செய்திகள் :

TVK: "மதுராந்தகத்தில் திமுக வென்றால் தவெக ஆட்சி ஜனவரி மாதத்தில் கவிழும்" - ஆர்.எஸ்.பாரதி

post image

செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த மரகதம் குமாரவேல், தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த சத்தியபாமா ஆகிய இருவரும் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, விஜய் தலைமையிலான தவெக-வில் இணைந்ததால் இவ்விரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, இந்த இடைத்தேர்தல் களம் உருவாகி இருக்கிறது.

தி.மு.க சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன்
தி.மு.க சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன்

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக சட்டத்துறை துணைச் செயலாளருமான ஐ.பரந்தாமன் போட்டியிடுகிறார்.

தாராபுரம் தொகுதியில் திமுக வழக்கறிஞர் மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்த எஸ்.சுகன்யா போட்டியிடுகின்றனர். இந்நிலையில் மதுராந்தகம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றால் ஜனவரி மாதம் தவெக ஆட்சி கவிழும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருக்கிறார்.

மதுராந்தகம் தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "சட்டசபைக்கு பரந்தாமன் போல ஒரு ஆள் தேவை. இவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகச் சென்றால் அடுத்த ஐனவரி மாதத்திற்குள் தவெக ஆட்சி கவிழும்.

நான் யாரையும் இழிவுப்படுத்தியும், தவறாகவும் பேசவில்லை. தமிழ்நாட்டின் தலையெழுத்து என் முன்னால் இங்கு அமர்ந்திருக்கக்கூடிய கூட்டணிக் கட்சி தோழர்கள் மற்றும் திமுக தொண்டர்களின் கையில்தான் உள்ளது.

ஆர்.எஸ் பாரதி
ஆர்.எஸ் பாரதி

கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலினை தவெக இழிவுப்படுத்திப் பேசியதை அடுத்த 21 நாட்கள் மனதில் வைத்துக் கொண்டு பணியாற்ற வேண்டும்.

திமுகவின் வரலாறை, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் 21 நாட்கள் மனதில் வைத்து வைராக்கியமாக வேலை செய்தால் பரந்தாமன் வெற்றி பெறுவது உறுதி.

மிசாவின் வரலாறு மதுராந்தகத்தில்தான் தொடங்கியது. இன்றைய சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் மிசாவைப் பற்றி தெரியாது. துரைமுருகன், டி.ஆர்.பாலு, மு.க.ஸ்டாலின், என்னைப் போன்றவர்கள்தான் மிசாவின் கொடூரத்தை நேரில் பார்த்தவர்கள்" என்று பேசியிருக்கிறார்.

கொத்தடிமைக் கொடூரம்: ``கர்ப்பிணி மரணம்; சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும்" - திருமாவளவன்

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கத்தில், மர வியாபாரியிடம் வாங்கிய முன்பணத்திற்காக மருத்துவமனைக்கு செல்ல விடாமல் தடுத்ததால், நிறைமாத கர்ப்பிணி தேன்மொழியும் அவரது சிசுவும் கூடாரத்திலேயே உயிரிழந்தனர். இ... மேலும் பார்க்க

நெல்லை: வெறிச்சோடிய உழவர் சந்தை... இரவில் மது அருந்தும் இடமாக மாறிய அவலம்!

திருநெல்வேலி டவுன் பகுதியில் அமைந்துள்ள கண்டியப்பேரி உழவர் சந்தை, ஒரு காலத்தில் விவசாயிகளும் பொதுமக்களும் அதிகம் பயன்படுத்திய இடமாக இருந்தது. ஆனால் தற்போது வியாபாரம் முழுமையாக நின்று, சந்தை வளாகம் வெற... மேலும் பார்க்க

9/11 Anniversary: `குப்பைத் தொட்டி டு புல்லட்' பின் லேடனை அமெரிக்கா கண்டுபிடித்துக் கொன்றது எப்படி?

இதே நாளில் 25 ஆண்டுகளுக்கு முன்பாக அந்தக் கொடூரத் தாக்குதல் நிகழ்ந்தது. அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீது தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல், உலகத்தின் போக்கையே மாற்றியது. அந... மேலும் பார்க்க

BRICS 2026 மாநாடு: ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட 20 உலகத் தலைவர்கள் பங்கேற்பு

பொருளாதார வலிமை கொண்ட உலகின் முக்கிய வளர்ந்து வரும் நாடுகள் ஒன்றிணைந்து, வர்த்தகம், நிதி மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நடத்தும் சர்வதேச உச்சிமாநாடு BRICS. 2026-ம் ஆண்டுக்... மேலும் பார்க்க

NIA: `டெல்லி செங்கோட்டை டார்கெட் இல்ல...' - கார் குண்டுவெடிப்பு குறித்த குற்றப்பத்திரிக்கை தாக்கல்

கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. அதில் 11 பேர் பலியான நிலையில், 29 பேர் காயமடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு ... மேலும் பார்க்க