செய்திகள் :

ECR: அரசுப் பேருந்து - வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி; தீவிர விசாரணையில் காவல்துறை

post image

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் இருந்து இன்று (01.12.2025) அதிகாலையில், வேலைக்கு 20 பேரை ஏற்றிக்கொண்டு தனியாருக்குச் சொந்தமான வேன் ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே குன்னத்தூர் கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்தது.

அச்சமயத்தில் புதுச்சேரி நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் பேருந்தும், வேனும் எதிர்பாராத விதமாக, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து இந்த விபத்து குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

சாலை விபத்து
சாலை விபத்து

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரு பெண்கள் உயிரிழந்தனர். அதே சமயம் விபத்தில் சிக்கிப் பலத்த காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம்  மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பூஞ்சேரி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்திற்கான காரணம் என்பது குறித்து காவல்துறையின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனக் கூறப்படுகிறது. கல்பாக்கம் அருகே அரசுப் பேருந்தும் வேனும் மோதி விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

Accident: `திருப்பத்தூர் பேருந்து விபத்துக்கான காரணம் இதுதான்' - நடத்துனர் கொடுத்த தகவல்

காரைக்குடி–திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டி அருகே காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப் பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் ம... மேலும் பார்க்க

திருப்பத்தூர் பேருந்து விபத்து: 11 பேர் பலி; 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

காரைக்குடி - திருப்பத்தூர் சாலையில் பிள்ளையார்பட்டி அருகே காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப்பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் ம... மேலும் பார்க்க

கும்பகோணம்: தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்து இளம் பெண் பலி; பெற்றோர் உட்பட மூவர் காயம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆலமன்குறிச்சி உடையார் தெருவைச் சேர்ந்தவர் முத்துவேல்(56). கூலி தொழிலாளர். இவரது மனைவி சீதா (45). இவர்களின் மகள்கள் கனிமொழி (21) பி.பி.ஏ., பட்டதாரி. ரேணுகா (2... மேலும் பார்க்க

கூடலூர்: 4 மாத தேடல்; 40-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி; வனத்துறை கூண்டுக்குள் சிக்கிய ஆண் புலி

உலக அளவில் வங்கப் புலிகள் அதிக எண்ணிக்கையில் வாழும் வனப்பகுதிகளில் நீலகிரி மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. காடு போதாமை, நீர்நிலை ஆக்கிரமிப்பு, தனியார் பெருந்தோட்ட நிறுவனங்களின் இடையூறு உள்ளிட்ட பல்... மேலும் பார்க்க

முதுமலை: 20 அடியில் கூண்டு, 24 மணிநேரமும் சுழலும் கேமரா - புலி தாக்கிய‌ சம்பவத்தால் வனத்துறை உஷார்

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளி மண்டலமான மாவனல்லா பகுதியில் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பழங்குடி பெண் நாகியம்மாளை கடந்த 24 - ம் தேதி மதியம் புலி தாக்கியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த... மேலும் பார்க்க

தர்மபுரி: பைக் மீது வாகனம் மோதி 2 இளைஞர்கள் பலி; ஆணவப் படுகொலையா? - போலீசார் விசாரணை

தர்மபுரி மாவட்டம் சொன்னம்பட்டியைச் சேர்ந்த சுனீல்குமார், கெலமங்கலம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் முருகன், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார... மேலும் பார்க்க