செய்திகள் :

LIC : 6.5 சதவீத பங்குகளை விற்று ரூ.35,000 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு

post image

மத்திய அரசு ஏற்கனவே பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்துவிட்டது. இப்போது எல்.ஐ.சி., ஒ.என்.சி.ஜி போன்ற சில நிறுவனங்கள் மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தற்போது எல்.ஐ.சி.யில் தனக்கு இருக்கும் பங்குகளில் 6.5 சதவீதத்தை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பங்குகளை விற்பனை செய்யும் பணி இன்று தொடங்கப்பட்டு நாளை முடிவடைகிறது. ஆஃபர் ஃபார் சேல் (OFS) திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட ரூ.35,000 கோடி ($3.7 பில்லியன்) மதிப்புள்ள 6.5% பங்குகளை விற்பனை செய்து வருகிறது.

ஒரு பங்கின் அடிப்படை விலையான ரூ. 382 என்ற விலையில் வழங்கப்படுகின்றன. ஆனால் மும்பை பங்குச்சந்தையில் எல்.ஐ.சி.யின் பங்குகள் ரூ. 424க்கு முடிவடைந்தது. மத்திய அரசு 10% தள்ளுபடி சலுகையில் இந்த பங்குகளை விற்று வருகிறது. இதன் மூலம் 6.5% பங்குகளை பங்குகளை முழுமையாக விற்றால், அரசுக்கு சுமார் 31,400 கோடி ரூபாய் கிடைக்கும். இது இந்தியாவில் பங்குகளை விலக்குவதற்கான மிகப்பெரிய OFS வாக கருதப்படுகிறது.

பொதுமக்கள்(சில்லறை விற்பனை) இன்று இத்திட்டத்தில் பங்குகளை வாங்க முடியாது. நாளை அதாவது கடைசி நாளில் பொதுமக்கள் பங்குகளை வாங்க முடியும்.

தற்போது 6.5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் அரசின் பங்கு விலக்கல் தற்போதைய ரூ.21,000 கோடியில் இருந்து ரூ.52,000 கோடியாக உயரும். மேலும், சொத்துப் பணமாக்கல் மூலம் மத்திய அரசுக்கு ரூ.6,367 கோடி கிடைக்க இருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசு அதன் முழு ஆண்டு இலக்கான ரூ.80,000 கோடியில் ரூ.60,000 கோடியை நெருங்கியிருக்கும். மே மாதம் எல்.ஐ.சி. நிறுவனம் ஒரு பங்கிற்கு ஒரு பங்கு என்ற விகிதத்தில் போனஸ் வழங்கியது.

பங்கு விற்பனையானது, குறைந்தபட்ச பொது மக்களின்பங்கு விதிமுறையை பூர்த்தி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, ​​ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பொதுப் பங்கு 3.5% ஆக உள்ளது. தற்போது 6.5 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்படுவதன் மூலம் பொது பங்கு 10% வரை உயரும். இது செபியின் விதிகளை பூர்த்தி செய்வதாக அமையும்.

Regal Jewellers: புதிய சமூகநல முயற்சியுடன் தமிழ்நாட்டில் தடம் பதிக்கும் ரீகல் ஜுவல்லர்ஸ்!

தென்னிந்தியாவின் முன்னணி நகை மேனுஃபேக்ச்சரர் மற்றும் ஹோல்சேலர்களில் ஒன்றான ரீகல் ஜுவல்லர்ஸ், சென்னை தி.நகரில் உள்ள வடக்கு உஸ்மான் சாலையில் தனது முதல் ஷோரூம், தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக தனது பயணத்த... மேலும் பார்க்க

ரத்தினம் என்பது ஒளிரும் கல் மட்டுமல்ல; அது தலைமுறைகள் போற்றும் பாரம்பரியத்தின் பிரகாசமான சின்னம்!

இயற்கையின் மிக சிறந்த படைப்புகளில் ஒன்றாக விளங்குவது ரத்தினக் கற்கள் ( Gemstones ). ஆயிரம் ஆண்டுகளாக அழகு, செழிப்பு மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகப் போற்றப்பட்டு வருகின்றன.அவற்றின் தனித்துவமான நிறம... மேலும் பார்க்க

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அடுத்த தலைமுறை ரோபோடிக் அறுவைசிகிச்சை சாதனம் அறிமுகம்!

ரோபோடிக் அறுவைசிகிச்சையில் பத்தாண்டு கால நிபுணத்துவம் கொண்ட மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சிகிச்சை தரங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தோடு, நவீன Toumai™ MT-1000 Pro ரோபோடிக் அறுவைசிகிச்... மேலும் பார்க்க

தங்கமயில் ஜுவல்லரியின் 26-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்!

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் 66 கிளைகள் வாயிலாக நகை விற்பனைத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் தங்கமயில் ஜுவல்லரி லிமிடெட் நிறுவனத்தின் 26வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் (Annual Gen... மேலும் பார்க்க

தனிஷ்க்: மல்லிகைப் பூவால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட 'நறுமுகை' அன்கட் வைர ஆபரணத் தொகுப்பு அறிமுகம்

மல்லிகைப் பூவின் காலத்தால் அழியாத அழகால் ஈர்க்கப்பட்டு, பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள வைர ஆபரணத் தொகுப்பு 'நறுமுகை', தென்னிந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆபரணப் பாரம்பரியத்தை நவீன 'அன்கட்' (Unc... மேலும் பார்க்க

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவர் ஆர். பூமிநாதனுக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்திய உயர்கல்வித் துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் ஆர். பூமிநாதன் விருந்தோம்பல் (Hospitality) கல்வித் துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு மற்றும் சேவையைப் பாராட... மேலும் பார்க்க