செய்திகள் :

`அவனுடன் இருப்பது போன்று என்னுடனும்.!’ - பெண்ணுக்கு தொல்லை; நண்பனை வெட்டி போர்வெல்லில் போட்ட வாலிபர்

post image

குஜராத் மாநிலம் மேற்கு கட்ச் பகுதியில் நாகத்ரனா எனும் பகுதியின் அருகில் உள்ள முரு என்ற கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(20) என்ற வாலிபரை கடந்த சில நாட்களாக காணவில்லை. இதையடுத்து ரமேஷ் சகோதரர் இது குறித்து போலீஸில் புகார் செய்திருந்தார்.

அதன் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீஸார் காணாமல் போன ரமேஷ் நண்பர் கிஷோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்தான் ரமேஷை கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இக்கொலையில் மைனர் வாலிபர் ஒருவரும் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. அவர்கள் இரண்டு பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

போலீஸாரின் விசாரணையில், ரமேஷ் கடந்த 8 மாதங்களாக திருமணமான பெண் ஒருவருடன் உறவு வைத்திருந்தார். இந்த விசயம் அவரது நண்பரான கிஷோருக்கு தெரிய வந்தது. கிஷோர் தனது நண்பரிடம் தானும் அப்பெண்ணிடம் பேச விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அதோடு இது தொடர்பாக அப்பெண்ணுக்கு இன்ஸ்டாவில் மெசேஜ் போட்டுள்ளார். ரமேஷுடன் தொடர்பில் இருப்பது போன்று என்னிடமும் தொடர்பில் இருக்கவேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். அதோடு ரமேஷ் அப்பெண்ணுடன் தொடர்பில் இருந்தது கிஷோருக்கு பொறாமையை ஏற்படுத்தியது.

சம்பந்தப்பட்ட பெண் கிஷோர் மெசேஜ் செய்தது குறித்து ரமேஷிடம் தெரிவித்தார். உடனே கிஷோரிடம் ரமேஷ் இது குறித்து விசாரித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ரமேஷை கொலை செய்ய கிஷோர் திட்டமிட்டார். இதற்காக ரமேஷை ஊருக்கு வெளியில் அழைத்து சென்றுள்ளார். அங்கு மைனர் ஒருவருடன் சேர்ந்து ரமேஷை கிஷோர் கொலை செய்தார்.

பின்னர் கத்தியால் தலை உட்பட உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி அதனை போர்வெல்களில் போட்டார். எஞ்சிய பகுதியை ஒரு இடத்தில் புதைத்திருந்தார்'' என்று போலீஸார் தெரிவித்தனர். அந்த உடல் பகுதியை போலீஸார் தோண்டி எடுத்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

25 பேர் பலியான கோவா நைட் கிளப் தீ விபத்து; டெல்லி மருத்துவமனையில் உரிமையாளர் ஒருவர் கைது

சுற்றுலாவிற்கு மிகவும் புகழ்பெற்ற கோவாவில் கடந்த வாரம் ‘Birch by Romeo Lane’ என்ற நைட்க்ளப்பில் திடீரென இரவில் தீப்பிடித்ததில், சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தீவிபத்து தொடர... மேலும் பார்க்க

தண்ணீரா? ஆசிட்டா? முகமூடி கொள்ளையனை விரட்டிய 70 வயது மூதாட்டி - வைரல் வீடியோ

சிவகாசி பழனியாண்டவர்புரம் காலனியில் வசிப்பவர் மகேஸ்வரி (70). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதிகாலை 5 மணியளவில் தனது வீட்டின் முன்பக்கக் கதவைத் திறந்து வாசல் பகுதியைத் தண்ணீர் தெளித்துச்... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: திருப்பதி சமஸ்கிருத பல்கலைக்கழக பேராசிரியர்கள் கைது

பாலியல் வன்முறைஆந்திரா மாநிலம் திருப்பதியில் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் லட்சுமண் குமார், சேகர் ரெட்டி ஆகியோர் ஒடிசாவைச் சேர்ந்... மேலும் பார்க்க

சேலம்: ஆண் நண்பருடன் நைட் ஷோ சினிமாவுக்கு சென்ற பட்டதாரி பெண் அடித்து கொலை? - என்ன நடந்தது?

சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியைச் சேர்ந்த பாரதி. இவரது தந்தை டெல்லி ஆறுமுகம், அதிமுகவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். பி.இ பட்டதாரி... மேலும் பார்க்க

தூத்துக்குடி: போலீஸாரின் அலட்சியத்தால் நடந்த கொலை; மகனை இழந்த தந்தைக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு

தூத்துக்குடியைச் சேந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரின் மனைவி கருத்து வேறுபாட்டால், இவரைப் பிரிந்து குழந்தையுடன், திருப்பூரில் சதீஷ்குமார் என்பவருடன் சேர்ந்து வசித்து வந்தார்.இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி, தூ... மேலும் பார்க்க

ஆந்திரா டூ நெல்லை; ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தலில் சிக்கிய மகன்; தந்தை தற்கொலை; நடந்தது என்ன?

தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் முக்கிய போதை வஸ்துவான கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போலீஸாரும் இதனைத் தடுக்க முயன்று வருகின்றனர்.இந்த நிலையில், கடந்த 6-ம் த... மேலும் பார்க்க