செய்திகள் :

``AI என் பதவியைக் கூட பறித்துவிடும்" - AI குறித்து வெளிப்படையாக பேசிய சுந்தர் பிச்சை

post image

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் CEO (தலைமை நிர்வாக அதிகாரி) பதவியைக் கூட எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அளித்திருக்கும் பேட்டியில், ``AI-ன் வேகமான முன்னேற்றத்தால், உயர் நிறுவன பதவிகள் கூட ஆட்டோமேஷனுக்கு மாறிவிடக்கூடும்.

சுந்தர் பிச்சை Google AI hub
சுந்தர் பிச்சை Google AI hub

அனைத்து மட்டங்களிலும் வேலைவாய்ப்பில் AI-ன் தாக்கம் குறித்த கேள்விகள் எழுந்தாலும், அடுத்த ஓர் ஆண்டில் AI மிகவும் சிக்கலான பணிகளைச் செய்து முடிக்கும் வளர்ச்சியைக் காண்பீர்கள். இந்த AI பயனர்களின் சார்பாக சுயாதீனமாக வேலை செய்யும்.

AI அசாதாரண நன்மைகள், புதிய வாய்ப்புகளை உருவாக்கும் அதே வேளையில், சமூக இடையூறுகளையும் கொண்டு வரும். சில வேலைகள் மாறும், பல வேலைகள் மறைந்துவிடும். எனவே, இந்த மாற்றத்தை நிர்வகிப்பது குறித்து சமூகத்திற்கு நேர்மையான உரையாடல் தேவை.

இந்த கவலைகளுக்கு குரல் கொடுப்பதும் அவற்றை விவாதிப்பதும் முக்கியம். எனவே, இளைஞர்களே மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். AI கற்றுக்கொள்பவர்களும், அதை மாற்றியமைப்பவர்களும் சிறப்பாக செயல்படுவார்கள். AI கருவிகள் கற்பித்தல் மற்றும் மருத்துவம் போன்ற தொழில்களை மேம்படுத்தும் என நம்புகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

``20 வயதில் குழந்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்" - ஶ்ரீதர் வேம்பு பேச்சும், கிளம்பிய விவாதங்களும்!

இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும் சிக்கலுக்குரியதாக மாறி வரும் நிலையில், ஜோஹோ நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு தன் எக்ஸ் பக்கத்தில் 20 வயதில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்... மேலும் பார்க்க

Sachin Tendulkar: ``பாபாவின் ஆசீர்வாதத்தால் மட்டுமே சாத்தியமானது" - புட்டபர்த்தியில் சச்சின் உரை

ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் நேற்று சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி, நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், சச்சின் டெண்டுல்கர், மத்திய அமைச்சர்கள் ... மேலும் பார்க்க

Veeraswamy: லண்டனில் 100 ஆண்டுகளாக இயங்கும் வீராசாமி உணவகம் - அகற்றக்கோரும் நிறுவனம் - காரணம் என்ன?

லண்டனில் உள்ள மிகப் பழமையான உணவகங்களில் ஒன்று வீராசாமி உணவகம். ஏப்ரல் 1926 முதல் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக மிச்செலின்-ஸ்டார் உணவகமாக செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் கிரவுன் எஸ்டேட் (Crown Estate) எனு... மேலும் பார்க்க

"THAR கார் வைத்திருப்பவர்கள் பித்துப்பிடித்தவர்கள்"- ஹரியானா DGP-யின் கருத்து வைரல்

ஹரியானா மாநில காவல்துறை தலைமை இயக்குநர் ஓம் பிரகாஷ் சிங், மகிந்திராவின் தார் (THAR) காரை வைத்திருப்பவர்கள் எல்லாம் பித்துப்பிடித்தவர்கள் வெறிபிடித்தவர்களாக (Crazy) இருப்பார்கள் எனக் கூறியுள்ளது சலசலப்... மேலும் பார்க்க

175 மில்லியன் டாலர்களுக்கு அதிபதி; இருந்தும் ஊபர் ஓட்டுவது ஏன்? - நெகிழ வைக்கும் காரணம்!

பிஜி நாட்டில் தொழில்முனைவோர் ஒருவர் ஊபர் ஓட்டுநருடன் நடத்திய உரையாடல் வைரலாகியிருக்கிறது. நவ் ஷா என்ற தொழில்முனைவோர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில், ஊபர் வாகனத்தை ஓட்டும் வயதான ஓட்டுநர், ஆண்டு... மேலும் பார்க்க

`வேணாம் நிறுத்துங்க!' - பெண்ணிடம் கெஞ்சிய பயணிகள்; வைரலான வீடியோ

ரயில் பயணத்தின்போது பெண் ஒருவர் கண்ணாடியை உடைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தூர் - டெல்லி ரயிலின் ஏசி இருக்கையில் இருந்த அந்த பெண், தனது பணப்பை (பர்ஸ்) காணாமல் போய்விட்டதாகவும் காவல்துற... மேலும் பார்க்க