Vijay இதைச் செய்யலைன்னா, சவால்களை பட்டியலிடும் Journalist Shabbir Interview
TVK: "திமுகவை எங்கு வைக்க நினைத்தார்களோ? அங்கு வைத்திருக்கிறார்கள்" - சிடிஆர் நிர்மல் குமார்
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவிய நிலையில், தவெக அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 108 இடங்களில் வென்றிருக்கிறது. இந்நிலையில் தவெக நிர்வாகியும், திருப்பரங்குன்றம் தொகுதியின் வெற்றி வேட்பாளருமான சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது, "ஒட்டுமொத்த மக்களும் கொடுத்த சர்ப்ரைஸ் பார்த்திருப்பீர்கள். இதுதான் மக்கள் அனைவரும் விஜய் மீது வைத்த நம்பிக்கை.
மக்களின் நம்பிக்கையை 100 சதவிகிதம் நிறைவேற்றுவோம். தமிழக மக்கள் திமுகவை எங்கு வைக்க வேண்டும் என்று நினைத்தார்களோ அங்கு வைத்திருக்கிறார்கள்.
எவ்வளவு காலம்தான் மக்கள் அநீதியைப் பொறுத்துக்கொள்வார்கள். உங்களுடைய (திமுக) சொந்த விருப்பங்களுக்காக மக்களை ஏமாற்றி இருக்கிறீர்கள்.
அதற்கான விடையைத்தான் தமிழக மக்கள் கொடுத்திருக்கிறார்கள். 100 சதவிகிதம் சொல்கிறோம். இது மக்களுக்கான ஆட்சியாக இருக்கும். மக்கள் என்ன நினைத்து வாக்களித்தார்களோ அதை எங்கள் தலைவர் நிறைவேற்றுவார்" என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து ஸ்டாலின் கொளத்தூர் தோல்விக்கு கமல்ஹாசன், "ஸ்டாலின் மீண்டும் போராடுவார், மீண்டும் வெல்வார்'' என்று பதிவிட்டிருந்தார்.
இதுதொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த நிர்மல் குமார், "கமல்ஹாசன் தனிக்கட்சி வைத்திருக்கிறாரா? இல்லை திமுகவில் ஒரு அங்கமா? ரெட் ஜெயன்ட்டின் அங்கமா? என்று தெரியவில்லை. அவருடைய கருத்தை மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம்" என்று தெரிவித்திருக்கிறார்.
















