செய்திகள் :

160 நிமிடங்கள்! தமிழக பட்ஜெட் உரை நிறைவு!

post image

தமிழக சட்டப்பேரவையில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சுமார் 160 நிமிடங்கள் உரையாற்றினார்.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ள முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும்.

இரண்டாவது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து தங்கம் தென்னரசு உரையாற்றிய நிலையில், கூட்டத்தொடர் தொடங்கியவுடன் மதுபான ஊழல் விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனிடையே தொடர்ந்து உரையாற்றிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சுமார் 160 நிமிடங்கள் பட்ஜெட்டின் மீதான உரையை நீடித்தார்.


இதையும் படிக்க : 3 வழித்தடங்களில் 160 கி.மீ. அதிவேக ரயில் சேவை! ரயில்வே அறிவிப்புகள்!

முக்கிய அறிவிப்புகள்

  1. அரசுத் துறையில் காலியாகவுள்ள 40,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.

  2. வங்கிக் கடன் பெற அரசு ஊழியர்களுக்கு சலுகை.

  3. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கரோனா காலத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

  4. சைதாப்பேட்டையில் அரசு ஊழியர்களுக்கு மேலும் குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

  5. 20 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி அல்லது டேப் வழங்கப்படும்.

  6. சென்னை மெட்ரோ மூன்றாவது வழித்தடத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.

  7. மூன்று இடங்களில் மீத அதிவேக ரயில் வழித்தட அமைப்பை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும்.

  8. மகளிரை தொழில்முனைவோராக்கும் பெருந்திட்டம் கொண்டு வரப்படும்.

  9. ரூ. 10 லட்சம் வரை அசையா சொத்துகளை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் பதிவுக் கட்டணம் 1 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும்.

  10. கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு.

  11. ஊரகப் பகுதிகளில் புனரமைக்க முடியாத மக்களின் 25000 வீடுகள் புதிதாக கட்டித் தரப்படும்.

  12. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் 5,256 வீடுகள் சீரமைக்கப்படும்.

சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

யூடியுபர் சவுக்கு சங்கர் வீட்டில் துய்மைப் பணியாளர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நிலையில் அந்த சம்பவத்திற்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். யூடியுபர் சவுக்க... மேலும் பார்க்க

பூண்டி நீர்த்தேக்க கொள்ளளவை உயர்த்த நீர்வளத்துறை திட்டம்!

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை 35 அடியிலிருந்து 37 அடியாக உயர்த்த திட்டமிட்டு வருவதாக நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர... மேலும் பார்க்க

மார்ச் 27, 28-ல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்!

மார்ச் 27, 28 தேதிகளில் தமிழகத்தில் வெப்பநிலை 2 -3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் இதனால் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொட... மேலும் பார்க்க

பெட்ரோல் நிலையத்தில் தகராறு: ஊழியர் அடித்துக் கொலை!

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் ஊழியருக்கும் லாரி ஓட்டுநர் - கிளீனர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.சூலூர் அருகே கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து அன்ன... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் தங்கும் விடுதியில் தீ விபத்து!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள தங்கும் விடுதியில் திங்கள்கிழமை மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தரைத்தளம் மற்றும் மூன்று த... மேலும் பார்க்க

2026-ல் தமிழகத்தை ஆளப்போறோம்.. தவெகவின் போஸ்டரால் பரபரப்பு!

கோவை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் 2026-ல் தமிழகத்தை ஆளப்போறோம் என்ற வாசகத்துடன் கோவையில் ஒட்டப்பட்டு உள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நடிக... மேலும் பார்க்க