செய்திகள் :

Doctor Vikatan: மூக்கில் வளர்ந்துள்ள சதை... ஆபரேஷன் இல்லாமல் கரைக்க முடியுமா?

post image

Doctor Vikatan: எனக்கு கடந்த சில வருடங்களாக மூக்கில் அரிப்பு, தண்ணீர் வடிவது போன்ற பிரச்னைகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் அலர்ஜி என விட்டுவிட்டேன். பிறகு மருத்துவரைச் சந்தித்துக் கேட்டபோது என் மூக்கில் சதை வளர்ந்திருக்கிறது, தேவைப்பட்டால் ஆபரேஷன் செய்ய வேண்டியிருக்கும்  என்கிறார்கள். ஆபரேஷன் செய்யாமல் சொட்டு மருந்து மூலமே இதைக் கரைக்க முடியுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவரும், ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான ஆர்.பாலாஜி.

காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவரும், ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான ஆர்.பாலாஜி

மூக்கில் தசை வளர்ச்சி என்று கேள்விப்பட்டாலே பலரும் பயந்துவிடுகிறார்கள். உண்மையில், மூக்கிற்குள் காணப்படும் எல்லாத் திசுக்களும் தசை வளர்ச்சி கிடையாது. இதை ஒரு மருத்துவரால் மட்டுமே சரியாகக் கண்டறிய முடியும்.

எல்லோரின் மூக்கிலும் இரண்டு பக்கங்களிலும் 'இன்ஃபீரியர் டர்பினேட்' (Inferior turbinate) என்ற  இயல்பான தசை அமைப்பு இருக்கும். அதையே நிறைய பேர் தசை வளர்ச்சி என்று தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். இந்த இன்ஃபீரியர் டர்பினேட் தட்பவெப்ப நிலைக்கு (Weather) தகுந்தாற்போல் தன் அளவை மாற்றிக்கொண்டே இருக்கும். குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையில் இது பெரிதாகும். வெப்பம் மற்றும் ஈரப்பதம்  அதிகரிக்கும்போது இது சுருங்கிவிடும்.

மூக்கில் பல்வேறு வகையான பாலிப்கள்   (Polyps)  ஏற்படுகின்றன. பாலிப் என்பது உடலின் உள் உறுப்புகளில் உள்ள சவ்வுப் படலத்தில் (Mucous membrane) வளரக்கூடிய  சிறிய, அசாதாரணமான திசு வளர்ச்சி (Tissue growth) ஆகும்.  அவற்றுள் முக்கியமான இரண்டு வகைகள் உண்டு.

காலையில் எழுந்தவுடனேயே தொடர்ந்து தும்மல் போடுவது, மூக்கில் இருந்து தண்ணீர் போல் கொட்டுவது மற்றும் மூக்கில் அரிப்பு ஏற்படுவது போன்றவை இதன் அறிகுறிகள்.

முதல் வகை எத்மாய்டு பாலிப்ஸ் (Ethmoid Polyps). இதற்கு முக்கியக் காரணம் அலர்ஜி (Allergy) ஆகும். இது மூக்கின் இரண்டு பக்கங்களிலும் ஏற்படும். காலையில் எழுந்தவுடனேயே தொடர்ந்து தும்மல் போடுவது, மூக்கில் இருந்து தண்ணீர் போல் கொட்டுவது மற்றும் மூக்கில் அரிப்பு ஏற்படுவது போன்றவை இதன் அறிகுறிகள். இந்தப் பிரச்னை உள்ள சிலருக்கு வாசனை அறியும் திறன் முற்றிலும் இல்லாமல் போகலாம் (Loss of smell) அல்லது குறையலாம் (Reduced sense of smell). சிலருக்குப் பெட்ரோல், காஸ் (Gas) மற்றும் சில அமிலங்கள் (Acids) போன்ற மிகவும் வீரியமிக்க வாசனைகளை (Powerful odors) மட்டுமே உணர முடியும்.

இன்னொரு வகை ஆன்ட்ரோகோயனல் பாலிப் (Antrochoanal Polyp).  இது பொதுவாகக் குழந்தைகளுக்கு வரக்கூடியது. சிறு வயதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, பெரிய அளவில் மாறும்.  இது மூக்கின் ஒரு பக்கத்தில் மட்டுமே ஏற்படும்.

மூக்கில் பாலிப்ஸ் இருப்பதைக் கண்டறிய இரு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. நேசல் எண்டோஸ்கோபி (Nasal Endoscopy) முறையில் மூக்கிற்குள் சிறிய கேமரா செலுத்திப் பார்க்கப்படும். சிடி ஸ்கேன் (CT Scan) முறையில் பாலிப்ஸின் பரவல் மற்றும் தீவிரத்தைக் துல்லியமாகக் கணிக்கலாம்.

எந்தவகை பாலிப்பாக இருந்தாலும், அதற்கான முதல்கட்ட சிகிச்சை என்பது அலர்ஜியைக் குணப்படுத்துவதற்கான மருத்துவ மேலாண்மைதான். பாலிப்ஸ் ஆரம்ப நிலையில் இருந்தால், அதற்குக் காரணமான அலர்ஜிக்கு  முதலில் சிகிச்சை அளிக்க வேண்டும்.


