செய்திகள் :

Aadhaar Card: 2 கோடி ஆதார் கார்டுகள் நீக்கம்; மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன?

post image

மத்திய அரசு ஆதார் தகவல்களை மாற்றியமைத்துள்ளது. இறந்துபோனவர்களின் லட்சக்கணக்கான ஆதார் எண்கள் அகற்றப்படாமல் இருந்துவந்தன. அதன் மூலம் உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் ஆள்மாறாட்டம் மற்றும் சட்டவிரோதமாக நலத்திட்ட உதவிகளைப் பெறுவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து இப்பிரச்னைகளுக்குத் தீர்வு காண மத்திய அரசு ஆதார் தரவுகளை மாற்றியமைத்து இருக்கிறது. இறந்துபோன 2 கோடி மக்களின் ஆதார் தகவல்களை நீக்கி உத்தரவிட்டு இருக்கிறது. இந்திய பதிவாளர் ஜெனரல், மாநில அரசுகள், பொது வினியோகத்துறை போன்றவற்றுடன் இணைந்து அவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருக்கின்றன.

மோசடி, ஆள்மாறாட்டம், நலத்திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவது போன்றவற்றைத் தடுக்கும் நோக்கில் இப்பெயர்கள் ஆதார் பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது என்றும் அவ்வாறு நீக்கப்பட்ட பெயர்களை மீண்டும் பயன்படுத்த முடியாது என்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது.

ஆதார் கார்டு
ஆதார் கார்டு

இதே போன்று இறந்தவர்கள் குறித்து உறவினர்கள் மை ஆதார் போர்டல் மூலம் தகவல் கொடுக்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று இறந்தவர்களின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டு இருந்தால் அதனையும் இறந்தவர்களின் வாரிசுகள் மை ஆதார் போர்டல் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வங்க தேச பிரஜைகள் சிலர் சட்டவிரோதமாக இந்தியாவில் ஆதார் கார்டு எடுத்துள்ளனர். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட ஆதார் கார்டுகளும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. ஆதார் பதிவுகளில் நடப்பு தகவல்களைத் தொடர்ந்து மேம்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

``RSS அமைப்பு தேர்தல் ஆணையத்தையும் கைப்பற்றிவிட்டது'' - ராகுல் காந்தி அடுக்கும் குற்றச்சாட்டுகள்

நாடாளுமன்ற லோக்சபாவில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பேசியிருக்கும் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, SIR குறித்த விவாதத்தை தொடங்கி வைத்து அந்தப் பணிகளை உட... மேலும் பார்க்க

விதை மசோதா... இந்திய விவசாயிகள் அடமானத்தில்... பன்னாட்டு நிறுவனங்கள் ரத்தின கம்பளத்தில்!

அனைவருக்கும் வணக்கம்...நடப்பு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், ‘விதை மசோதா- 2025’ தாக்கல் செய்யப்பட உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.‘போலி மற்றும் தரமற்ற விதைகளை விற்பனை செய்தால் அபராதம், தவற... மேலும் பார்க்க

`சுனாமியால பாதிக்கப்பட்டு 21 வருஷம் ஆச்சு; இன்னும் வீடு கிடைக்கல.!’ - தீராத வேதனையில் மீனவ மக்கள்

சென்னை கார்கில் நகர் குடியிருப்புப் பகுதியில் சுனாமியில் வீடுகளை இழந்த 158 குடும்பங்களுக்கு சுமார் 21 ஆண்டுகள் கடந்தும் வீடுகள் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. உலக வங்கி நகர்புற வாழ்விட மேம்பாட... மேலும் பார்க்க

கொளத்தூர்: "50 வருஷமா வாழும் வீட்டை இடிக்கப்போறோம்னு சொல்றாங்க" பாரத் ராஜீவ்காந்தி நகர் மக்கள்

கொளத்தூரில் அமைந்திருக்கும் பாரத் ராஜீவ் காந்தி நகர் பகுதி மக்களின் வீடுகளை இடித்து, பொதுமக்களை அப்புறப்படுத்த தமிழக அரசு ஆயத்தமாகவுள்ளதாக குமுறுகிறார்கள் குடியிருப்புவாசிகள்!தமிழக முதலமைச்சர் மு.க. ஸ... மேலும் பார்க்க

"இது என் மீது ஜோடிக்கப்பட்ட வழக்கு" - தீர்ப்பு குறித்து நடிகர் திலீப் சொன்ன விஷயம்

கேரளாவைச்சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, அதை வீடியோவாகவும் பதிவுசெய்த வழக்கு, 2017-ம் ஆண்டு முதல் இன்றுவரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தச் சம்... மேலும் பார்க்க

`258 பக்கம் ஆவணம், ரூ.1,020 கோடி ஊழல்?' - கே.என்.நேரு மீது FIR பதிவு செய்ய அமலாக்கத்துறை கடிதம்

திமுகமூத்த அமைச்சர் கே.என்.நேரு1,020 கோடி ரூபாய் வரை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஊழல் செய்திருப்பதாகக் குற்றம்சாட்டி வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத்துறை தமிழக தலைமை செயலாளர் மற... மேலும் பார்க்க