செய்திகள் :

Vote Vibes: எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை! - சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட கதைகள்!

post image

தவெக தலைவர் விஜய் வருகிற சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போகிறார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்திருக்கிறார்.

சட்டப்படி, ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட முடியும். ஒரு வேளை இரண்டிலும் வெற்றி பெற்றால் ஏதாவது ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும்.

தவெக விஜய்
தவெக விஜய்

இப்படி இதற்கு முன் பல அரசியல் தலைவர்கள் ஒரே நேரத்தில் இரு தொகுதிகளில் போட்டியிட்டிருக்கிறார்கள். ஒரு தொகுதியில் வெற்றி வாய்ப்பு சவாலாக இருக்கும் பட்சத்தில், பாதுகாப்பிற்காக இன்னொரு தொகுதியைத் தேர்வு செய்து போட்டியிடுவார்கள்.

கட்சியின் முக்கிய முகம் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும்போது, அதன் அருகிலிருக்கும் தொகுதிகளுக்கு அது வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் எனக் கருத்தில் கொண்டு இத்தகைய விஷயங்களை அரசியல் தலைவர்கள் செய்திருக்கிறார்கள், செய்து வருகிறார்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதற்கு முன் யார் யார் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருக்கிறார்கள் என்கிற விவரத்தை இங்கு பார்ப்போமா...

எம்.ஜி.ஆர்:

1980-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் ஆண்டிப்பட்டி, மதுரை மேற்கு என இரண்டு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். பிறகு ஆண்டிப்பட்டி தொகுதியிலிருந்து வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

இதே சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரனும் ஆண்டிப்பட்டி, மதுரை மேற்கு என இரண்டு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

எம்.ஜி.ஆர் ஆண்டிப்பட்டி தொகுதியிலிருந்து வேட்புமனுவை வாபஸ் பெற்ற பிறகு, எஸ்.எஸ். ராஜேந்திரன் மதுரை மேற்கு தொகுதியிலிருந்து வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

ஜெயலலிதா:

1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பர்கூர், காங்கேயம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றியை ருசித்தார் ஜெயலலிதா.

பிறகு காங்கேயம் தொகுதியை ராஜினாமா செய்தார். 2001 சட்டமன்றத் தேர்தலில் பர்கூர், புவனகிரி, ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி என நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்றிருந்த காரணத்தாலும் இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த காரணத்தாலும் அனைத்து தொகுதிகளிலும் அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

டாக்டர் கிருஷ்ணசாமி:

2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி சார்பாக, அதன் தலைவர் கிருஷ்ணசாமி ஓட்டப்பிடாரம் மற்றும் வால்பாறை என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால், இரண்டு தொகுதிகளிலும் தோல்வியையே இவர் சந்தித்தார்.

ஏ.எஸ்.பொன்னம்மாள்:

1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஏ.எஸ். பொன்னம்மாள் நிலக்கோட்டை மற்றும் பழனி என இரண்டு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்து, பின் இரண்டிலும் வாபஸ் பெற்றார்.

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

வருகிற சட்டமன்றத் தேர்தலில் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடவிருக்கிறார். கடந்த திங்கட்கிழமை பெரம்பூர் தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார். பின் அந்தத் தொகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று விஜய் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

மேலும் இந்த தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக போட்டியிடும் கிருஷ்ணசாமியின் மகன், ஷ்யாம் கிருஷ்ணசாமி நெல்லை, ஶ்ரீவில்லிபுத்தூர் என இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

போர் எதிரொலி: `சிறப்பு கூட்டத்தைக் கூட்டி பிரதமர் ஆலோசனை' - அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை!

மத்திய ஆசியாவில் நடந்துவரும் போரால், பல்வேறு நாடுகளில் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஈரான், அமெரிக்கா - இஸ்ரேல் போர் விளைவால் எரிசக்தி தட்டுப்பாடில் தொடங்கி விலைவாசி உயர்வு வரை பொதுமக்களு... மேலும் பார்க்க

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: 'இதுக்கு 'End Card' இல்லையா?' - இந்திய ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது?

ஏற்கெனவே இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில், ஈரான் போரும் தொடங்க, இந்த இறங்குமுகம் தொடர்கதையாகி வருகிறது. இப்போது ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.94-ஐ தாண்டி இந்திய ரூபாயி... மேலும் பார்க்க

VCK : `கேட்டது கிடைத்தது / இல்ல கிடைக்கவில்லை' - தொகுதி பங்கீட்டில் குழப்பும் திருமாவளவன் | பின்னணி

வி.சி.க எம்.எல்.ஏ-க்கள் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ் பாலாஜி, பனையூர் பாபு ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காதது சர்ச்சையான நிலையில் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அது குறித்து விளக்கமளித்துள்ளார்... மேலும் பார்க்க

வருமான வரி, பங்குச்சந்தை: இன்று முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன?

இன்று (ஏப்ரல் 1) முதல் பல்வேறு நிதி மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. அவற்றில் வருமான வரி மற்றும் பங்குச்சந்தையில் நடக்க உள்ள மாற்றத்தைப் பார்க்கலாம். > இதுவரை வருமான வரிச் சட்டம், 1961 அமலில் இருந்தது... மேலும் பார்க்க

VCK: உயர்நிலைக்குழு கூட்டத்தை புறக்கணித்த ஷாநவாஸ்... விளக்கமளித்த திருமா!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ் பாலாஜி, பனையூர் பாபு ஆகியோருக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் மூவரும் அப்செட் ஆகி... மேலும் பார்க்க

16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு: ரூ.11,718.24 கோடி நிதி ஒதுக்கீடு; ‘டிஜிட்டல்’ முறையில் தொடக்கம்!

இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெறும் 8-வது கணக்கெடுப்பு இன்று (ஏப்ரல் 1, 2026) தொடங்குகிறது. உலகிலேயே மிகப்பெரிய இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, வரலாற்... மேலும் பார்க்க