செய்திகள் :

சில விலங்குகள் தங்கள் குட்டிகளையே சாப்பிடுவது ஏன் தெரியுமா?

post image

விலங்குகள் சில நேரங்களில் தங்கள் சொந்தக் குட்டிகளையே கொன்று தின்னும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. சுவீடன் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் அனீஷ் போஸ் இது குறித்துக் கூறுகையில், "தங்கள் குட்டிகளையே உண்ணும் பழக்கம் விலங்குகளிடம் பரவலாகக் காணப்படுகிறது. இது அவற்றின் இனப்பெருக்க உத்திகளில் ஒன்றாகவே உள்ளது" என்று கூறியிருக்கிறார்.

அனீஷ் போஸ் கூற்றுப்படி, ”எல்லா விலங்குகளும் இப்படிச் செய்வதில்லை. யானைகள், திமிங்கலங்கள் போன்ற விலங்குகள் நீண்ட காலத்திற்கு ஒரு குட்டியை மட்டுமே சுமந்து, அதைப் பாதுகாப்பாக வளர்க்கின்றன. எனவே, இவை தங்கள் குட்டிகளை உண்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.​

ஆனால் மீன்கள், பூச்சிகள் போன்ற உயிரினங்கள் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான முட்டைகளையோ, குட்டிகளையோ ஈனுகின்றன. இவற்றிடம் தான் இந்தப் பழக்கம் அதிகம் காணப்படுகிறது” என்கிறார்.

Fish

சில குட்டிகளை மட்டும் ஏன் உண்கின்றன?

சிலந்தி, மீன் மற்றும் பூச்சி இனங்களில் இது அதிகம் நடக்கிறது. குட்டிகளுக்குப் போதுமான உணவு கிடைக்காத சூழலில், சில குட்டிகளைத் தாய் உண்பதன் மூலம், மீதமுள்ள குட்டிகளுக்குப் போதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்கிறது.​

நாய், பூனை மற்றும் பன்றி போன்ற விலங்குகள், தங்கள் குட்டிகளில் எவை பலவீனமாகவோ அல்லது இறந்து பிறந்தாலோ, அவற்றை உண்டுவிடும். பிரசவத்தின் போது இழந்த ஆற்றலை மீண்டும் பெறத் தாய் விலங்கு இப்படிச் செய்கிறது.​ மேலும் எலி மற்றும் முயல் போன்ற சிறிய பாலூட்டிகளில் இது அதிகம் காணப்படுவதாகவும் அனீஷ் கூறுகிறார்.

``பொன்னென மின்னும், கண்களைப் பறிக்கும்'' - 175 ஆண்டுகளுக்குப் பின் மாயப்பூ; ஆய்வாளர்கள் சொல்வதென்ன?

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நீலகிரி மலைக்கு வருகை தந்திருந்த ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளரான ராபர்ட் வைட் என்பவர், ஊட்டி அருகில் உள்ள நடுவட்டம் பகுதியில் ‘Campbellia aurantiaca’ என்ற ஒட்ட... மேலும் பார்க்க

துருக்கியின் தானியக் களஞ்சியத்தை விழுங்கும் ராட்சத புதைகுழிகள்! - கோன்யா சமவெளியின் பகீர் பின்னணி?

துருக்கியின் மத்திய அனடோலியாவில் அமைந்துள்ள கோன்யா சமவெளி (Konya Plain) அந்நாட்டின் 'தானியக் களஞ்சியம்' என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் கோதுமை, சோளம் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு (Sugar beet) போன... மேலும் பார்க்க

திண்டுக்கல்: அணைப்பட்டி வைகை ஆற்றில் ஆடைக் கழிவுகள்; தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் | Photo Album

வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வை... மேலும் பார்க்க

முதுமலை: `கூண்டுக்குள் சிக்கிய வயதான ஆண் புலி' - அடுத்தக்கட்ட நடவடிக்கையில் வனத்துறை தீவிரம்

வங்கப் புலிகளுக்கான வாழிடப் போதாமை பிரச்னைகள் அதிகரித்து வரும் நீலகிரியில் மனித - புலி எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடலூர் அருகில் உள்ள தேவர்சோலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாதக்கணக... மேலும் பார்க்க

'பார்க்க விமானம்போல இருக்கும்; ஆனால், ஒரு காருக்குத்தான்' - இது ஊர்க்குருவிகளின் கதை!

மழை பெய்து முடித்த நாள்களில், வானம் வெறித்துவிட்டதா என அண்ணாந்துப் பார்க்கையில், உயரத்தில், சிறு புள்ளிகள்போல தெரிகிற பறவைக்கூட்டங்களைப் பார்த்திருக்கிறீர்களா..? கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்துவிடுகிற... மேலும் பார்க்க

ஊட்டி: ஆராய்ச்சியாளனின் 200 ஆண்டுகளுக்கு முந்தைய டைரி குறிப்புகள்! - நிரூபணமாகும் வாய்ப்பு?

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த உயிரியல் ஆராய்ச்சியாளரான பியர் சோனெராட் என்பவர் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய துணைக்கண்டத்தில் தென்பட்ட பல அரிய உயிரினங்களை தனது டைரி குறிப்புகள் மூலம் பதிவு செய்தவர். புகழ்... மேலும் பார்க்க