செய்திகள் :

Putin: டிசம்பரில் இந்தியா வரும் ரஷ்ய அதிபர்; இந்தச் சந்திப்பு ஏன் முக்கியமானது?

post image

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வரும் டிசம்பர் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்தர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பின் பேரில் இந்தப் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் காரணமாக அமெரிக்க அரசு இந்தியா மீது வரி விதித்தது முதல் இந்தியா - ரஷ்யா உறவுகள் வலுவடைந்து வருகின்றன. இந்த சூழலில் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Putin வருகை - இந்திய அரசு சொல்வதென்ன?

புதின்
புதின்

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ரஷ்யக் கூட்டமைப்பின் அதிபர் விளாடிமிர் புதின், 23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்தர உச்சி மாநாட்டிற்காக டிசம்பர் 4 முதல் 5 வரை அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின்போது, அதிபர் புதின் பிரதமர் மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவார். அத்துடன், ரஷ்ய அதிபரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்று விருந்தளிக்கிறார்.

புதினின் இந்த இந்தியப் பயணம், இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கும், 'சிறப்பு மூலோபாயக் கூட்டாண்மையை' வலுப்படுத்துவதற்கான தொலைநோக்கு திட்டத்தை அமைப்பதற்கும், பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்துக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் இந்திய மற்றும் ரஷ்யத் தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Ajit Doval
Ajit Doval

ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வரவிருப்பது குறித்து, கடந்த ஆகஸ்ட் மாதம் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாஸ்கோவுக்குச் சென்றிருந்தபோது தேதி குறிப்பிடாமல் அறிவிக்கப்பட்டிருந்தது.

பிரதமர் மோடியும், புதினும் செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டின்போதுச் சந்தித்தனர். அப்போது, ரஷ்ய அதிபரின் லிமோசின் காரில் இருவரும் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த மாதத் தொடக்கத்தில், ரஷ்ய அதிபரின் உதவியாளர் நிகோலாய் பாத்ருஷேவ் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தபோதும், மோடி புதினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அத்துடன், அடுத்த மாதம் புதினை இந்தியாவில் வரவேற்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் பிரதமர் கூறியிருந்தார்.

Presidents of America and Ukraine
Presidents of America and Ukraine

இந்தியா - ரஷ்யா உறவு

இந்தியா மற்றும் ரஷ்யா இடையே, சோவியத் காலத்திலிருந்தே இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளுடன் வலுவான நட்புறவு இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக இரு நாடுகளும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகின்றன. இந்தியாவுக்கு அதிக ஆயுதங்களை வழங்கும் நாடுகளில் ரஷ்யா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், ரஷ்ய எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனுக்கு எதிரான போருக்கு நிதி அளிக்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியிருக்கிறார்.

உக்ரைன் போருக்கு மத்தியில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், புதின் தனது வெளிநாட்டுப் பயணங்களை வெகுவாகக் குறைத்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்தியா ஒரு உறுப்பினராக இல்லாததால், புதினை கைது செய்ய வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இல்லை.

டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையேயான சிக்கலான உறவுக்கு மத்தியில், புதின் அவர்களின் இந்தப் பயணம் இந்தியா-ரஷ்யா உறவின் வலிமையை காட்டுவதாகவும், இந்தியாவின் புவிசார் அரசியல் உத்தியில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல" - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

திருப்பரங்குன்றம் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை திருநாளன்று, வழக்கம்போல கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டுவந்த கோயிலுக்கு மேலே இருக்கும் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்... மேலும் பார்க்க

"டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழகம் வந்தால்.!"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

அடுத்த ஆண்டு (2026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் த... மேலும் பார்க்க

`ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சிக்குள் இடமில்லை!' - மறைமுகமாக உணர்த்திய எடப்பாடி பழனிசாமி?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், வானகரத்தில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் கூடுதல் கவனத்தைப் பெற்றிருந்தது. அதிமுகவில் தங்களை இணைக்க ஓ.பி.எஸ் டிசம்பர... மேலும் பார்க்க

அதிமுக: "கட்சியை சில அரசியல் புரோக்கர்கள் அழிக்கப் பார்க்கிறார்கள், ஆனால்.!"- சி.வி சண்முகம்

சென்னை வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அதிமுக எம்.பி சி.வி சண்முகம், " அதிமுக வரலாற்றிலேயே பொறிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான நிகழ்வ... மேலும் பார்க்க

அதிமுக: `நாம் வென்றபோது சட்டையை கிழித்துக்கொண்டு திரிந்தவர் ஸ்டாலின்' - பொதுக்குழுவில் எடப்பாடி

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனி​யார் மண்​டபத்தில் அ.தி​.மு.க பொதுக்​குழு மற்​றும் செயற்​குழு கூட்​டம் இன்று நடை​பெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க