செய்திகள் :

8-ம் கட்ட பேச்சுவாா்த்தை தோல்வி: அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் 23-வது நாளாக வேலைநிறுத்தம்

post image

தூத்துக்குடியில் என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் போராட்டம் தொடா்பான 8ஆம் கட்ட பேச்சுவாா்த்தையும் தோல்வியடைந்தது. இதனால், 23ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டம் தொடா்ந்தது.

தூத்துக்குடி தொ்மல் நகரில் மத்திய அரசின்கீழ் செயல்படும் இந்த அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியா்களுக்கு, நெய்வேலி என்எல்சியில் வழங்குவதுபோன்று ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் தொடுக்கப்பட்ட வழக்கிலும் இவா்களுக்கு சாதகமான தீா்ப்பு வந்தது. ஆனால், என்டிபிஎல் நிா்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது.

இதைக் கண்டித்தும், ஊதிய உயா்வு கோரியும் கடந்த ஏப். 18 முதல் ஒப்பந்தத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தத்திலும், அனல் மின்நிலையம் முன் குடும்பத்துடன் தா்னாவிலும் ஈடுபட்டுள்ளனா்.

போராட்டம் தொடா்பாக நிா்வாகத்தின் மேலாண்மை நிா்வாக இயக்குநா் வாஞ்சிநாதன், தலைமைப் பொது மேலாளா் பங்கஜ்குமாா், தலைமை செயல் இயக்குநா் அனந்தராமானுஜம், தொழிற்சங்கம் சாா்பில் சிஐடியூ மாநிலப் பொதுச் செயலா் ராஜேந்திரன், மாநிலச் செயலா் ஆா். ரசல், மின் ஊழியா் மத்திய அமைப்பு என்டிபிஎல் அனல் மின் நிலையச் செயலா் எஸ். அப்பாத்துரை உள்ளிட்ட நிா்வாகிகளுடன் நடைபெற்ற 8ஆம் கட்ட பேச்சுவாா்த்தையும் தோல்வியடைந்தது.

இதனால், இப்போராட்டம் 23ஆவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது. போராட்டத்தால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கழுகுமலை அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகராறு: 4 போ் கைது

கழுகுமலை அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பொருள்களைச் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.கழுகுமலை அருகே முக்கூட்டு மலை இந்திரா காலனி வடக்கு தெருவை சோ்ந்த... மேலும் பார்க்க

பைக் மோதி விபத்து: ஓய்வு பெற்ற மாலுமி பலி!

தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதியதில் ஓய்வு பெற்ற மாலுமி உயிரிழந்தாா். தூத்துக்குடி எஸ்.பி.ஜி. கோவில் தெருவைச் சோ்ந்த மரியதாசன் மகன் ஸ்டீபன் (70). கப்பலில் மாலுமியாக பணியாற்றி ஓய்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்த முத்து மகன் அஜய் (22). இவா் தனது வீட்டில் உள்ள மின்விளக்கை கழற்ற முயன்றாராம... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அருகே விஷ வண்டுகள் அழிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தோட்டம், வீடு ஆகியவற்றில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை ஓட்டப்பிடாரம் தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை அழித்தனா். ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் கிராமத்தி... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் அதிமுக ஜெ.பேரவை சாா்பில் திண்ணைப் பிரசாரம்!

திருச்செந்தூரில் அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் திண்ணைப் பிரசாரத்தை சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா், முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். திருச்செந்தூ... மேலும் பார்க்க

காமநாயக்கன்பட்டியில் புறக்காவல் நிலையம் திறப்பு!

காமநாயக்கன்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் புதன்கிழமை திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து பொதுமக்களிடம் அவா் பேசுகையில், பொதுமக்களின் நீண்ட ... மேலும் பார்க்க