செய்திகள் :

"AI-ல் 'இதை' படிங்க" - 17 வயதில் மாதம் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் ஆயுஷ் சிங்-ன் அட்வைஸ்!

post image

எங்கும், எல்லாவற்றிலும் ஏ.ஐ., என்று இப்போது உலகம் மாறி வருகிறது.

ஒரு லேப்டாப், விட்டுவிட்டுக் கிடைக்கும் இன்டர்நெட் கனெக்ஷன், ‘சாதித்துவிட வேண்டும்’ என்கிற ஆர்வம் ஆகிய மூலதனத்தை வைத்து ஏ.ஐ., உலகில் தனக்கெனத் தனி முத்திரையை பதித்திருக்கிறார் ஆயுஷ் சிங்.

யார் இந்த ஆயுஷ் சிங்?

பெங்களூரைச் சேர்ந்த இவருக்குத் தற்போது வயது 17. அதாவது இது பள்ளியின் இறுதி ஆண்டு படிக்கும் வயது. இந்த வயதில் ஆயுஷ் சிங் மாதம் ரூ.18 லட்சம் சம்பாதிக்கிறாராம். ஆச்சர்யமாக இருக்கிறதா... பாட்காஸ்ட் ஒன்றில் ஆயுஷ் சிங் தனது பயணத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.

AI | ஏ.ஐ
AI | ஏ.ஐ

13 வயதில் ஆரம்பித்த AI பயணம்!

“கொரோனா காலத்தில் AI மற்றும் Machine Learning-ஐ ஆன்லைனில் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். அப்போது எனக்கு வயது 13.

எங்கள் குடும்பம் பொருளாதார நெருக்கடி உள்ள குடும்பம். இதனால், விலையுயர்ந்த கோர்ஸ் படிக்க முடியவில்லை.

இதனால், ஏற்கெனவே இருந்த பழைய கோர்ஸ் ஒன்றைத் தேர்வு செய்து படித்தேன். ஒரு லேப்டாப், விட்டுவிட்டுக் கிடைக்கும் இன்டர்நெட். இதுதான் என்னுடைய கிளாஸ்ரூம்.

ஆரம்பத்தில் Machine Learning-ன் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டேன்.

பிசினஸில் காலடி

படித்தால் மட்டும் போதுமா? அதைச் செயல்படுத்த வேண்டாமா? செயல்பாட்டிற்குச் சர்வதேச நிறுவனங்களை அணுகினேன். ஆரம்பத்தில், எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால், தொடர்ந்து முயன்று வந்ததால், சில மாதங்கள் கழித்துச் சர்வதேச ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வாய்ப்பு வழங்கின. அதிலிருந்து என்னுடைய தொழில் பயணம் தொடங்கியது.

14 வயதில் நான் ஒரு ஏ.ஐ. கோர்ஸை உருவாக்கினேன். அதற்கு எம்.ஐ.டியிலிருந்து எனக்குப் பாராட்டு கிடைத்தது.

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ். ஏ.ஐ (AI)
ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ். ஏ.ஐ (AI)

அதன்பின், Antern என்கிற ஏ.ஐ. நிறுவனத்தை உருவாக்கினேன். அடுத்ததாக, Second Brain Labs நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் ஆனேன்” என்று கூறும் ஆயுஷ் சிங்கிற்கு ஏ.ஐ.யில் டேட்டா சயின்டிஸ்ட், MLOps இன்ஜினீயர், ஏ.ஐ ஃப்ரீலான்சர், ஏ.ஐ. கன்சல்டன்ட், ஏ.ஐ. நிறுவனத்தின் நிறுவனர் என்று பல முகவரிகள்.

அட்வைஸ்

ஏ.ஐ. கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கு, “ஏ.ஐ.-ல் டீப் லேர்னிங்-ல் மட்டும் கவனம் செலுத்தாதீர்கள். முதலில் ஏ.ஐ.-க்குத் தேவையான அடிப்படைக் கணிதக் கருத்துகளைப் புரிந்துகொள்ளுங்கள்.

தற்போது ஏ.ஐ. துறையில் Generative AI மற்றும் MLOps அதிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அதைக் கவனியுங்கள்” என்பதுதான் ஆயுஷ் சிங்கின் அட்வைஸ்.

ஏர் இந்தியா நஷ்டம்: சிங்கப்பூரில் வெடித்த அரசியல், இனவாத சர்ச்சை... என்ன நடக்கிறது?

உலகளாவிய சூழல், எரிபொருள் செலவு, அதிகரிக்கும் விமானப் போக்குவரத்துச் செலவு, மெர்ஜரால் ஏற்பட்ட தாக்கங்கள் போன்ற காரணங்களால் ஏர் இந்தியா நிறுவனம் இறங்குமுகத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த... மேலும் பார்க்க

மதுரையில் GRT ஜூவல்லர்ஸ் 68-வது ஷோரூம் திறப்பு – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகள்!

மதுரை அண்ணா நகரில் 68-வது ஷோரூமை திறந்துள்ள ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், மதுரையில் தனது இரண்டாவது ஷோரூமைத் தொடங்குவதன் மூலம், வளர்ந்து வரும் தனது பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.ஆறு தசாப்தங... மேலும் பார்க்க

Bombay Creamery: ஐஸ்க்ரீம் சந்தையில் கால் பதித்த ரிலையன்ஸ்… ₹10-ல் தொடங்கும் புதிய போட்டி

இந்தியாவின் ஐஸ்க்ரீம் சந்தையில் களமிறங்கியிருக்கிறது ரிலையன்ஸ். முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் FMCG பிரிவான Reliance Consumer Products Limited (RCPL), ‘Bombay Creamery’ என்ற புதிய ... மேலும் பார்க்க

கடனால் அனைத்தையும் இழந்த பல ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர்: மீண்டும் வேலைக்கு செல்லும் தொழிலதிபர்

நாட்டில் பல முன்னணி நிறுவனங்கள் கடன் தொல்லையால் கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் கையிக்கு செல்கிறது. ரிலையன்ஸ் மொபைல் உரிமையாளரான அனில் அம்பானிக்கு சொந்தமான பல நிறுவனங்கள் அது போன்று த... மேலும் பார்க்க

நிலக்கடலை, வெல்லம், ஏலக்காய் விலையேற்றம்; கோவில்பட்டி கடலைமிட்டாயின் விலை 25% உயர்வு!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வானம் பார்த்த பூமியாகும். சுத்த கரிசல் மண்ணில் விளைவிக்கப்படும் நிலக்கடலைகளுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. இயற்கையாகவே இனிப்பு சுவையுட... மேலும் பார்க்க

விளாச்சேரி டு அமெரிக்கா... களிமண்ணில் உருவாகும் ஒரு கிராமத்தின் கனவு!

பண்டிகை காலங்களில் வீடுகளையும் கொலு படிகளையும் அலங்கரிக்கும் பொம்மைகளுக்குப் பின்னால் பல குடும்பங்களின் உழைப்பு இருக்கிறது.அப்படிப்பட்ட பாரம்பர்ய பொம்மைத் தயாரிப்புக்குப் பெயர்பெற்ற ஊராகத் திகழ்கிறது ... மேலும் பார்க்க