செய்திகள் :

கொளத்தூர் தேர்தல் முடிவு: ஸ்டாலின் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

post image

இந்த ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.

ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக கட்சியைச் சேர்ந்த வி.எஸ்.பாபு கொளத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏவாகத் தற்போது வெற்றி பெற்றுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலின்போது, கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் எழுந்தது.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

இதையடுத்து, ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். பொதுவாக, தேர்தலில் வெற்றி பெற்றவர்களை எதிர்த்து வழக்குத் தொடர வேண்டுமானால், தேர்தல் முடிவுகள் வெளியான 45 நாட்களுக்குள் வழக்கைத் தாக்கல் செய்திருக்க வேண்டும்.

ஆனால், ஸ்டாலின் வழக்குத் தொடர்ந்ததோ, தேர்தல் முடிவுகள் வெளியாகி 45 நாட்களுக்குப் பிறகு.

இதனால், ஸ்டாலின் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்யும்போது, 45 நாட்களுக்குள் வழக்குத் தாக்கல் செய்யாததற்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்தனர்.

விசாரணையின் முடிவில், ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்ப்பட்டுள்ளது.

`பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட மாணவிகள்; தீண்டாமை... உளவியல் ஒடுக்குமுறை!' - மாணிக்கம் தாகூர்

புதுக்கோட்டை அருகே ஓடும் அரசுப் பேருந்தின் கதவு திடீரென திறந்ததில், பேருந்தில் பயணம் செய்த 10 பள்ளி மாணவிகள் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள... மேலும் பார்க்க

மேகதாது: ``மேலும், மேலும் முன்னேறும் கர்நாடக அரசு... ஆனால், நாம்?" - அன்புமணி வலியுறுத்தல்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு விரைவாக அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையத் தலைவர் அனுபம் பிரசாத்தை, கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சாலுவராய சாமி நேரில் சந்தித்து வலியுறுத... மேலும் பார்க்க

விதி 110: ``நம்பி வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகம்" - சீமான் காட்டம்

கடந்த ஆகஸ்ட் 05- ம் தேதி முதல் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாள்தோறும் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களும், அத்துறை தொடர்பான அறிவிப்புகளும... மேலும் பார்க்க

TN Assembly : முதல்வர் விஜய் Vs எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி; அவையில் அனல் பறந்த விவாதம் | Full Story

சட்டமன்றத்தில் முதல்வர் கையில் வைத்திருக்கும் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் முதல்வர் விஜய்யும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் காரசாரமாக கருத்துகளை பகிர்ந்து கொண்டன... மேலும் பார்க்க

ஈரான் பிரதமரைச் சந்தித்த மோடி: `ஈரானுக்கு உதவினால் பொருளாதார தடை' - அமெரிக்கா எச்சரிக்கை

சமீபத்தில் இந்தியப் பிரதமர் மோடி கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள பிஷ்கெக் நகருக்கு 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டிற்காகச் சென்றிருந்தார்.மோடி - ஈரான் பிரதமர் சந்திப்புஅங்கே ரஷ்ய அத... மேலும் பார்க்க

"விஜய் கன்னியாகுமரி போனாரே... ஒரு தொகுதியாச்சு ஜெயிச்சீங்களா?" - உதயநிதி vs ஆனந்த்

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கும் தவெக அமைச்சர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்திருந்தது.அமைச்சர் ஆனந்த்... மேலும் பார்க்க