மகாராஷ்டிரா: 180 மைனர் பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து ஆன்லைன் வ...
CSK vs KKR: "அங்குதான் நாங்கள் பின்னடைவைச் சந்தித்தோம்" - தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் ரஹானே
ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.14) ஆட்டத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதின.
இதில் கொல்கத்தாவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது சென்னை அணி.
போட்டிக்குப் பிறகு தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரஹானே, "பேட்டிங்கில் எங்களுக்குச் சரியான வேகம் கிடைக்கவில்லை.
பந்துவீச்சைப் பொறுத்தவரை நாங்கள் சிறப்பாகத்தான் செயல்பட்டோம்.

சிஎஸ்கே அணி பவர்பிளே ஓவர்களில் 70 ரன்களுக்கு மேல் குவித்த போதிலும், அவர்களை 192 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது எங்கள் பந்துவீச்சாளர்களின் சிறந்த உழைப்பு.
ஆனால் பேட்டிங்கில் பவர்பிளே ஓவர்களில் நாங்கள் வெறும் 36 அல்லது 37 ரன்கள் மட்டுமே எடுத்தோம். அங்குதான் நாங்கள் பின்னடைவைச் சந்தித்தோம்.
இந்தப் போட்டியில் அதுதான் மிகவும் முக்கியமானது. மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு ரன் குவிப்பது சவாலாக இருந்தது.
ஒரு பேட்டர் ஆட்டத்தின் இறுதிவரை நின்று விளையாடி இருந்தால் வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும்.
தொடர்ந்து போட்டிகளில் தோற்பது கடினமாக இருக்கிறது. ஆனால் ஒரு அணியாக நாங்கள் பாசிடிவ்வாக இருப்பது அவசியம்.

இனி வரும் போட்டிகளில் அணியின் காம்பினேஷன் குறித்து ஆலோசித்து மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
முடிவுகள் நமக்கு சாதகமாக வராதபோது மாற்றங்கள் குறித்து சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை. தோல்வியில் இருந்து மீண்டு வர எங்களை நாங்களே நம்ப வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.



















