செய்திகள் :

TVK : 'காரை மறித்த பெண் நிர்வாகி; நிற்காமல் சென்ற விஜய்! - என்ன நடந்தது?

post image

பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வருகை தந்த விஜய்யின் காரை பெண் நிர்வாகி ஒருவர் மறிக்க, நிற்காமல் விஜய்யின் கார் கடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Ajitha
Ajitha

தவெக சார்பில் ஏற்கெனவே 120 மா.செக்களை விஜய் அறிவித்திருக்கிறார். எஞ்சிய தொகுதிகளுக்கான மா.செக்களை விஜய் இன்று அறிவிக்கப்போவதாக நேற்றிரவு தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று காலை முதலே பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட ஆரம்பித்தனர்.

கோஷ்டி பூசலால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எந்த தொகுதிகளுக்குமே மா.செக்களை அறிவிக்காமல் கிடப்பில் போட்டிருந்தனர். இன்று தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளராக சாமுவேல் என்பவரை அறிவிக்கவிருந்தனர். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'உழைத்தவர்களுக்கே பதவி கொடுக்க வேண்டுமெனக் கோரி' தூத்துக்குடியை சேர்ந்த பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல் தன்னுடைய ஆதரவாளர்களுடன் பனையூர் வந்தார்.

Ajitha
Ajitha

அவரை அலுவலகத்துக்கு அரை கிலோமீட்டர் முன்பாகவே பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். சில நிர்வாகிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் ஆகவில்லை. தொடர்ந்து ஆதரவாளர்களுடன் கூடிப் பேசியவர் விஜய்யின் காரை மறித்து அவரிடமே பிரச்னைகளை முறையிடத் திட்டமிட்டார். விஜய் மதியம் 1:45 மணியளவில் அலுவலகத்தை நோக்கி காரில் வர தன்னுடைய ஆதரவாளர்களுடன் அஜிதா விஜய்யின் கார் முன்பு பாய்ந்தார். பெண் நிர்வாகி காரின் மேல் விழுவதை அறிந்தும் விஜய்யின் கார் நிற்காமல் கூட்டத்தை கடந்து அலுவலகத்துக்குள் நுழைந்தது.

அதன் பிறகும், அஜிதா தன்னுடைய ஆதரவாளர்களுடன் பனையூர் அலுவலகத்துக்கு வெளியேவே காத்திருக்கிறார்.

சறுக்கிய தமிழ் வேட்பாளர்கள்; 5 முறை கவுன்சிலராக இருந்த ரவி ராஜா, மாரியம்மாள் தாராவியில் தோல்வி!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவியில் உள்ள 185வது வார்டில் பா.ஜ.க சார்பாக ரவி ராஜா போட்டியிட்டார். ரவி ராஜா இதற்கு முன்பு 5 முறை காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மும்பை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்... மேலும் பார்க்க

Iran: 9 வயதில் ஈரானிலிருந்து வெளியேற்றம்; ஈரானின் கடைசி ஷாவின் மகளான லெய்லா பஹ்லவியின் சோக கதை!

ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இளவரசர் ரெசா பஹ்லவி மீண்டும் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறார். ஆயத்துல்லா கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஈரானியர்கள், நாட்டில் மீண்டு... மேலும் பார்க்க

புனே: `பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தும் பயனில்லை' - பவார் குடும்பத்திடமிருந்து கைநழுவிப்போன கோட்டை!

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாக பிரிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் இணைந்து புனே மற்றும் அதன் அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி தேர்த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மும்பையில் ஏற்கனவே பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் இணைந்து ஆட்சியை பிடித்துள்ள நிலையில் மா... மேலும் பார்க்க

சுவாச நோய்களால் 9,211 பேர் உயிரிழப்பு; டெல்லி அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

2024-ஆம் ஆண்டில் மட்டும் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்திருப்பதாக டெல்லி அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பொதுமக்களின... மேலும் பார்க்க

கோட்டையை போராடி இழந்த உத்தவ்: ஷிண்டேயுடன் சேர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மும்பைதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவு... மேலும் பார்க்க