செய்திகள் :

Karnataka: காது குத்தும் முன் மயக்க ஊசி; 6 மாத குழந்தை பரிதாப மரணம்! - உறவினர்கள் அதிர்ச்சி

post image

கர்நாடகா மாநிலம், சாமராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பொம்மலபுரா மருத்துவமனையில் காது குத்துவதற்கு முன் குழந்தைக்கு மயக்க மருந்து செலுத்தியதில் 6 மாத ஆண் குழந்தை மரணமடைந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஹங்கலா கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த்-சுபா தம்பதி 6 மாதங்களுக்கு முன் பிறந்த தங்களது ஆண் குழந்த்கைக்கு காது குத்துவதற்காக பொம்மலாபுரா ஆரம்ப சுகாதார மையத்துக்கு கூட்டிச் சென்றுள்ளனர்.

குழந்தையின் இரண்டு காது மடல்களிலும் மருத்துவர் அனஸ்தீசியா (Anesthesia) செலுத்திய பிறகு குழந்தை மயக்கமடைந்துள்ளது.

காது குத்தும்போது குழந்தைக்கு வலி தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்துள்ளனர். குழந்தை நீண்டநேரம் சுயநினைவை இழந்திருந்ததால் உடனடியாக குழந்தையை தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ANESTHESIA

சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்த நிலையில், ஊசி போட்ட மருத்துவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என குடும்பத்தினர் கோருகின்றனர். குழந்தையை இழந்த பெற்றோருக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தாலுகா சுகாதார அதிகாரி அலீம் பாஷா, "பணியிலிருந்த மருத்துவர் காது குத்தும்போது குழந்தைக்கு வலிக்கக் கூடாது என்பதற்காக அனஸ்தீசியா (மயக்க மருந்து) கொடுத்துள்ளார். குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டதால் குழந்தை மரணமடைந்துள்ளது." எனக் கூறியுள்ளார்.

மேலும், "குழந்தையின் இறப்புக்கான உண்மைக் காரணம் பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான் தெரியவரும். மருத்துவர் அலட்சியமாக இருந்தது கண்டறியப்பட்டால், உயர் அதிகாரிகளுக்கு ரிப்போர்ட் வழங்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்"என்றும் தெரிவித்துள்ளார்.

Kerala: கேஷியரின் கழுத்தில் கத்தி வைத்து பெடரல் வங்கியில் கொள்ளை; கேரளாவை அதிர வைத்த தனி ஒருவன்

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சாலக்குடி பேட்டை பகுதியில் பெடரல் வங்கி கிளை உள்ளது. அங்கு நேற்று மதியம் 2 மணிக்கு பைக்கில் வந்த ஹெல்மட் அணிந்த நபர் வங்கிக்குள் நுழைந்தார். முகத்தை முழுமையாக மூடியி... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு... இடையூறாக இருந்த கணவருக்கு மீன் குழம்பில் விஷம்.. கொலையில் இருவர் கைது!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் கோபாலக்கண்ணன். இவருக்கும், விஜயா என்பவருக்கும் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனாலும் இவர்களுக்கு குழந்தை இல்லை. அதனால் இருவரும் மன வரு... மேலும் பார்க்க

புதுச்சேரி: பிரபல தாதா தெஸ்தான் மகன் உட்பட 3 பேர் வெட்டிப் படுகொலை! - பின்னணியை விவரிக்கும் போலீஸார்

புதுச்சேரியின் மையப் பகுதியில் இருக்கும் ரெயின்போ நகர், அடர்த்தியான குடியிருப்புப் பகுதி. அதில் 7-வது குறுக்குத் தெருவில் இருக்கும் பாழடைந்த ஒரு வீட்டில், மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக ... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு: தந்தையை எரித்துக்கொன்ற மகன் கைது - கடையநல்லூரில் பரபரப்பு!

மது போதையில் ஏற்பட்ட தகராறில் தந்தையை அடித்துக் கொலைசெய்து உடலை எரித்த மகனை போலீஸார் கைது செய்தனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது, நம்மிடம் பேசியவர்கள், "தென்காசி மாவட... மேலும் பார்க்க

தென்காசி: மனைவியைக் கொன்று சடலத்தோடு காரில் சுற்றிய கணவன்; விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தென்காசி அருகே எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீஸாரின் புலன் விசாரணையில் திருமணம் மீறிய உறவால் வந்த பிரச்னையால் அவர் எரித்துக் கொல்லப்பட்டது அம்பலமா... மேலும் பார்க்க

சென்னை: கண்டக்டருடன் தகராறு; அரசு பேருந்தைக் கடத்தி அதிர வைத்த இளைஞர்! - என்ன நடந்தது?

சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரை சோதனைச் சாவடி அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மாநகர அரசு பேருந்து நள்ளிரவில் லேசாக மோதியது. பின்னர் பேருந்தை நிறுத்தாமல் டிரைவர் வேகமாக சென்றுவிட்டார். அ... மேலும் பார்க்க