செய்திகள் :

Doctor Vikatan: மூளைச்சாவு என்பது என்ன? மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளைத் தானம் செய்யலாமா?

post image

Doctor Vikatan: விபத்தில் மூளைச் சாவு அடைந்தவர் குறித்து அடிக்கடி கேள்விப்படுகிறோம். அதென்ன மூளைச்சாவு.... மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகள் தானம் செய்யப்படுவதாகச் சொல்லப்படுவது என்ன?

- மல்லிகா அன்பழகன். சென்னை

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.

நரம்பியல் சிகிச்சை மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.
நரம்பியல் சிகிச்சை மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.

மூளைச் சாவு என்பது, வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ஒருவரது மூளை மீளமுடியாத அளவிற்குப் பாதிப்படைந்துவிட்டதை உறுதிப்படுத்தும் ஒரு நிலை.

இன்னும் எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால், மீள முடியாதபடி மூளை செயலிழந்து போன நிலையே மூளைச் சாவு.

மூளைச் சாவு அடைந்த ஒருவர் சுயநினைவற்ற நிலையில் இருப்பார். சுவாசம் மற்றும் ரத்த ஓட்டம் போன்ற உயிர்நாடிச் செயல்பாடுகளைப் பராமரிக்க அவருக்கு முழுமையான மருத்துவக் கருவிகளின் ஆதரவு தேவைப்படும்.

இந்தச் சூழலில், செயற்கை ஆதரவு நடவடிக்கைகள் மூலம் ரத்த அழுத்தமும் சுவாசமும் பராமரிக்கப்படுவதால், இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற மற்ற உறுப்புகளுக்கான ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதன் காரணமாக இதயம் தொடர்ந்து துடிக்கும், சிறுநீரகங்கள் சிறுநீரை வெளியேற்றும்.

அவரின் மற்ற உறுப்புகள் எடுக்கப்பட்டு, தேவை இருக்கும் நோயாளிகளுக்கு (உதாரணத்துக்கு, சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் உள்ள நோயாளிகளுக்கு) பொருத்தப்படுகின்றன.

அவரது மூளை, மீளமுடியாத அளவிற்குச் சேதமடைந்துவிட்டதாக அறிவிக்கப்படுவதால் (அதாவது அந்த நபர் மீண்டும் சுயநினைவு பெறவோ அல்லது மருத்துவ ஆதரவு இன்றி உயிர்வாழவோ வாய்ப்பில்லை என்பதால்), அவரின் மற்ற உறுப்புகள் எடுக்கப்பட்டு, தேவை இருக்கும் நோயாளிகளுக்கு (உதாரணத்துக்கு, சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் உள்ள நோயாளிகளுக்கு) பொருத்தப்படுகின்றன.

உயிர் பிரிந்தபிறகு, மண்ணில் புதைக்கப்படும் அல்லது எரிக்கப்படும் உடல் உறுப்புகள், இப்படி ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேலான நபர்களுக்குப் புதிய வாழ்வை வழங்கப் பயன்படுத்தப்படுவது மிக நல்ல விஷயம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

வேலைப்பளுவும் ஸ்ட்ரெஸ்ஸும் அதிகமானதால் கேன்சர்... உண்மைச் சம்பவமும் மருத்துவ எச்சரிக்கையும்!

பெங்களூரைச் சேர்ந்த 29 வயது இளம்பெண் ஒருவருக்கு நான்காம் நிலை புற்றுநோய் (Stage 4 Cancer) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆரோக்கியமான உணவுமுறை, காலை மற்றும் மாலை நேர நடைப்பயிற்சி என ஹெல்த்தி லைஃப்ஸ்டைலைப் பின... மேலும் பார்க்க

Doctor Vikatan: இடது காலில் வலி மற்றும் பலவீனம்... இதய நோய் இருக்கலாம் என்பது உண்மையா?

Doctor Vikatan:எனக்கு கடந்த சில வருடங்களாக இடது காலில் பலவீனத்தை உணர்கிறேன். நடக்கும்போது, நிற்கும்போதெல்லாம் இடது காலில் பலமே இல்லாததுபோல இருக்கிறது. இடது காலில் பிரச்னை என்றால் அது இதயத்துடன் தொடர்ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஏற்கெனவே பைபாஸ் சர்ஜரி செய்தவர்களுக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டுமா?

Doctor Vikatan: என் உறவினர் ஒருவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் இப்போது நலமாக இருக்கிறார். ஆனாலும் அவரது இதயம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறதா என்பதைத் தெர... மேலும் பார்க்க

Doctor Vikatan: செல்லப் பிராணிகள் வளர்த்தால் அலர்ஜி வருமா... நோய் எதிர்ப்பாற்றல் கூடுமா?

Doctor Vikatan: நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களிடம் இருவித கருத்துகளைக் கேட்கிறோம். சிலர், அவற்றால் ஆஸ்துமா, வீஸிங் உள்ளிட்ட அலர்ஜி வருவதாகச் சொல்கிறார்கள். வேறு சிலரோ, காலப்போக்கில் அ... மேலும் பார்க்க

Doctor Vikatan: குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதில் மன அழுத்தம்; பெண்ணின் வைரல் வீடியோ, தீர்வு என்ன?

Doctor Vikatan: சமீபத்தில் ஒரு பெண்ணின் வீடியோ வைரலானது. அதில் அந்தப் பெண் தன்குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளமுடியாத மன அழுத்தத்துக்கு உள்ளானது பற்றிப் பேசியிருந்தார். தொடர்ந்து சில வருடங்களாக அந்த வேலைய... மேலும் பார்க்க