செய்திகள் :

India - Pakistan : `பாகிஸ்தானின் சீக்கிய தலம் மீது தாக்குதலா?’ - மறுத்த இந்திய அரசு | Fact check

post image

பாகிஸ்தானில் உள்ள சீக்கிய புனித தலமான நான்கனா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகள், 26 பேரை சுட்டுக்கொன்ற பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக "ஆப்ரேஷன் சிந்தூரி” என்னும் பெயரில் மே 7ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து மே 8 மற்றும் மே 9 தேதியின் இடைப்பட்ட இரவில் திடீரென பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டபோது இந்திய ராணுவம் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்தன. நேற்று இரவு பாகிஸ்தானின் ஆயுதப்படைகள் எல்லை முழுவதும் டிரோன்கள் பயன்படுத்தி பல தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதலையும் இந்திய ராணுவம் முறியடிக்கப்பட்டதாக கூறியது.

இரு நாடுகள் இடையே பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் இந்தியாவில் விமான போக்குவரத்து கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இயங்கி வருகிறது. மே 15 ஆம் தேதி வரை 32 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள நான்கனா சாஹிப் குருத்வாரா என்ற சீக்கிய புனித தலத்தை மீது இந்தியா டிரோன் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

சமூக வலைதளங்களை பகிரப்பட்ட ஒரு காணொளியில் நான்கனா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல் ”முற்றிலும் போலியானது” என்று PIB உண்மை சரிபார்ப்பு பிரிவு தனது அதிகாரப்பூர்வ வலைப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வகுப்புவாத வெறுப்பை உருவாக்கும் நோக்கில் இது போன்ற தகவல்கள் பரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் சைபர் தாக்குதலால் இந்தியாவின் மின் கட்டமைப்பு செயலிழந்துவிட்டதாகவும் மும்பை டெல்லி விமான பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் இந்திய அரசாங்கம் மறுத்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் போலியானவை என்று அரசாங்கம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா: 3 நாள்களாக இடி, புயலுடன் கனமழை; 24 பேர் உயிரிழப்பு

பருவமழை வழக்கமாக ஜூன் மாத தொடக்கத்தில் தான் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் மே மாதமே மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 3 நாள்களாக இடி, புயலுடன் கூடிய கனமழை பெ... மேலும் பார்க்க

`கரப்பான் பூச்சி செல்லப்பிராணியா?'- தலையில் இருந்த பூச்சியை அகற்றிய பெண்; கொந்தளித்த சுற்றுலா பயணி!

சுற்றுலா பயணி ஒருவரின் தலையில் இருந்த கரப்பான் பூச்சியை அகற்றி உதவ முயன்ற பெண்ணிடம் அந்த சுற்றுலா பயணி ஆக்ரோஷப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தாய்லாந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்ப... மேலும் பார்க்க

சென்னை: வண்ணக் கோலம் கொள்ளும் வள்ளுவர் கோட்டம்! புனரமைப்புப் பணிகள் தீவிரம் | Photo Album

கருணாநிதி 100: `பராசக்தி’ வசனம் முதல் வள்ளுவர் புகழ் வரை... கருணாநிதியும் தமிழும்!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BI... மேலும் பார்க்க

"என்னை இடமாற்றம் செய்தவர்களைக் கடவுள் மன்னிக்கமாட்டார்" - வேதனையைக் கொட்டிய ஹைகோர்ட் நீதிபதி

மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் இந்தூர் கிளையில் நீதிபதியாக இருப்பவர் டி.வி ரமணா. இவர் அடுத்த மாதம் 2ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.இதையடுத்து அவருக்கு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்க... மேலும் பார்க்க

Booker Prize: சர்வதேச புக்கர் பரிசை வென்று சாதனை படைத்த கன்னட எழுத்தாளர் - யார் இந்த பானு முஷ்டாக்?

எழுத்தாளர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர் என பன்முகத்தன்மை கொண்டவர் பானு முஷ்டாக். இவர் எழுதிய 'ஹசீன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்' என்ற புத்தகத்தின் மொழிப்பெயர்ப்பு பதிப்பான 'ஹார்ட் லேம்ப்' என்ற சிறுகதை தொகுப்புகள... மேலும் பார்க்க

`தேர்தலில் போட்டியிட வாங்கிய ரூ.20 லட்சம் கடனுக்காக..' - பஞ்சாயத்தை குத்தகைக்கு விட ஒப்பந்தம்

மத்திய பிரதேச மாநிலம் குனா மாவட்டத்தில் உள்ள கரோட் என்ற கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் லட்சுமி பாய். இவர் கடந்த 2022-ம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலில் போட... மேலும் பார்க்க