செய்திகள் :

`கில் அந்த இடத்துக்குத் தகுதியானவர்!' - சஞ்சு பேட்டிங் ஆர்டர் குறித்து சூர்யகுமார்

post image

இந்தியா vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் நவம்பர் 14-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 - 0 என தென்னாப்பிரிக்கா வென்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 - 1 என இந்தியா வென்றது.

அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை கட்டாக்கில் தொடங்குகிறது.

இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில்
India Test and ODI Team Captain Shubman Gill

கழுத்து வலி காரணமாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை தவறவிட்ட கேப்டன் சுப்மன் கில், தற்போது டி20 தொடருக்குத் திரும்பியிருக்கிறார்.

முன்னதாக, கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ஆசிய கோப்பைத் தொடர் மூலம் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு கில் டி20 அணியில் மீண்டும் ஓப்பனிங் வீரராகவேத் திரும்பினார்.

ஆனால் அந்த ஒன்றரை வருட இடைவெளியில் சஞ்சு சாம்சன் ஓப்பனிங் வீரராக சிறப்பாக விளையாடி வந்தார்.

கில்லின் மறு வருகைக்குப் பின்னர் டி20 அணியில் சஞ்சு சாம்சனுக்கு ஒரு நிலையான பேட்டிங் பொசிஷனே இல்லை.

ஒரு போட்டியில் ஒன் டவுனிலும் இன்னொரு போட்டியில் நம்பர் 4 அல்லது நம்பர் 5 இடத்திலும் ஆட வைக்கப்படுகிறார்.

இந்த நிலையில், ஓப்பனிங் இடத்துக்கு கில் தகுதியானவர் என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியிருக்கிறார்.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

நாளை நடைபெறும் போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசிய சூர்யகுமார் யாதவ், ``அணியில் இப்போது ஓப்பனிங் வீரர்களைத் தவிர அனைவரும் எந்த இடத்திலும் இறங்கத் தயாராக இருக்க வேண்டும்.

சஞ்சு சாம்சன் ஓப்பனிங் ஆடியபோது சிறப்பாகச் செயல்பட்டார். ஆனால், கில் அவருக்கு முன்பாக இலங்கைத் தொடரில் (2024) ஓப்பனிங்கில் ஆடியிருந்தார். எனவே அந்த இடத்துக்கு அவர் தகுதியானவர்.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

அதேசமயம் சஞ்சு சாம்சனுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கியிருக்கிறோம். அவர் எந்த இடத்திலும் ஆடத் தயாராக இருக்கிறார். ஓப்பனிங் வீரர்களைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்களிடம் நம்பர் 3 முதல் 6 வரை எந்த இடத்திலும் இறங்கத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறேன்.

இருவருமே எங்கள் திட்டத்தில் இருக்கின்றனர். அவர்களைப் போன்ற வீரர்கள் அணியில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்று கூறினார்.

``அவரவர் வரம்புக்குள் இருந்தால் நல்லது'' - தனது முன்னாள் IPL அணி உரிமையாளர் மீது கம்பீர் தாக்கு

இந்திய கிரிக்கெட் அணிக்கு கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, சொந்த மண்ணில் நடைபெற்ற 9 டெஸ்ட் போட்டிகளில் 5 போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது.அதிலும், நியூசிலாந்திடம் 3-0 எனவும்... மேலும் பார்க்க

IND v SA: தெ.ஆ-வை சுருட்டிய குல்தீப், பிரசித்; `சுட்டிப் பையன்' ஜெஸ்வால் 116* ; தொடரை வென்ற இந்தியா!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (டிசம்பர் 6) நடைபெற்றது.முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா போட்டி வென்றதால் இன்றைய போட்டியில் வெற்றி ப... மேலும் பார்க்க

ஒரே சதத்தில் சச்சின், ரோஹித்தின் சாதனை சமன்; கரியரின் 2-வது இன்னிங்ஸில் பட்டாஸாக வெடிக்கும் டி காக்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (டிசம்பர் 6) தொடங்கியது.20 போட்டிகளுக்குப் பிறகு டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கைத் ... மேலும் பார்க்க

The Ashes: சதம் அடித்த ஜோ ரூட்: 'எங்கள் கண்களை காப்பாற்றிவிட்டீர்கள்' - ஹைடன் மகளின் 'கலகல' பதிவு

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே நடக்கும் புகழ்பெற்ற தொடர் ஆஷஸ் டெஸ்ட் (The Ashes). இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கிடையே நூற்றாண்டைக் கடந்து நடந்து கொண்டிருக்கும் இந்த ஆஷஸ் தொடர் நவம்பர் 21... மேலும் பார்க்க

IND vs SA: `358 அடிச்சும் பத்தல' சொதப்பல் பவுலிங்; வீணான ருத்துராஜ், கோலி சதம்; ஈஸியாக வென்ற தெ.ஆ

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்பூரில் இன்று நடைபெற்றது.முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியில் ஆடிய ரியான் ரிக்கில்டன், சுப்ராயன், பார்ட்மன் ஆகியோர் பென்ச்சில் உட்காரவைக்கப... மேலும் பார்க்க

MS Dhoni: ``அது ஒரு மெக்சிகன் அலை போல் நகர்ந்து வந்தது" - வாழ்வின் நெகிழ்வான தருணம் குறித்து தோனி

கபில்தேவ் தலைமையில் முதல்முறையாக 1983-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, தனது இரண்டாவது உலகக் கோப்பையை வெல்ல சுமார் 3 தசாப்தங்கள் ஆனது.சரியாக 28 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையில் சொந்த மண்ண... மேலும் பார்க்க