ஸ்டீராய்டு ஸ்பிரேக்கள் (Nasal Steroid Sprays) ஆரம்ப நிலை பாலிப்ஸை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வரும்.

பாலிப்ஸ் மிகவும் தீவிரமாகி, சிலருக்கு மூக்கின் நுனி வரை கூட வளர்ந்துவிடும். இதுபோன்ற தீவிரமான நிலையில் உள்ளவர்களுக்கு வாய் வழியாக உட்கொள்ளும் ஸ்டீராய்டு மாத்திரைகள் தேவைப்படலாம். இதை நீண்ட காலத்திற்கு  எடுத்துக்கொள்ள முடியாது.  சில நாள்கள் மட்டுமே கொடுத்துவிட்டு பிறகு நிறுத்திவிட வேண்டும்.

வைட்டமின் மாத்திரை
தீவிரமான நிலையில் உள்ளவர்களுக்கு வாய் வழியாக உட்கொள்ளும் ஸ்டீராய்டு மாத்திரைகள் தேவைப்படலாம்.

மேற்குறிப்பிட்ட எந்த மருத்துவ சிகிச்சையாலும் (மாத்திரைகள்/ஸ்பிரேக்கள்) பாலிப்ஸ் சரியாகாத பட்சத்தில் மற்றும் நோயாளிகளுக்கு வாசனை அறியும் திறன் முற்றிலும் குறையத் தொடங்கினால், அறுவை சிகிச்சை செய்வது தான் சிறந்த வழி. அறுவை சிகிச்சை மூலம் பாலிப்ஸை முழுமையாக அகற்றிவிட்டால், நோயாளிகளுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

அறுவை சிகிச்சை செய்த பிறகும், மருத்துவர் கூறும் அறிவுரைகளை நோயாளிகள் சரியாகப் பின்பற்றவில்லை என்றாலோ அல்லது கவனக்குறைவாக இருந்தாலோ,  பாலிப்ஸ் மீண்டும் வருவதற்கு  அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய முறையான பராமரிப்பு (Proper Post-operative Care) மிக மிக அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டாலும் குணமாகாத மலச்சிக்கல்... தீர்வு என்ன?

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது.காலையில் எழுந்தவுடன் மலம் கழிக்காவிட்டால் அன்று முழுவதும் வயிறு உப்புசமாக இருக்கிறது. நார்ச்சத்துள்ள உணவுகள் அதிகம் சாப்பிடுகிறேன்... மேலும் பார்க்க

Doctor Vikatan: பைக்கிலிருந்து விழுந்ததால் கால் மூட்டு கிழிசல்; பிசியோதெரபி மட்டும் போதுமா?

Doctor Vikatan: எனக்கு 38 வயதாகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூன்று வாரங்களுக்கு முன்பு பைக்கிலிருந்து இறங்கும்போது என் பேன்ட் கியரில் மாட்டிக்கொண்டது. இதனால் நான் கீழே விழுந்து, முட்டியில் கடுமையா... மேலும் பார்க்க

Doctor Vikatan: 35 வயதில் மறதி... டிமென்ஷியா பாதிப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்குமா?

Doctor Vikatan:என் வயது 35. சமீபகாலமாக மிகச் சிறிய விஷயங்களைக்கூட மறந்துவிடுகிறேன். இது டிமென்ஷியா எனப்படும் ஆரம்பகால ஞாபகமறதி நோயின் அறிகுறியா... இதற்கு சிகிச்சை எடுக்க வேண்டுமா?பதில் சொல்கிறார், சென... மேலும் பார்க்க

Doctor Vikatan: அடிக்கடி படுத்தும் கால் ஆணி பாதிப்பு... நிரந்தர தீர்வே கிடையாதா?

Doctor Vikatan: எனக்கு பாதங்களில் அடிக்கடி கால் ஆணி பிரச்னை வருகிறது. கால் ஆணிக்கான பிளாஸ்டர் ஒட்டினாலும் மீண்டும் மீண்டும் வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வே கிடையாதா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்... மேலும் பார்க்க

Covid-19 : `தமிழ்நாட்டில் கொரோனா பரவல்... பாதிப்பா?' - சுகாதாரத்துறை விளக்கம்!

கொரோனாவால் சமீபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை கூறுவதாவது..."சமீபத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஆந்திர மாநில... மேலும் பார்க்க

Doctor Vikatan: பிபி (BP) நார்மல்... ஆனாலும், அடிக்கடி தலைச்சுற்றல்... காரணம் என்ன?

Doctor Vikatan:எனக்கு அடிக்கடி தலைச்சுற்றல் (Giddiness) ஏற்படுகிறது, ஆனால், ரத்த அழுத்தம் (BP) சரியாகத்தான் இருக்கிறது. இதற்கு வேறு என்ன காரணமாக இருக்கும்?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நரம்பியல... மேலும் பார்க்க