செய்திகள் :

RB Choudary: "நான் நிம்மதியாகச் சாப்பிடுறதுக்குக் காரணம், அவர் போட்ட பிச்சை" - கலங்கும் விக்ரமன்

post image

கார் விபத்தில் சிக்கி, 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி அகால மரணமடைந்திருப்பது தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அவருடைய சொந்த ஊரான ராஜஸ்தானுக்கு அவர் சென்றிருந்த நிலையில், அங்கு நேற்று மதியம் நேரிட்ட கார் விபத்தில் அவர் உயிரிழந்திருக்கிறார்.

பல்வேறு முக்கியமான திரைப்படங்களைத் தயாரித்திருக்கும் ஆர்.பி. சௌத்ரிக்கு, கே.எஸ். ரவிக்குமார், விக்ரமன், லிங்குசாமி உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்களை அறிமுகப்படுத்திய பெருமையும் உண்டு.

R B Choudary
R B Choudary

தமிழ் திரைத்துறையினர் பலரும் இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், இயக்குநர் விக்ரமன் கண்கள் கலங்கியவாறு, ஆர்.பி. சௌத்ரி பற்றிப் பேசி காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

"40 வருஷத்துக்கு முன்னாடி, நம்மளும் ஒரு டைரக்டர் ஆகணும்னு கனவுகளோட மெட்ராஸுக்கு வந்து ரொம்பக் கஷ்டப்பட்டேன். அசிஸ்டண்ட் டைரக்டராகி, பிறகு அசோசியேட் டைரக்டராகி, படத்தை இயக்குவதற்குள் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன்.

பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏறி இறங்கிச் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுப் போராடிட்டு இருந்தப்போ சௌத்ரி சார் எனக்கு வாய்ப்பளித்தார். சௌத்ரி சார்கிட்ட போய் கதை சொன்னேன்.

அவர் அதைக் கேட்டதும் ஓகே சொல்லிட்டார். அப்படி ஆரம்பிச்ச திரைப்படம்தான் 'புது வசந்தம்'. இன்னைக்கு என்னுடைய வீட்டினுடைய பெயரும் புது வசந்தம்தான். இன்னைக்கு நான் நிம்மதியாகச் சாப்பிட்டுட்டு இருக்கிறதுக்குக் காரணமே அவர் போட்ட பிச்சைதான்.

Director Vikraman
Director Vikraman

அவர் இன்னைக்கு இல்லைன்றது எனக்கு ரொம்பக் கவலையான விஷயம். என்னன்னா 100 படம் எடுக்கணும் என்பது அவருடைய கனவு. நிச்சயமாக, 100-வது படத்தை சூப்பர் குட் நிறுவனம் எடுப்பாங்க.

ஆனா அதைப் பார்க்கறதுக்கு அவர் இல்லைங்கிறது உண்மையிலேயே ரொம்ப வேதனையா இருக்கு!" என்று கலங்கினார்.

ஆர்.பி.சௌத்ரி: நேரில் சென்று அஞ்சலி; ஜீவாவை ஆரத்தழுவி ஆறுதல் சொன்ன விஜய்!

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி உயிரிழந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. நாட்டாமை, பூவே உனக்காக, ... மேலும் பார்க்க

"ஜில்லா-வுல என்னை நம்பி மதுரையையே செட் போட்டு கொடுத்தார்!" - நினைவுகள் பகிரும் 'ஜில்லா' பட இயக்குநர்

கார் விபத்தில் சிக்கி, 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி அகால மரணமடைந்திருப்பது தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிற... மேலும் பார்க்க

'படமெடுக்க வந்தவருக்கு ஆர்.பி. சௌத்ரி சொன்ன அந்த அட்வைஸ்!' - நினைவுகளைப் பகிரும் பத்திரிகையாளர்

நம் மனதுக்கு நெருக்கமானவரின் இழப்புகள் சில நேரங்களில் நம்மை பெரும் சோகத்தில் உலுக்கி விடும். அப்படி என் இதயத்தைக் கணக்க செய்தது ஆர்.பி.சௌத்ரி சாரின் மரணம். அவரின் அறிமுக நாள்கள் இப்போதும் பசுமையாக நிழ... மேலும் பார்க்க

RB Choudary: "இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்!" - ரஜினிகாந்த் இரங்கல்

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி விபத்தில் சிக்கி அகால மரணமடைந்திருக்கிறார்.தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. நாட... மேலும் பார்க்க

தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி செளத்ரி கார் விபத்தில் உயிரிழப்பு!

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி இயற்கை எய்தியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. நாட்டாமை, பூவே உனக்க... மேலும் பார்க்க

தவெக: ``என் கனவில் பாதி பலித்துவிட்டது; மீதிக்கு உழைக்க வேண்டும்"- விஜய்க்கு எஸ்.ஜே.சூர்யா வாழ்த்து!

தமிழக அரசியலில் தடம் பதித்து, பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குநரும் நடிகருமான எஸ்.... மேலும் பார்க்க