செய்திகள் :

'6 மாதங்களாக ஃபிரிட்ஜில் இளம்பெண் சடலம்' - லிவ் இன் பார்ட்னரை கொன்ற நபர்!

post image

மத்திய பிரதேசம் திவாஸ் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் படிதார். இவரது வீட்டில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து போலீஸார் செய்த சோதனையில் வீட்டிற்குள் கிட்டதட்ட 6 மாதமாக ஃபிரிட்ஜில் பெண் ஒருவரின் சடலம் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

PTI அறிக்கையின் படி, கொலை செய்யப்பட்டப் பெண் புடவை மற்றும் நகைகள் அணிந்திருக்கக்கூடும் என்றும், அவரது கைகள் கழுத்தோடு இணைத்து கட்டப்பட்டிருக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது. இந்தக் கொலை குறித்து போலீஸார் ''இந்தக் கொலை ஒரு வருடத்திற்கு முன்பே நடந்திருக்கலாம்" என்று கூறுகின்றனர்.

கொலை செய்யப்பட்ட பெண் சஞ்சய் படிதருடன் 5 வருடங்களாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காதலர் தினம்

இந்த வீட்டில் 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் குடியேறியுள்ளார் சஞ்சய். அதன் பின்னர், 15 நாட்களுக்கு ஒருமுறை வீட்டை காலி செய்வது, மீண்டும் குடியேறுவது என இருந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு, அந்த வீட்டின் ஒரு அறையை காலி செய்துவிட்டு, மீதம் இருக்கும் இரண்டு அறைகளில் அவரது பொருட்களை வைத்துள்ளார். இந்த அறைகளையும் விரைவில் காலி செய்யப்போவதாக சஞ்சய் சமீபத்தில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, இன்னொருவருக்கு அந்த வீட்டினை வாடகைக்கு விட்டுள்ளார் வீட்டின் உரிமையாளர். அப்போது தான் துர்நாற்றம் வீசி கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தக் கொலை குறித்து விசாரணைகள் போய் கொண்டிருக்கிறது.

Saif Ali Khan: அதிகாலையில் கொள்ளை முயற்சி; தடுக்க முயன்ற நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக் குத்து!

மும்பையில் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டு பாந்த்ரா பங்களாவில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை 2.30 மணிக்கு நடிகர் சைஃப் அலிகான் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன... மேலும் பார்க்க

சமாதி ஆனாரா கோபன்சுவாமி? - சந்தேகம் கிளப்பும் ஊர்மக்கள், கல்லறையை திறக்க குடும்பத்தினர் எதிர்ப்பு!

கேரள மாநிலம, திருவனந்தபுரம் மாவட்டம், நெய்யாற்றின்கரை ஆறான்மூடு பகுதியைச் சேர்ந்தவர் கோபன் சுவாமி. மணி என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு 3 மகன்கள். மூத்த மகன் இறந்துவிட்ட நிலையில் தற்போது 2 மகன்கள் உள்ளனர... மேலும் பார்க்க

சென்னை: ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை... வடமாநில இளைஞர் கைது

சென்னை ஐ.ஐ.டியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் பொங்கல் பண்டிகை அன்று கோட்டூர்புரத்தில் உள்ள டீக்கடைக்கு நண்பருடன் சென்றிருக்கிறார். அப்போது அந்த டீக்கடையில் வேலை செய்யும் இளைஞர் ஒருவர் திடீரென மாண... மேலும் பார்க்க

கார் பார்க்கிங் தகராறு; செக்யூரிட்டி மீது துப்பாக்கிச் சூடு.. போதை ஆசாமி கைது!

டெல்லி மற்றும் நொய்டாவில் அடிக்கடி வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக அல்லது லிப்டில் ஏறுவது தொடர்பாக குடியிருப்பு வாசிகள் செக்யூரிட்டி கார்டுகளை தாக்குவது வழக்கமாக நடந்து கொண்டிருக்கிறது. டெல்லி அருகில் ... மேலும் பார்க்க

`காதலனை திருமணம் செய்ய எதிர்ப்பு' - போலீஸார் கண்முன்னே மகளை சுட்டுக் கொன்ற தந்தை

பெற்றோர்கள் பெரும்பாலும் காதலை விரும்புவதில்லை. ஒரு சில பெற்றோர் மட்டுமே தங்களது பிள்ளைகள் விரும்பும் நபர்களையே திருமணம் செய்து வைக்கின்றனர். மத்திய பிரதேச மாநில குவாலியர் என்ற இடத்தில் தங்களது விருப்... மேலும் பார்க்க

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை-யில் நண்பருடன் இருந்த மாணவியிடம் அத்துமீறல் – மூடி மறைத்த நிர்வாகம்?

புதுச்சேரியில் அத்துமீறல் சம்பவம்சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஒட்டுமொத்த தமி... மேலும் பார்க்க