`முதல் சந்திப்பில் சங்கடம்... பதவியேற்பிலேயே விஜய் சொன்னாரே கவனிச்சீங்களா?' - நெ...
TVK: "'சர்க்கார்' விஜய்யின் அரசியல் இலக்குகளைச் சொல்வதற்காகவே எடுக்கப்பட்ட படம்" - ஜெயமோகன்
,இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சராகவும் பதவி ஏற்கிறார் விஜய்.
கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில், தவெக-வுக்கு மக்கள் வாக்களித்து தனிப்பெருங்கட்சியாக உருவெடுக்கச் செய்திருக்கிறார்கள்.
இன்று பதவியேற்கவிருக்கும் விஜய்க்கு, அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா துறை பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
எழுத்தாளர் ஜெயமோகனும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து, தன்னுடைய ப்ளாகில் பதிவிட்டிருக்கிறார். இவர் விஜய்யின் 'சர்க்கார்' படத்தில் திரைக்கதை மற்றும் வசனப் பணிகளில் பணியாற்றியிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர், "இன்று ஜோசப் விஜய் தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்கிறார். நான் அவருடைய சர்க்கார் படத்திற்கு எழுதியுள்ளேன்.
(கிட்டத்தட்ட சர்க்கார் படத்தில் நிகழ்ந்த எல்லாமே அவருடைய அரசியலிலும் நடைபெற்றன. இறுதியில் அவருக்கு எதிராக ஆளும்கட்சி எதிர்க்கட்சி இரண்டும் இணைவது வரை) நானறிந்தவரை அவர் நிர்வாகத்திறன் மிக்கவர்.
அவருடய திரைத்திட்டமிடல், பொருளியல் திட்டமிடல் இரண்டுமே அப்பழுக்கற்றவை. அரசியலிலும் அவ்வாறே என அறிகிறேன்.
உடனிருப்பவர்களை நுணுக்கமாகப் புரிந்துகொள்பவர், அவர்களை எப்போதுமே தன் ஆளுகைக்குள் வைத்துக்கொள்பவர்.
பிறர் அவரைக் கையாள்வது முற்றிலும் இயலாதது என்பதை அறிவேன். இருபதாண்டுகளாக அவர்தான் பிறரை இயல்பாகவே தனக்காகக் கையாள்கிறார்.

சர்க்கார் அவருடைய அரசியல் இலக்குகளைச் சொல்வதற்காகவே எழுதி எடுக்கப்பட்ட படம். அவரே வகுத்தளித்த பார்வைகளே அதில் உள்ளன. ஆனால் அவர் என்ன எண்ணுகிறார் என்பதை அவரே சொல்லாமல் அணுக்கமானவர்கள்கூட புரிந்துகொள்ள முடியாது என்பார்கள்.
அவருடைய சூழலில் பழையபாணி பணிவு குழைவு ஆகியவை எதிர்பார்க்கப்படும் எஜமான் வழிபாடு இல்லை என்பதை, அது இளைய தலைமுறைக்கான நவீன தொழில்முறைச் சூழல் என்பதையும் கண்டிருக்கிறேன்.
தன் இலக்குகள் நோக்கி துல்லியமான திட்டமிடலுடன் சென்றுகொண்டிருப்பவர் விஜய். கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டவர், ஆனால் குடும்பச் சூழலில் இருந்து உருவான இயல்பானதும் மிக வலுவானதுமான ஒரு மதச்சார்பின்மைப் பார்வை அவருக்கு உண்டு என்பது அவருடைய தனித்தகுதி என நான் நினைக்கிறேன்.
இந்த இறுதிக்கணத்தில் ஆதரவு தேடும்போதுகூட மதச்சார்பற்றவர்களை மட்டுமே அவர் தேர்ந்தெடுத்த்தது எனக்கு வியப்பளிக்கவில்லை. முதல்வர் பணி என்பது அவருக்கு கடினமானதொன்றும் அல்ல. தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள். அவர்கள் விரும்பியபடி நல்லன நிகழ்க" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.














