராக இருப்பவர் பால்குன் பின்னன்டைக். கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு பால்குன் திருமணமாகாத பெண் ஒருவருக்கு நாக்பூரில் பிறந்தார். அவர் பிறந்த 3 நாட்களி... மேலும் பார்க்க

பொங்கல் தினத்தில் மாநகராட்சி தேர்தல்: மும்பை தாராவியில் பொங்கல் விழாவை ரத்து செய்த தமிழ் அமைப்புகள்!

மும்பை தாராவியில் ஒவ்வோர் ஆண்டும் 90 அடி சாலையில் 2000 பெண்கள் கூடி ஒரே இடத்தில் பொங்கலிடுவது வழக்கம். இந்து அமைப்புகள், தமிழ் சங்கங்கள், அரசியல் கட்சிகள் சேர்ந்து இந்த பொங்கல் விழாவை நடத்துவது வழக்கம... மேலும் பார்க்க

45 சவரன் தங்க நகைகளை காவல்துறையினரிடம் ஒப்படைத்த பெண்; நேர்மையை போற்றிய லலிதா ஜுவல்லரி உரிமையாளர்

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளரான திருமதி பத்மா, சென்னை தி.நகர் சாலையில் யாரும் கவனிக்காமல் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை தமிழ்நாடு காவல் துறையிடம் ஒப்படைத்ததற்காக, லலிதா ஜுவல்லரி உரிமையாளர் டாக்... மேலும் பார்க்க

`புதிய சிந்தனைகளை வரவேற்போம்' ஜிவாமே ஷோரூமில் பொங்கல் கொண்டாட்டம் - நடிகை மேகா ஆகாஷ் பங்கேற்பு

பொங்கல் பண்டிகையின் மகிழ்ச்சியோடு நவீன பேஷனையும் இணைத்து,இந்தியாவின் நம்பர்1உள்ளாடை நிறுவனமான ஜிவாமே,சென்னை பீனிக்ஸ் மார்கெட்சிட்டி மாலில் உள்ள தனது ஷோரூமில் உற்சாகமான கொண்டாட்டத்தை நடத்தியது. இந்த வி... மேலும் பார்க்க

போகி பண்டிகை கொண்டாட்டம்: சென்னையின் காலை பொழுது! | Bhogi Clicks

போகி பண்டிகை | சென்னைபோகி பண்டிகை | சென்னைபோகி பண்டிகை | சென்னைபோகி பண்டிகை | சென்னைபோகி பண்டிகை | சென்னைபோகி பண்டிகை | சென்னைபோகி பண்டிகை | சென்னைபோகி பண்டிகை | சென்னைவ்போகி பண்டிகை | சென்னை... மேலும் பார்க்க