செய்திகள் :

160 நிமிடங்கள்! தமிழக பட்ஜெட் உரை நிறைவு!

post image

தமிழக சட்டப்பேரவையில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சுமார் 160 நிமிடங்கள் உரையாற்றினார்.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ள முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும்.

இரண்டாவது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து தங்கம் தென்னரசு உரையாற்றிய நிலையில், கூட்டத்தொடர் தொடங்கியவுடன் மதுபான ஊழல் விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனிடையே தொடர்ந்து உரையாற்றிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சுமார் 160 நிமிடங்கள் பட்ஜெட்டின் மீதான உரையை நீடித்தார்.


இதையும் படிக்க : 3 வழித்தடங்களில் 160 கி.மீ. அதிவேக ரயில் சேவை! ரயில்வே அறிவிப்புகள்!

முக்கிய அறிவிப்புகள்

  1. அரசுத் துறையில் காலியாகவுள்ள 40,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.

  2. வங்கிக் கடன் பெற அரசு ஊழியர்களுக்கு சலுகை.

  3. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கரோனா காலத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

  4. சைதாப்பேட்டையில் அரசு ஊழியர்களுக்கு மேலும் குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

  5. 20 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி அல்லது டேப் வழங்கப்படும்.

  6. சென்னை மெட்ரோ மூன்றாவது வழித்தடத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.

  7. மூன்று இடங்களில் மீத அதிவேக ரயில் வழித்தட அமைப்பை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும்.

  8. மகளிரை தொழில்முனைவோராக்கும் பெருந்திட்டம் கொண்டு வரப்படும்.

  9. ரூ. 10 லட்சம் வரை அசையா சொத்துகளை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் பதிவுக் கட்டணம் 1 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும்.

  10. கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு.

  11. ஊரகப் பகுதிகளில் புனரமைக்க முடியாத மக்களின் 25000 வீடுகள் புதிதாக கட்டித் தரப்படும்.

  12. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் 5,256 வீடுகள் சீரமைக்கப்படும்.

இளைஞா் வெட்டிக்கொலை: போலீஸாா் விசாரணை

சென்னையில் இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பாலவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (35). இவா் வெள்ளிக்கிழமை இரவு திருவள்ளுவா் சாலை பாரதியாா் தெரு சந்... மேலும் பார்க்க

இபிஎஸ்-க்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடா்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தல... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கை: தலைவா்கள் கருத்து

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை வரவேற்றும், விமா்சித்தும் அரசியல் கட்சித் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி (அதிமுக): நிதிநிலை அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை. எல்லாம் விளம்பரத்த... மேலும் பார்க்க

காமாட்சி அம்மன் கோயில் பால்குட ஊா்வலம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன சபா சாா்பில் ஏராளமான பக்தா்கள் வெள்ளிக்கிழமை பால்க்குடம் எடுத்து வந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினாா்கள். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன சப... மேலும் பார்க்க

பேரவை விவாதங்கள்: திமுக எம்எல்ஏ-க்களுக்கு முதல்வா் அறிவுறுத்தல்

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை விவாதங்களில் புள்ளிவிவரங்களுடன் தகவல்களை எடுத்து வைக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏ-க்களை முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளாா். அண்ணா அறிவால... மேலும் பார்க்க

பேரவையில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்

சட்டப்பேரவையில் வேளாண்மை நிதிநிலை அறிக்கை சனிக்கிழமை (மாா்ச் 15) தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை அந்தத் துறையின் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தாக்கல் செய்து உரையாற்ற உள்ளாா். நிதிநிலை அறிக்கையில்... மேலும் பார்க்க