செய்திகள் :

``கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் பாஜக பற்றி பேசாதாது ஏன்?'' - CPIM பெ.சண்முகம் கேள்வி

post image

கரூர் கூட்ட நெரிசலில் 41 பலியான விவகாரம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு 40 நாள்களுக்கு மேல் பொதுவெளிக்கு வராமல் இருந்த விஜய், கடந்த நவம்பர் மாதம் முதல் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளார்.

செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்ததை அடுத்து, விஜய் வரும் டிசம்பர் 18-ம் தேதி ஈரோட்டில் மக்கள் சந்தித்து தனது பிரசாரத்தை மீண்டும் தொடங்கவிருக்கிறார். கரூர் சம்பவத்திற்குப் பிறகு, விஜய் தமிழ்நாட்டில் நடத்தும் முதல் மக்கள் சந்திப்பு இது.

இதற்கிடையில் SIR, திருப்பரங்குன்ற விவகாரம் என பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்துவிட்டன. திமுகவை அரசியல் எதிரி என தொடர்ந்து விமர்சிக்கும் விஜய், பாஜக பற்றி ஏதும் பேசாமல் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளது.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

இந்நிலையில் இதுகுறித்துப் பேசியிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், "கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக எனக் கூறிய விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு எந்த இடத்திலும் கொள்கை எதிரியைப் பற்றி குறிப்பிடவில்லை.

கரூருக்கு முன், கரூருக்கு பின் என கொள்கை எதிரி யார் என்பதில் விஜயின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது" என்று விஜய்யை விமர்சித்து பேசியுள்ளார்.

விஜய்யின் அரசியல் செயல்பாடு குறித்து கரூர் சம்பவத்தின்போதே கருத்துத் தெரிவித்திருந்த பெ. சண்முகம், "கரூர் விவகாரத்தை பயன்படுத்தி, நடிகர் விஜய்யை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சிப்பதாக" கூறியிருந்தார்.

மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்
மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்

மேலும், செங்கோட்டையன் குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பே பேசியிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், "வாச்சாத்தி கொடூரம் நடந்தபோது, அன்றைய வனத்துறை அமைச்சரான செங்கோட்டையன் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சட்டமன்றத்திலே பொய் பேசினார்.

அதிமுக அரசின் அட்டூழியங்களை நாங்கள்தான் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினோம். அப்போதுதான் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அம்மா ரொம்ப ஃபீல் பண்றாங்க.. விபத்து ஏற்படுத்தி, பெ. சண்முகம், அண்ணாமலை ஆகியோரின் கதையை முடித்துவிடுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது செங்கோட்டையன் தான். இமயமலையை இலைச் சேரத்தில் மறைக்க முடியாது" என்று கடுமையாகக் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 65 சதவீத சொத்துகளை வைத்திருக்கும் 10 சதவீத பணக்காரர்கள்; ஆய்வறிக்கை சொல்வது என்ன?

2026-ம்‌ ஆண்டிற்கான உலக சமத்துவமின்மை அறிக்கை வெளியாகி உள்ளது.இது 2018, 2022 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக வரும் அறிக்கை இது ஆகும்.அதில் கூறப்பட்டுள்ளவை...இந்தியாவின் முதல் 1 சதவிகித பணக... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத்தொகை: "நிராகரிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம்?" - அமைச்சர் KKSSR விளக்கம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கத்தை வெள்ளியன்று மாலை சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலை... மேலும் பார்க்க

``தமிழ் கடவுள் முருகரை எப்படி வழிபடணும்னு எங்களுக்குச் சொல்லித் தர வேண்டாம்'' -திமுக தென்காசி எம்.பி

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்ததுபோல், இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து அமைப... மேலும் பார்க்க

``அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' - பாஜக அனுராக் தாகூர் காட்டம்

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்ததுபோல், இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து அமைப... மேலும் பார்க்க

``IIT மெட்ராஸ் பறை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்'' - விருதுநகரில் பறை இசைத்த ஆளுநர் ரவி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையில், தமிழக ஆளுநரின் விருப்ப நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் பத்மஸ்ரீ விருதுபெற்ற பறை இசை கலைஞர் வேலு ஆசான் மூலம் கட்டப்பட்டுள்ள பாரதி பறை பண்பாட்டு மைய... மேலும் பார்க்க

`` ஈரோடு வரும் விஜய்; காலை 11 மணி முதல் பகல் 1 மணிக்குள்" - தேதியை அறிவித்த செங்கோட்டையன்

தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்தார். வாரி மஹால் அருகே இருக்கும் தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் க... மேலும் பார்க்க