செய்திகள் :

India - Pakistan : `பாகிஸ்தானின் சீக்கிய தலம் மீது தாக்குதலா?’ - மறுத்த இந்திய அரசு | Fact check

post image

பாகிஸ்தானில் உள்ள சீக்கிய புனித தலமான நான்கனா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகள், 26 பேரை சுட்டுக்கொன்ற பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக "ஆப்ரேஷன் சிந்தூரி” என்னும் பெயரில் மே 7ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து மே 8 மற்றும் மே 9 தேதியின் இடைப்பட்ட இரவில் திடீரென பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டபோது இந்திய ராணுவம் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்தன. நேற்று இரவு பாகிஸ்தானின் ஆயுதப்படைகள் எல்லை முழுவதும் டிரோன்கள் பயன்படுத்தி பல தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதலையும் இந்திய ராணுவம் முறியடிக்கப்பட்டதாக கூறியது.

இரு நாடுகள் இடையே பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் இந்தியாவில் விமான போக்குவரத்து கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இயங்கி வருகிறது. மே 15 ஆம் தேதி வரை 32 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள நான்கனா சாஹிப் குருத்வாரா என்ற சீக்கிய புனித தலத்தை மீது இந்தியா டிரோன் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

சமூக வலைதளங்களை பகிரப்பட்ட ஒரு காணொளியில் நான்கனா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல் ”முற்றிலும் போலியானது” என்று PIB உண்மை சரிபார்ப்பு பிரிவு தனது அதிகாரப்பூர்வ வலைப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வகுப்புவாத வெறுப்பை உருவாக்கும் நோக்கில் இது போன்ற தகவல்கள் பரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் சைபர் தாக்குதலால் இந்தியாவின் மின் கட்டமைப்பு செயலிழந்துவிட்டதாகவும் மும்பை டெல்லி விமான பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் இந்திய அரசாங்கம் மறுத்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் போலியானவை என்று அரசாங்கம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Miyazaki Mango: வைரத்திற்கு நிகரான விலையில் விற்கப்படும் மியாசாகி மாம்பழங்கள் - அப்படி என்ன ஸ்பெஷல்?

ஜப்பான் நாட்டில், மியாசாகி மாம்பழங்கள் பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.நாடு முழுவதும் கோடை காலத்தில் மாம்பழங்களுக்கான சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஜப்பானில் உள்ள மியாசாகி மாம்பழம் மிகவும்... மேலும் பார்க்க

Yalda Hakim: பாகிஸ்தான் அமைச்சர்களை நேரலையில் அலறவிட்ட நிருபர் - யார் இந்த யால்டா ஹக்கீம்?

ஆப்கானிஸ்தானை சேர்ந்த யால்டா ஹக்கீம், மூத்த பாகிஸ்தான் அதிகாரிகளுடனான தனது அதிரடியான, தயக்கமற்ற நேர்காணல்களுக்காக பரவலான கவனத்தை ஈர்த்துள்ளார். ‘ஸ்கை நியூஸ்’ நிறுவனத்தில் பணிபுரியும் யால்டா ஹக்கீம் சம... மேலும் பார்க்க

`சீனர்களிடம் எங்களை விற்றுவிட்டனர்’ - லாவோஸ் சைபர் கிரைம் கும்பலிடமிருந்து தப்பியவர்கள் கண்ணீர்

இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஏராளமான இணையத்தள குற்றங்கள் நடக்கிறது. இந்த இணையத்தள குற்றங்களை நடத்துபவர்கள் ஒரு நாட்டில் இருந்து கொண்டு மற்றொரு நாட்டில் செயல்படுகின்றனர். இதனால் அவர்களை கைது செய்வது எ... மேலும் பார்க்க

Murali Naik: "காலையில்தான் எங்களிடம் பேசினான்" - பாகிஸ்தான் தாக்குதலில் மகனை இழந்த பெற்றோர் உருக்கம்

இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்து வரும் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த முரளி நாயக்(23) என்ற வீரர் வீர மரணம் அடைந்தார்.முரளி நாயக் பெற்றோருக்குச் சொந்த ஊர் ஆந்திரா மாநிலத்தில் உள்ளது. அவரது தந்தை ஸ்ரீர... மேலும் பார்க்க

கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: "ஒரு பெண் முடியாது எனச் சொன்னால் முடியாதுதான்" -மும்பை நீதிமன்றம்

மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாஷிம் கான், ஷேக் கதிர் மற்றும் ஒரு மைனர் சேர்ந்து, பெண் ஒருவரைக் கடத்தி சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.2014ம் ஆண்டு நடந்த இச்சம்பவம்... மேலும் பார்க்க

ஒட்டிப் பிறந்த சகோதரிகளைக் கைவிட்ட பெற்றோர்; 13 ஆண்டுகளாக வளர்க்கும் மருத்துவமனை; நெகிழ்ச்சி பின்னணி

மும்பையில் உள்ள வாடியா மருத்துவமனை குழந்தைகளுக்கானது. இம்மருத்துவமனையில் பன்வெல் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு உடம்பின் கீழ்ப் பகுதி ஒட்டிய நிலையில் இரட்டை குழந்தைகள் பிறந்தன.அக்குழந்தைகளைத் தனித்தனியா... மேலும் பார்க்க