செய்திகள் :

``அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' - பாஜக அனுராக் தாகூர் காட்டம்

post image

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்ததுபோல், இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

ஆனால், இந்து அமைப்புகள் மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவிற்கு அருகே உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பேசுபொருளாகி வருகிறது.

மேலும், இதுதொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சிக்கந்தர் தர்காவிற்கு அருகே இருக்கும் தூணில் தீபம் ஏற்றச் சொல்லி உத்தரவிட்டது சமூக நல்லிணக்கத்திற்கு எதிரானது என்று திமுகவைச் சேர்ந்த எம்.பிக்கள் மக்களவையில் விவாதித்து வருகின்றனர். பாஜக எம்.பிக்கள் இந்து அமைப்பினருக்கு ஆதரவாக விவாதித்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து மக்களவையில் பேசியிருக்கும் அனுராக் தாகூர்
பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்

இந்நிலையில், இன்றைய மக்களவையில் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து திமுக அரசைக் கண்டித்துப் பேசி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார் பாஜகவின் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்.

இதுகுறித்து பேசிய அனுராக் தாகூர், “இந்தியாவில் ஒரு மாநிலம் சனாதன தர்மத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. சனாதன தர்மத்தின் எதிரியாக இருந்து வருகிறது.

அன்று அயோத்தியில் ராமர் கோவிலுக்காக நீதி கேட்டு நீதிமன்றம் சென்றோம். இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள்.

ஆனால், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியிருந்தும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றவிடாமல் தடுத்திருக்கிறது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக-ஸ்டாலின் அரசு.

“நீதிமன்றம் அனுமதி கொடுத்தும், ஸ்டாலின் அரசு ஏன் மலை உச்சியில் தீபம் ஏற்றவிடாமல் தடுத்து, தீபம் ஏற்றச் சென்றவர்கள் மீது தடி அடி நடத்தியது?”

“ஸ்டாலின் அரசே நீதிமன்ற உத்தரவை மீறி நடந்து கொண்டது ஏன்? கார்த்திகை தீபத்தை மலை உச்சியில் ஏற்ற அனுமதிக்காதது ஏன்? இதற்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும்,” என்று மக்களவையில் கேள்வி எழுப்பி பேசியிருக்கிறார்.

இதனால், எதிர்க்கட்சியினரான காங்கிரஸ் மற்றும் திமுக எம்.பிக்கள் அனுராக் தாகூர் பேச்சிற்கு பதிலளிக்க முயற்சிக்க, மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

``IIT மெட்ராஸ் பறை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்'' - விருதுநகரில் பறை இசைத்த ஆளுநர் ரவி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையில், தமிழக ஆளுநரின் விருப்ப நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் பத்மஸ்ரீ விருதுபெற்ற பறை இசை கலைஞர் வேலு ஆசான் மூலம் கட்டப்பட்டுள்ள பாரதி பறை பண்பாட்டு மைய... மேலும் பார்க்க

`` ஈரோடு வரும் விஜய்; காலை 11 மணி முதல் பகல் 1 மணிக்குள்" - தேதியை அறிவித்த செங்கோட்டையன்

தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்தார். வாரி மஹால் அருகே இருக்கும் தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் க... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: சுட்டிக்காட்டிய விகடன்; சீரமைக்கப்பட்ட தார் சாலைகள் - மக்கள் நிம்மதி!

திருப்பத்தூர் மாவட்டம், லண்டன் மிஷன் பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த தார்சாலைகள் குறித்து, 11/10/2025 அன்று விகடனில், "சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும்ப... மேலும் பார்க்க

”குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: 2027-ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும்”-இஸ்ரோ தலைவர் நாராயணன்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இஸ்ரோ தலைவர் நாராயணன் வருகை புரிந்தார். அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அ... மேலும் பார்க்க

Tax: ``இந்திய பொருள்களுக்கு 50% வரி" - மெக்சிகோ அறிவிப்பால் அதிக பாதிப்பு யாருக்கு?

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூடுதல் வரி, அபராதம் என விதித்திருந்தது விவாதமான நிலையில், இப்போது மெக்சிகோவும் இந்தியா மீது 50% வர... மேலும் பார்க்க

"கே.என்.நேரு மீதான ஊழல் புகார் குறித்து திமுக வாய் திறக்கவில்லை" - தவெக சி.டி.ஆர் நிர்மல் குமார்

பனையூரில் உள்ள தவெக-வின் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. மாநில அளவிலான நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்க... மேலும் பார்க்க