செய்திகள் :

TVK: ``காங்கிரஸின் வியூகம் தவறானது... அவர்கள் புரிந்துகொள்வதில்லை" - திமுக டிகேஎஸ் இளங்கோவன்

post image

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பரபரப்பாக நடந்துமுடிந்திருக்கிறது. 108 இடங்களில் தன் வெற்றியைப் பதிவு செய்திருக்கும் த.வெ.க. தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் விஜய் கடிதம் வழங்கியிருக்கிறார். இன்று தமிழ்நாடு வந்திருக்கும் ஆளுநரை நேரில் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன்
திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன்

இதற்கிடையில், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவைப்படுகின்றனர். தவெக-விடம் விஜய் வென்ற இரண்டு தொகுதிகளில் ஒன்று, சபாநாயகர் பதவிக்கான ஒன்று என இரண்டு இடங்கள் குறைந்து 106 இடங்கள் மட்டுமே இருக்கிறன.

மீதமிருக்கும் 12 இடங்களுக்கு தமிழ்நாட்டில் வெற்றிபெற்றக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. அதன் அடிப்படையில், தற்போது காங்கிரஸ் சில நிபந்தனைகளுடன் ஆதவளிப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இடதுசாரி கட்சிகள், விசிக போன்ற கட்சிகள் ஆட்சிக்குள் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், ``காங்கிரஸ் ஆட்சியில் இருந்த ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்கள் தோல்வியைத் தழுவி வருகிறார்கள். ஒடிசா, மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா என அவர்கள் இருந்த மாநிலங்கள் அனைத்திலும் தோல்வியையே தழுவியிருக்கிறார்கள்.

அவர்களுடைய வியூகம் தவறானது. அதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் மாநிலக் கட்சிகளுடன் இணைந்து நின்று, அவர்களுக்கு ஆதரவளித்து, மாநில அரசுகளில் கவனம் செலுத்துவதை விடுத்து, ஒன்றிய அரசைக் கைப்பற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"அந்த கட்டட தொழிலதிபராலத்தான் இத்தனை குழப்பம்.!" - பொங்கும் அ.தி.மு.க கிளர்ச்சியாளர்கள்

அ.தி.மு.க-வுக்குள் உச்சக்கட்ட குழப்பம் வெடித்திருக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளான இன்று, தொண்டர்கள் குழுமி அவருக்கு வாழ்த்து தெரிவித்தாலும், அவரது வலது இடது கரங... மேலும் பார்க்க

`குதிரை பேர அரசியல்: 'மாற்றமல்ல துர்நாற்றம்' - தவெக-வை கடுமையாகச் சாடும் டிடிவி தினகரன்!

அ.ம.மு.க சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்ட எஸ்.காமராஜ், தி.மு.க-வின் டி.ஆர்.பி.ராஜாவை தோற்கடித்து எம்.எல்.ஏ ஆனார். த.வெ.க-வுக்கு ஆதரவு கடிதம் கொடுத்ததாக தகவல் பரவிய நிலையில், "தன் கட்சி எம்.எல்.ஏ-வ... மேலும் பார்க்க

”ஆளுங்கட்சியில் இருப்பதுதான் சேஃப்”- அமமுக-வில் இருந்து நீக்கம்; பொங்கிய எஸ்.காமராஜ்!

அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.காமராஜ். டி.ஆர்.பி.ராஜாவை தோற்கடித்ததால் அரசியல் வட்டத்தில் இவர் மீது தனி கவனம் விழுந்தது. இந்நிலையில் எஸ்.காமராஜ் தவ... மேலும் பார்க்க

'மோடியின் பேச்சில் மர்மம் ஒளிந்திருக்கிறது; இந்திய பொருளாதாரம் மோசமான.!'- கெஜ்ரிவால் காட்டம்

மத்தியக் கிழக்கு போர் பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்ட... மேலும் பார்க்க

சி.வி சண்முகம் தரப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த `முதல்வர்' விஜய் - எடப்பாடி பழனிசாமியை சந்திப்பாரா?

தமிழ்நாடு அரசியலில் தேர்தல் முடிவு வெளியான மே-4 க்குப் பிறகு பிரேக்கிங் நியூஸுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைப்பாரா என்பதில் தொடங்கி தற்போது அ.தி.மு.க-வின் எம்.ஜி.ஆர் மாளி... மேலும் பார்க்க

தேனி: துடைத்தெறியபட்ட அதிமுக… கட்சிக்கு கஷ்ட காலத்தில் கைகொடுத்த மாவட்டத்தில் வீழ்ச்சி! என்ன காரணம்?

அ.தி.மு.க -வின் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் களம் கண்டு வெற்றி பெற்ற மாவட்டம் தேனி. இங்கு உள்ள நான்கு தொகுதிகளிலும் கோலோச்சி வந்த அ.தி.மு.க, தற்போது நடந்... மேலும் பார்க்க