செய்திகள் :

53 வயதில் திருமணமாகி 4 நாள்களில் பிரிவு; 14 ஆண்டுகள் போராடி ஜீவனாம்சம் பெற்ற பெண்

post image

கணவன்–மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டால், விவாகரத்துக்காக இருவரும் பல ஆண்டுகள் கோர்ட் படியேறுவது வழக்கமாக உள்ளது. மனைவியுடன் சில நாள்கள் மட்டுமே வாழ்ந்தாலும், விவாகரத்து ஏற்படும் போது கணவன் மனைவிக்கு பராமரிப்பு அல்லது ஜீவனாம்சம் வழங்க வேண்டியது அவசியம்.

குஜராத்தில் திருமணம் செய்து கொண்டு, 4 நாள்கள் மட்டும் வாழ்ந்த பெண்ணிற்கு ரூ.10 ஆயிரம் பராமரிப்பு தொகை வழங்க கணவருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

53 வயதில் திருமணமாகி 4 நாள்களில் பிரிவு
53 வயதில் திருமணமாகி 4 நாள்களில் பிரிவு

குஜராத் மாநிலத்தின் ஜுனாகாட் பகுதியில் வசித்து வருபவர் துகாராம் பட்டேல் (53). இவர் வங்கியில் பணியாற்றி வந்தவர். அவருக்கு திருமணம் செய்து இரண்டு மகன்கள் இருந்தனர்.

இரு மகன்களுக்கும் திருமணம் நடைபெற்று விட்டது; அதற்கிடையில் பட்டேலின் மனைவியும் இறந்தார். இதனால் இரண்டாவது திருமணம் செய்ய பட்டேல்முடிவு செய்தார். இதற்காக பெண் தேடினார்; எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து “பெண் தேவை” என்று கூறி அவர் விளம்பரம் செய்திருந்தார். அதைப் பார்த்து காயத்ரி தேவி என்ற பெண் பட்டேலை அணுகினார். காயத்ரிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, 13 வயதுடைய ஒரு மகள் இருந்தார். அவரது கணவர் இறந்திருந்தார்.

2011ம் ஆண்டு பட்டேலும் காயத்ரி தேவியும் அங்குள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து காயத்ரி தனது கணவன் வீட்டிற்கு சென்றபோது, வீட்டில் இருந்த அனைவரும் காயத்ரியை சித்ரவதை செய்ய ஆரம்பித்தனர்.

வெறும் நான்கு நாட்கள் மட்டுமே காயத்ரி தனது கணவன் வீட்டில் இருந்தார். அதன் பிறகு அந்த பெண் தனது தாயார் வீட்டிற்கு திரும்பிவிட்டார். காயத்ரியை தனது வீட்டிற்கு அழைத்து வர பட்டேல் எந்த வித முயற்சியும் செய்யவில்லை.

53 வயதில் திருமணமாகி 4 நாள்களில் பிரிவு
53 வயதில் திருமணமாகி 4 நாள்களில் பிரிவு

காயத்ரியின் போன் அழைப்புகளையும் பட்டேல் தவிர்த்து வந்தார். ஒரு கட்டத்தில், “நம்ம இருவருக்கும் திருமணமே நடக்கவில்லை” என்று பட்டேல் தெரிவித்தார். இதையடுத்து காயத்ரி, குடும்ப நீதிமன்றத்தில் தனக்கும் தனது மைனர் மகளுக்கும் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி மனுத் தாக்கல் செய்தார்.

ஆனால் இம்மனு விசாரணைக்கு வந்தபோது, கோயிலில் நடந்தது திருமணம் அல்ல; நிச்சயதார்த்தம் மட்டுமே என்று பட்டேல் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து காயத்ரியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

காயத்ரி இத்தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. அதோடு, காயத்ரியின் மனுவை புதிதாக விசாரிக்கும்படி குடும்ப நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் குடும்ப நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கத் தொடங்கியது. புதிய விசாரணைக்குப் பிறகு, தம்பதியினர் உண்மையில் திருமணம் செய்து கொண்டதை குடும்ப நீதிமன்றம் உறுதி செய்தது.

வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

அதோடு, இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், “மனைவியுடன் சேர்ந்து வாழ மறுப்பதற்கு ஒரு நியாயமான காரணம் இருந்தால் மட்டுமே கணவரின் புறக்கணிப்பை பரிசீலிக்க முடியும். தற்போதைய வழக்கில், விண்ணப்பதாரரின் வாய்மொழி சாட்சியங்கள் மூலம் அவர் கணவனால் கைவிடப்பட்டதைக் காட்டுகிறது. மேலும் அவர் தனது மகளுடன் துன்பமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்” என்று குறிப்பிட்டது.

எனவே, மனுதாரருக்கு கணவன் மாதம் ரூ.10 ஆயிரம் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேசமயம், அப்பெண் தனது மகளுக்கும் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த கோரிக்கையை கோர்ட் நிராகரித்தது. காயத்ரியின் மகள் பட்டேலுக்கு பிறந்தவர் அல்லாததால், அவருக்கு பராமரிப்பு தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளது.

``சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் BJP, RSS வழக்கறிஞர்களுக்கு கொலீஜியம் பரிந்துரை" - திருமா

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் நெருக்கமாக உள்ள வழக்கறிஞர்களை கொலீஜியம் பரிந்துரைப்பதாகவும், இதில் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் வி.சி.க தலைவர் எம்.ப... மேலும் பார்க்க

ரயிலில் தள்ளி மாணவி கொலை: குற்றவாளியின் தண்டனையை குறைத்த உயர் நீதிமன்றம் - காரணம் என்ன?

தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவங்களில் ஒன்று, பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கு. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு விதிக்கப்பட்... மேலும் பார்க்க

`பொய் வழக்கு; தமிழ்நாடு உள்துறை ரூ.8 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும்’ - உயர் நீதிமன்றம் அதிரடி

உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 2017 ஆம் ஆண்டில் வழிப்பறி செய்ய திட்டமிட்டதாக நான் உட்பட 5 பேர் மீது மதுக்கூர் போல... மேலும் பார்க்க

Surya Kant: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற சூர்ய காந்த்; மோடி, அமித் ஷா பங்கேற்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த பி.ஆர். கவாய் பதவிக்காலம் நவம்பர் 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதியாக சூர்யா காந்த் இன்று பதவியேற்றார். உச்ச நீதிமன... மேலும் பார்க்க

``என் தீர்ப்புகளில் மிக முக்கியமானது" - புல்டோசர் வழக்கு குறித்து பகிர்ந்த பி.ஆர்.கவாய்

உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பணியாற்றிய பி.ஆர். கவாய் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். அதனால் நேற்று கடைசி வேலை நாளின்போது, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் (SCBA) பிரிவு உபசார விழா நடைப... மேலும் பார்க்க

`கூட்டத்தினரின் பாதுகாப்புக்கு ஏற்பாட்டாளர்களே முழு பொறுப்பு’ - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.அதில் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு, திட்டமிடுவதற்கு,... மேலும் பார்க்க