செய்திகள் :

ECR: அரசுப் பேருந்து - வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி; தீவிர விசாரணையில் காவல்துறை

post image

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் இருந்து இன்று (01.12.2025) அதிகாலையில், வேலைக்கு 20 பேரை ஏற்றிக்கொண்டு தனியாருக்குச் சொந்தமான வேன் ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே குன்னத்தூர் கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்தது.

அச்சமயத்தில் புதுச்சேரி நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் பேருந்தும், வேனும் எதிர்பாராத விதமாக, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து இந்த விபத்து குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

சாலை விபத்து
சாலை விபத்து

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரு பெண்கள் உயிரிழந்தனர். அதே சமயம் விபத்தில் சிக்கிப் பலத்த காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம்  மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பூஞ்சேரி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்திற்கான காரணம் என்பது குறித்து காவல்துறையின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனக் கூறப்படுகிறது. கல்பாக்கம் அருகே அரசுப் பேருந்தும் வேனும் மோதி விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

கோவா தீ விபத்து: `எப்படியும் போனை எடுத்து பேசுவார்னு நினச்சேன்’ - கணவன், 3 சகோதரிகளை பறிகொடுத்த பெண்

கோவா சுற்றுலாவுக்கு மிகவும் பிரபலமான இடம். அதுவும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் உலகம் முழுவதும் இருந்து கோவாவுக்கு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் வருவது வழக்கம். கோவாவில் உள்ள இரவு நேர மதுபான விடுதிக... மேலும் பார்க்க

Goa: திடீரென பற்றிய தீ; 25 பேர் பலியான சோகம், பதற வைக்கும் வீடியோ காட்சிகள் - என்ன நடந்தது?

கோவாவின் ஆர்போராவில் உள்ள 'பிர்ச் பை ரோமியோ லேனில்' நேற்றிரவு பாலிவுட் பேங்கர் நைட் பார்ட்டி நடந்தது. அதிக சத்தமுள்ள இசைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் நடனமாடிக் கொண்டாடினர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்... மேலும் பார்க்க

கோவா: நைட் கிளப்பில் தீ‌ விபத்து; 25 பேர் உயிரிழப்பு - தீப்‌பற்றியது எப்படி?

நேற்று நள்ளிரவு, கோவா ஆர்போராவில் உள்ள ரோமியோ லேன் நைட் கிளப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் 22 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சிலர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.என்ன ந... மேலும் பார்க்க

உ.பி: தேர்வு எழுதிக்கொண்டிருந்த 12 வயது மாணவனுக்கு மாரடைப்பு: சுருண்டு விழுந்து உயிரிழந்த பரிதாபம்!

இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிக அளவில் நடந்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தவர் அமய் சிங்(12). இம்மாணவன் ... மேலும் பார்க்க

கீழக்கரையில் கொடூர விபத்து: நகர்மன்ற தலைவர் கார் மோதி ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று அதிகாலை ஐயப்பப் பக்தர்கள் பயணம் செய்த கார்மீது கீழக்கரை நகர்மன்றத் தலைவரின் சொகுசு கார் அதிவேகத்தில் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இருவரி... மேலும் பார்க்க

MH370: மாயமான மர்ம விமானம்; 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேடும் மலேசியா!

உலக விமான போக்குவரத்து வரலாற்றில் மிகவும் புதிரான கதை மலேசியா ஏலைன்ஸின் MH370 விமானத்தினுடையது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமாக காணாமல் போன இந்த விமானத்தை தேடும் பணியை இந்த மாத இறுதியில் மீண்டும் தொடங்... மேலும் பார்க்க