கடுமையான காயங்கள்; காலை இழந்த மொஜ்தபா காமேனி? - வெளியான அதிர்ச்சி தகவல்!
`இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்' - பழைய நினைவில் பேசிய செங்கோட்டையன்; சட்டென சுதாரிப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, அக்கட்சியின் கோபிசெட்டிபாளையம் தொகுதி வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார் அ.தி.மு.க - வின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தனி தொகுதி த.வெ.க வேட்பாளர் தமிழ் செல்விக்கு ஆதரவாக

சத்தியமங்கலம் பகுதியில் இன்று வாகன பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்ட செங்கோட்டையன், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என பேசியிருக்கிறார். பழைய நினைவில் தவறுதலாக பேசியதை உணர்ந்து உடனடியாக சுதாரித்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், " இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டே பழகி விட்டேன். கோபிசெட்டிபாளையத்தில் வாக்கு சேகரிக்க செல்லும் பொழுது மூதாட்டி ஒருவர் உங்களுக்காக இரட்டை இலை சின்னத்திற்கே எப்பொழுதும் போல வாக்களிப்போம் என்றார்.

இல்லை. நான் தற்போது விசில் சின்னத்தில் போட்டியிடுகின்றேன் எனக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டேன் அவரும் அதற்கு நிச்சயம் உங்களுக்கு தான் எனது வாக்கு என்று கூறினார்" என சமாளித்து முடித்திருக்கிறார்.














