செய்திகள் :

‘அதுவே பழகிடும்’ ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடலைப் பழகிக்கொண்ட உலக நாடுகள்; இப்போது எப்படி சமாளிக்கின்றன?

post image

அமெரிக்காவும், இஸ்ரேலும் நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பம் மிகுந்த ஏவுகணைகளை வைத்து, ஈரானை வழிக்குக் கொண்டுவர நினைத்தது.

ஆனால், ஈரானோ ஒரே ஒரு நீர்ச்சந்தியை மூடி அமெரிக்காவிற்கு, இஸ்ரேலுக்கு மட்டும் ஆட்டம் காட்டாமல், உலக நாடுகளின் எண்ணெய் போக்குவரத்துக்கே நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது... இன்னும் செய்து வருகிறது.

ஈரான் போர் உச்சத்தில் இருந்தபோது, ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டு எண்ணெய் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இன்னும் அதன் பாதிப்புகள் முழுமையாகத் தீரவில்லை.

ஹார்முஸ் நீர்சந்தி தற்போதும் முழுமையாகத் திறக்கப்படவில்லை. ஆனால், முன்பு போல இல்லாமல், இப்போது உலக நாடுகள் இந்தச் சூழலைச் சமாளிக்கக் கற்றுக்கொண்டுள்ளன.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

அது எப்படி?

> ஆகஸ்ட் 30-ம் தேதிதான், ஹார்முஸ் நீர்ச்சந்தியில் கடுமையான தாக்குதல்கள் மீண்டும் தொடங்கின. ஆனால், அதற்குள் அந்த வாரத்தில் ஒரு நாளைக்கு 8-9 மில்லியன் பேரல் எண்ணெய்கள் கடந்துவிட்டன. இது உலக நாடுகளுக்குத் தற்போது உதவி வருகிறது.

மேலும், அதன்பிறகும், ஈரான் அனுமதித்த கப்பல்கள் அவ்வப்போது நாளுக்கு 2 மில்லியன் பேரல் எண்ணெய் என்று ஹார்முஸைக் கடந்திருக்கிறது. ஆனால், இப்போதும் இந்தப் போக்குவரத்து நடக்கிறதா என்பதற்கு எந்தத் தரவுகளும் இல்லை.

> மத்திய கிழக்கு நாடுகளுக்கு எண்ணெய் வர்த்தக வருமானம் பிரதான வருமானங்களில் ஒன்று. இதனால், இந்த வர்த்தகம் பாதிக்கப்படுவதை அந்த நாடுகள் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்காது அல்லவா?

அதனால், அவை ஹார்முஸைத் தாண்டி வேறு ரூட்டுகளில் எண்ணெய் ஏற்றுமதியைத் தொடங்கியிருக்கின்றன.

உதாரணத்திற்கு, சவூதி அராம்கோ ஆகஸ்ட் மாதத்திலிருந்து வளைகுடாப் பகுதியிலுள்ள ராஸ் தனுரா துறைமுகத்திலிருந்து எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகிறது.

இப்படிப் புதிய ஏற்றுமதி தளங்களை நோக்கி நகர்ந்திருக்கின்றன மத்திய கிழக்கு நாடுகள்.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

> OPEC அமைப்பு நாடுகளிடமிருந்துதான் உலகமெங்கும் பெரும்பான்மையாக எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இப்போது அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளும் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, ஏற்றுமதியையும் அதிகரித்துள்ளன.

அமெரிக்காவிடம் வெனிசுலா எண்ணெய் வேறு இருக்கிறது. அதையும் அமெரிக்கா ஏற்றுமதி செய்யப் பிளான் போடும் என்பது குறிப்பிடத்தக்கது.

> சில தரவுகளின்படி, எண்ணெய் பிரச்னை சூழலால், உலக நாடுகள் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்து, மாற்றுப் பாதைகளுக்குச் சென்றுள்ளன. இதனால், சந்தையில் எண்ணெய் டிமாண்டும் குறைந்துள்ளது என்று தரவுகள் கூறுகின்றன.

> சில நாடுகள் ஹார்முஸ் நீர்ச்சந்தியை எண்ணெய் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தாத நாடுகளிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்கின்றன.

இதற்கு நல்ல உதாரணம் நாம்தான். ஆம்... இந்தியா ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.

TVK : 'அவப்பெயர் ஏற்படும்' - குழம்பி தெளிந்த விஜய் ; மாலை வெளியாகும் வேட்பாளர் அறிவிப்பு?

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியிருக்கிறது. முதல் கட்சியாக திமுக தங்களின் வேட்பாளர்களை அறிவித்திருக்கும் நிலையில், தவெக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வ... மேலும் பார்க்க

"இத்தகைய அருவெறுப்பான உரையை சட்டமன்றம் கண்டிருக்காது"- விஜய்யின் பேச்சைக் கண்டித்து DMK ஆர்ப்பாட்டம்

செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது முதல்வர் விஜய், திமுகவைக் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.சர்க்காரியா கம... மேலும் பார்க்க

'அங்கிருந்துதான் அதிருப்தி தொடங்கியது'; தவெக கூட்டத்தைப் புறக்கணித்த கம்யூனிஸ்ட்டுகள்- காரணம் என்ன?

முதல்வர் விஜய் தலைமையில் கடந்த ஜூலை 1-ம் தேதி கோவளத்தில் தோழமை கட்சிகளுடனான முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள... மேலும் பார்க்க

முதல் நாளிலேயே களமிறங்கிய திமுக : இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் யார் யார்?

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்க... மேலும் பார்க்க

முதல்வர் விஜய் vs எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி : `ஹீரோ - வில்லன் ஆட்டம் ஆடும் இடமா சட்டமன்றம்?'

சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் 28 நாட்களாக நடந்து முடிந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக 170 மணி நேரத்துக்கு அவை நிகழ்வுகள் நடந்திருக்கிறது. இதில், அவையின் மையமாக இருந்த முதல்வர் விஜய் எதிர்க்கட்சித் த... மேலும் பார்க்க

"பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் வேண்டாம், ஏன்னா.!" - சிக்கலை விளக்கிய அன்புமணி ராமதாஸ்

தமிழக சட்டமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு 110 விதியின் கீழ், 1,200 கோடி ரூபாய் செலவில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். தற்போது அத... மேலும் பார்க்க