செய்திகள் :

ஏவி.எம்.சரவணனை முதலாளி என்று அழைத்தவர், எம்.ஜி.ஆர்.!

post image

ஏவி.எம். சரவணன் குறித்தும் எம்.ஜி.ஆர் உடனான அவரின் நட்பு குறித்தும், ஏவி.எம்.நிறுவனத்தில் இணைந்து தொடர்ந்து அந்நிறுவனத்தில் பயணிக்கும் முக்கிய புள்ளி ஒருவரிடம் பேசினோம்.

"எம்.ஜி.ஆர் நடித்த அன்பே வா படத்துக்கு பூஜை போடப்பட்டது. அந்த சமயத்தில் ஆர்.எம். வீரப்பன் தயாரிப்பில் `நான் ஆணையிட்டால்’ என்கிற கருப்பு வெள்ளை படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு இருந்தார். பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என திட்டமிட்டு பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது.

நான் ஆணையிட்டால்

ஏவி.மெய்யப்ப செட்டியார் `அன்பே வா’ கலர் திரைப்படத்தை படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட ஆசைப்பட்டார். எம். ஜி.ஆர் என்ன நினைப்பாரோ, ஏதாவது மறுப்பு தெரிவிப்பாரோ என்கிற தயக்கம் இருந்தது.

அப்பாவின் சங்கடத்தை அருகில் இருந்து பார்த்த சரவணன் "அப்புச்சி நீங்க கவலைபடாதீங்க. நான் பார்த்துக்கிறேன். " என்று சொல்லி விட்டு எம்.ஜி.ஆரை பார்க்கும் வேலையில் இறங்கினார். ராமாவரம் தோட்டத்துக்கு செய்தி செல்ல உடனே வரச் சொன்னார்கள். சரவணனை பார்த்தவுடன் "வாங்க முதலாளி" என்று வாஞ்சையுடன் வரவேற்றார், மக்கள் திலகம்.

செட்டியாரின் ஆசையைச் சொல்ல அப்போது அவரை பார்க்க வந்திருந்த ஆர்.எம்.வீரப்பனை அழைத்தார். "என்னப்பா பொங்கலுக்கு உன் படமா? செட்டியார் படமா? என்று கேட்டார். ``அன்பே வா படமே முதல்ல வரட்டும், அப்புறமா நான் ஆணையிட்டால் வரட்டும் " என்று வீரப்பன் சொல்லி விட்டார். சரவணனை பார்த்த எம்.ஜி. ஆர் "என்ன முதலாளி இப்போ சந்தோஷமா " என்று பரிவுடன் சொல்ல மகிழ்ச்சி கரை புரண்டது.

சரவணன்
சரவணன்

நான் ஆணையிட்டால் படத்துக்காக எம்.ஜி.ஆர் கொடுத்த அத்தனை நாட்கள் கால்ஷீட்டையும் மொத்தமாக அன்பே வா படத்துக்கு கொடுத்து விட்டார், எம் ஜி ஆர். ஒரு ஹீரோவாக இல்லாமல் தயாரிப்பு தரப்பில் உண்டான அனைத்து வேலைகளையும் தானே இழுத்து போட்டு வேலை செய்தார். மெய்யப்ப செட்டியார் ஆசைப்பட்ட படியே அன்பே வா திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி சில்வர் ஜூப்ளி விழா கொண்டாடியது. பிற்காலத்தில் எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனபிறகு அவரது ஆட்சிக் காலத்தில சென்னை மாநகர ஷெரிப் பதவியில் இரண்டு ஆண்டுகள் சரவணனை அமர வைத்து அழகு பார்த்தார்.

ஏவி.எம்.சரவணன்

1979-ஆம் ஆண்டு செட்டியார் மறைவுக்கு பிறகு சரவணன் தலைமையில் அவரது சகோதரர்கள் எம் குமரன், எம்.பாலசுப்ரமணியம் ஆகியோர் செயல்பட்டனர். ரஜினி நடிப்பில் முரட்டுக்காளை, கமலின் சகலகலா வல்லவன், அஜித்தின் திருப்பதி, விக்ரமின் ஜெமினி, சூர்யாவின் அயன் என்று தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்கள் அனைவரது படங்களையும் தயாரித்தார், சரவணன். தமிழ் சினிமாவில் நவீன தொழில்நுட்பம், புதிய டிரெண்ட் போன்றவற்றை உருவாக்கியர். இந்தியாவிலேயே அனிமேஷன் காட்சிகளை முதன் முதலில் ராஜா சின்ன ரோஜா படத்தில் பயன்படுத்தினார். என்று சொல்லிமுடித்தார்.

மலேசியாவில் அஜித், விஜய், சிவகார்த்திகேயன்! - கோலிவுட் அப்டேட்ஸ்

டிசம்பர் மாதம் என்றாலே சென்னையில் கர்நாடக சங்கீதம் களை கட்டும். ஒரு பக்கம் நாரத கான சபா, இன்னொரு பக்கம் மியூசிக் அகாடமி, மறு பக்கம் காமராஜ் மெமோரியல் ஹால் என்று ஒவ்வொரு அரங்கிலும் இசை மேளா இனிதே நடக்க... மேலும் பார்க்க

Arasan: ``இன்னும் 3 நாள்ல மதுரைல ஷூட்டிங்!" - மாஸ் லுக்கில் சிலம்ப(அ)ரசன் கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்

சிலம்பரசனின் அடுத்த படமாக, கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் `அரசன்' படம் உருவாகிறது.கடந்த அக்டோபரில் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளன்று அரசன் பட ப்ரோமோ வீடியோ ... மேலும் பார்க்க

ஏவி.எம்.சரவணன்: `என்னமோ மனசு கேட்கல; மயானம் வரை போய்.!’ - கலங்கிய சிவகுமார்

ஏவி.எம்.சரவணன் மறைந்த அன்று, அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் சிவகுமார், கண்கலங்கி நின்றார். அவரின் மேல் கொண்ட அன்பு, சிவகுமாரை சுற்றி நின்ற அனைவராலும் அன்று உணரப்பட்டது. ``அவரோட நியாபகமாதான... மேலும் பார்க்க

Stephen Review: அசத்தல் மேக்கிங் ஓகே; சீரியல் கில்லர் கதையில் இவற்றையும் கவனித்திருக்கலாமே?!

குறும்படத்திற்கான ஆடிஷனுக்கு வரும் பெண்களை ஒரு குறிப்பிட்ட வசனத்தைப் பேசச் சொல்கிறான் ஸ்டீபன் ஜெபராஜ் (கோமதி சங்கர்). இவ்வாறு வருபவர்கள் வசனம் பேச, அவர்கள் இறுதி வசனத்தை அடையும் தருணத்தில் ஸ்டீபன் கத்... மேலும் பார்க்க

Soori: `இனி மிகுந்த கவனத்துடன் இருக்கச் சொல்கிறோம்!' - ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சூரி

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடித்துவரும் படம் ‘மண்டாடி’. எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், முக்கிய கதாப்பாத்திரத்தில் மகிமா நம்பியார், நடிகர் சுஹால் உள்ளி... மேலும் பார்க்க