செய்திகள் :

36 பயணிகளுடன் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்; கவலைக்கிடமான நிலையில் ஒருவர் - ஊட்டியில் சோகம்!

post image

நீலகிரி மாவட்டம், ஊட்டியிலிருந்து இன்று மதியம் தங்காடு கிராமத்தை நோக்கிப் பயணிகளுடன் இயக்கப்பட்ட தனியார் மினி பஸ் ஒன்று, மணலாடா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த வேளையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மலை காய்கறி தோட்டத்திற்குள் பாய்ந்த மினி பஸ்ஸில் இருந்து பயணிகளின் அலறல் சத்தத்தைக் கேட்ட விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பலரும் பதறிக் கொண்டு ஓடி பயணிகளை ஒவ்வொருவராக மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான மினி பஸ்

உடனடியாக ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, காயம்பட்ட பயணிகளை ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். காயமடைந்த 36 பயணிகளுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்த காவல்துறையினர், "டிரைவர் பன்னீர்செல்வம், கண்டக்டர் ஜெகதீஸ் ஆகியோரால் இயக்கப்பட்ட இந்த மினி பஸ்ஸில் 21ஆண்கள், 12 பெண்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 36 பயணிகள் பயணித்திருக்கிறார்கள். அனைவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான மினி பஸ்

ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. விவசாய நிலத்தில் விபத்து ஏற்பட்டதால் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. திடீரென ஸ்டேரிங் லாக் ஆனதாகச் சொல்கிறார்கள். காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

ஊட்டி: பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ் - 30 பேர் காயம்... கோர விபத்தின் காட்சிகள்!

பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்பயணிக... மேலும் பார்க்க

இந்தூரில் அசுத்தமான தண்ணீரால் 7 பேர் பலி: `தேவையில்லாத கேள்வி வேண்டாம்'- சீறிய அமைச்சர்

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள பாக்யரபுரா என்ற இடத்தில் அசுத்தமான தண்ணீரை குடித்ததால் 200க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக மாநில அரசு அதிகாரபூர்வம... மேலும் பார்க்க

Switzerland: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தீ விபத்து; 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

உலகமெங்கும் புத்தாண்டை வெகு விமரிசையாக கொண்டாடி வரவேற்று வருகின்றனர். அப்படி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் சுவிட்சர்லாந்தில் பயங்கர தீ விபத்து ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இந்த தீ விபத்தில் 40-க்கும் ம... மேலும் பார்க்க

குமரி: 2 மணி நேர போராட்டம்; வலியால் மயங்கிய சிறுவன்; கரும்பு மிஷினில் சிக்கிய சிறுவனின் கை மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வில்லியம் போஸ். இவர் அந்தப் பகுதியில் கரும்புச்சாறுக் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.வில்லியம் போஸின் பேரன் ஆரின் ஜெஃப்ரின் (13) ... மேலும் பார்க்க

மும்பை: பேருந்தை ரிவர்ஸ் எடுக்கும்போது நடந்த கொடூரம்; பாதசாரிகள் மீது மோதி 4 பேர் பலி

மும்பையில் பி.இ.எஸ்.டி. (பெஸ்ட்) நிர்வாகம் மின் விநியோகம் மற்றும் பயணிகள் பஸ் போக்குவரத்தை இயக்கி வருகிறது. நேற்று இரவு 10.05 மணியளவில் பெஸ்ட் பஸ் ஒன்று பயணிகள் மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.... மேலும் பார்க்க

சிவகாசி: இடிந்து விழுந்த வீட்டின் கேட் சுவர்; விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்

சிவகாசி அருகே கொங்கலாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் நுழைவு வாயில் கேட் மற்றும் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கொங்கல... மேலும் பார்க்க