அதிமுக: "இபிஎஸ்-ஐ ஆஹா ஓஹோவென புகழ்ந்தவர்தானே செங்கோட்டையன்" - செல்லூர் ராஜு சாடல...
``எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?" - நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றும் விவகாரம் மிகப்பெரிய பிரச்னையாக மாறி இருக்கிறது.
தமிழ்நாடு தொடங்கி நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் விவாதப் பொருளாகியிருக்கிறது.
`தமிழகத்தை அயோத்தியாக மாற்றுவதற்கு பாஜக முயற்சிக்கிறது. தமிழகத்தில் மதவாத அரசியல் எடுபடாது' என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் இன்று (டிச.6) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், "அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது. இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் அயோத்தி இல்லையே.

அதனால் அயோத்தி மாதிரி தமிழகம் மாறுவதில் தவறு இல்லை. நாம் எல்லோரும் ராமரின் ஆட்சி பற்றி கேள்விப்பட்டிருப்போம். தேசிய ஜனநாயக ஆட்சி ராமரின் ஆட்சியைபோல் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தன் எக்ஸ் பக்கத்தில், ``எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்? கடந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் - பாஜகவைப் படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா? கவலை வேண்டாம்! அப்படி தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.















