செய்திகள் :

Karnataka: காது குத்தும் முன் மயக்க ஊசி; 6 மாத குழந்தை பரிதாப மரணம்! - உறவினர்கள் அதிர்ச்சி

post image

கர்நாடகா மாநிலம், சாமராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பொம்மலபுரா மருத்துவமனையில் காது குத்துவதற்கு முன் குழந்தைக்கு மயக்க மருந்து செலுத்தியதில் 6 மாத ஆண் குழந்தை மரணமடைந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஹங்கலா கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த்-சுபா தம்பதி 6 மாதங்களுக்கு முன் பிறந்த தங்களது ஆண் குழந்த்கைக்கு காது குத்துவதற்காக பொம்மலாபுரா ஆரம்ப சுகாதார மையத்துக்கு கூட்டிச் சென்றுள்ளனர்.

குழந்தையின் இரண்டு காது மடல்களிலும் மருத்துவர் அனஸ்தீசியா (Anesthesia) செலுத்திய பிறகு குழந்தை மயக்கமடைந்துள்ளது.

காது குத்தும்போது குழந்தைக்கு வலி தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்துள்ளனர். குழந்தை நீண்டநேரம் சுயநினைவை இழந்திருந்ததால் உடனடியாக குழந்தையை தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ANESTHESIA

சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்த நிலையில், ஊசி போட்ட மருத்துவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என குடும்பத்தினர் கோருகின்றனர். குழந்தையை இழந்த பெற்றோருக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தாலுகா சுகாதார அதிகாரி அலீம் பாஷா, "பணியிலிருந்த மருத்துவர் காது குத்தும்போது குழந்தைக்கு வலிக்கக் கூடாது என்பதற்காக அனஸ்தீசியா (மயக்க மருந்து) கொடுத்துள்ளார். குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டதால் குழந்தை மரணமடைந்துள்ளது." எனக் கூறியுள்ளார்.

மேலும், "குழந்தையின் இறப்புக்கான உண்மைக் காரணம் பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான் தெரியவரும். மருத்துவர் அலட்சியமாக இருந்தது கண்டறியப்பட்டால், உயர் அதிகாரிகளுக்கு ரிப்போர்ட் வழங்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்"என்றும் தெரிவித்துள்ளார்.

கோவை: திருமணம் கடந்த உறவு - மனைவியின் காதலனை கொன்ற கணவன்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல் (56). இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியுடன் திருப்பூர் மாவட்டம... மேலும் பார்க்க

சென்னை: நடுரோட்டில் சிதறிக் கிடந்த தோட்டாக்கள்; பாதுகாப்பு படை வீரரிடம் ஒப்படைப்பு..!

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம், மோதிலால் நகரைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர் நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சிக்னல் அருகே சென்றபோது அங்கு ஏ.கே.47 துப்பாக்கியின் உதிரிபாகம், 30 தோட்டாக்கள் கி... மேலும் பார்க்க

மைசூர் டு குருவாயூர், அரசுப் பேருந்தில் போதை பொருள் கடத்தல்... இளைஞர் சிக்கியது எப்படி?

எம்.டி.எம்.ஏ - என்ற பெயரில் அழைக்கப்படும் ஒருவகை போதைப்பொருளை கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு ரகசியமாக கடத்தும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் போர்வையில் பயணிக்கும் கடத்தல் கு... மேலும் பார்க்க

கோவை மருத்துவமனைக்குள் கத்தியுடன் நுழைந்த இளைஞர் - நூலிழையில் உயிர் தப்பிய செவிலியர்

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மருத்துவமனை வளாகத்திள் உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வருகிறார். அங்கு ஒரு இளைஞ... மேலும் பார்க்க

ஜகபர் அலி கொலை வழக்கு: குற்றவாளிகள் 5 பேரையும் 3 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க CBCID-க்கு அனுமதி!

சட்டவிரோத கனிமக் கொள்ளைக்கு எதிராக புகார் கொடுத்த புதுக்கோட்டை மாவட்டம், வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி கடந்த ஜனவரி 17-ம் தேதி அன்று குவாரி உரிமையாளர்களால் சதி திட்டம் தீட்டப்பட்... மேலும் பார்க்க

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்: இளைஞனை சுட்டுப்பிடித்த ராணிப்பேட்டை போலீஸ்!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிப்காட் காவல் நிலையத்தின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.நள்ளிரவு 12 மணியளவில், முகமூடி அணிந்து பைக்கில் வந்த அட... மேலும் பார்க்க