செய்திகள் :

4 மாதத்தில் 22 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு; நீதிபதி திவாகரிடமிருந்து திரும்ப பெறப்பட்ட 97 வழக்குகள்

post image

உத்தரப்பிரதேச மாநிலம் முஜாபர்நகரில் நீதிபதியாகப் பணியாற்றிய ரவிக்குமார் திவாகர் கடந்த 4 மாதத்தில் 22 பேருக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டது பெரிய அளவில் பேசப்பட்டது.

அதுவும் 10 வழக்குகளில் 22 பேருக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் திடீரென மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி பிரேந்திர குமார் சிங் உத்தரவின் பேரில் நீதிபதி திவாகர் விசாரித்து வந்த கொலை மற்றும் கொடூரமான குற்றங்கள் தொடர்பான 97 வழக்குகளின் கோப்புகள் அவரிடமிருந்து திரும்ப பெறப்பட்டுள்ளன.

முசாபர்நகரில் திவாகரின் மரண தண்டனை தீர்ப்புகள் பற்றிய செய்தி வெளியான சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் இது தொடர்பாகப் பிறப்பித்துள்ள உத்தரவில், "தற்போது நீதிபதி திவாகர் முன்னிலையில் நிலுவையில் உள்ள வழக்கு கோப்புகள் முசாபர்நகர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்திற்குத் திரும்ப பெறப்பட்டுள்ளன" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முசாபர்நகரில் நீதிபதி திவாகர் 22 மரண தண்டனைகள் வழங்கிய நிலையில், அவர் வழங்கிய மொத்த மரண தண்டனைகளின் எண்ணிக்கை 35 ஆக உள்ளது. இதில் அவர் பரேலியில் பதவியிலிருந்தபோது 13 பேருக்கு மரண தண்டனை வழங்கினார். உயர் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்படாத மரண தண்டனைகள் எதுவும் நிறைவேற்றப்படாது என்றாலும் இது போன்று தொடர்ச்சியாக மரண தண்டனைகள் வழங்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

திவாகர் முதன்முதலில் 2022ம் ஆண்டு வாரணாசியில் சிவில் நீதிபதியாக இருந்தபோது, ​​ஞானவாபி மசூதி வளாகத்தை வீடியோகிராஃபிக் ஆய்வுக்கு உத்தரவிட்டார். இந்தக் கணக்கெடுப்பில் வுசுகானா பகுதியும் அடங்கும், அங்கு சிவலிங்கம் இருப்பதாக மனுதாரர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

இதனை முஸ்லிம் தரப்பில் மறுக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி சீல் வைக்கப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை வாரணாசி மாவட்ட நீதிபதிக்கு மாற்றியது.

கல்லூரி மாணவிகளின் செலவுக்கு மாதம் ரூ.2000; மேற்படிப்பை ஊக்கப்படுத்த மகாராஷ்டிரா அரசு புது திட்டம்

மகாராஷ்டிரா அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளின் படிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு நிதியுதவி செய்ய முடிவு செய்துள்ளது. மாணவிகள் படித்துக்கொண்டே சம்பாதிக்கும் திட்டத்தில் இத்திட்டம் அறிமுகம்... மேலும் பார்க்க

TN Assembly: உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மானியக் கோரிக்கை; அமைச்சர் தாக்கல் | Live Updates

'சட்டமன்றம் இன்று...'கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகப்புத் துறையின் மானியக் கோரிக்கையை அமைச்சர் வெங்கட்ரமணன் இன்று அவையில் தாக்கல் செய்கிறார். மேலும் பார்க்க

``சர்கார் பேனரை கிழித்ததால் அதிமுக ஆட்சியை இழந்தது!'' - அமைச்சர் ஆனந்த் கடும் விமர்சனம்

சட்டமன்றத்தில் இன்று நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்திருந்தது. இதில் பதிலளித்து பேசிய அமைச்சர் ஆனந்த் சர்கார் பட சமயத்தில் நடந்த விவகாரத்தை குறிப்பிட்டு அதிமுகவை கடுமையாக விமர்சித்திர... மேலும் பார்க்க

'சீட் கேட்ட பிரபல சினிமா இயக்குநர்; உடனே மறுத்த முதல்வர் விஜய்!' - அமைச்சர் ஆனந்த் பகிரும் ரகசியம்

சட்டமன்றத்தில் இன்று நீர்வளத்துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்தது. மானியக் கோரிக்கையில் பதிலளித்து பேசிய அமைச்சர் ஆனந்த், தேர்தலின் போது திரைமறைவில் நடந்த சில விஷயங்களையும் பேசியிருந்தா... மேலும் பார்க்க

'தலைவர் ஏண்டா அரசியலுக்கு வந்தார் என நினைத்தேன்...' - அமைச்சர் ஆனந்த் ஓபன் டாக்!

சட்டமன்றத்தில் இன்று நீர்வளத்துறைக்கான மானியக் கோரிக்கை விவாதம் நடந்திருந்தது. இதில் பதிலளித்து பேசிய அமைச்சர் ஆனந்த், 'முதல்வர் ஏண்டா அரசியலுக்கு வந்தார் என நினைத்தேன்?' என்று சுவாரஸ்யமாக பேசியிருக்க... மேலும் பார்க்க