செய்திகள் :

சென்னை: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரௌடி கொலை - அதிகாலையில் வந்த `ஹெல்மெட்' மர்ம நபர்கள் யார்?

post image

சென்னை கொளத்தூர், மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆதி என்கிற ஆதிகேசவன் (23). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் ராஜமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் ஆதிகேவசனின் பெயர் உள்ளது.

இந்தநிலையில், ரௌடி ஆதிக்கு அறிமுகமான சுசித்ரா என்பவருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 18.12.2025-ம் தேதி பெண் குழந்தைப் பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குழந்தை நேற்றிரவு உயிரிழந்தது.

இந்தத் தகவல் கிடைத்ததும் ரௌடி ஆதி, மருத்துவமனைக்கு நேற்றிரவு வந்திருக்கிறார். குழந்தை இறப்பு குறித்து அங்குள்ள மருத்துவமனை ஊழியர்கள், டாக்டரிடம் ஆதியும் அவர் தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கொலை

இதையடுத்து பிரேத பரிசோதனைக்குப்பிறகு குழந்தையின் சடலத்தை ஒப்படைக்கப்படும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனால் அன்றைய தினம் இரவு ஆதியும் சுசித்ரா, அவரின் தோழி சாருமதி ஆகியோர் மருத்துவமனையில் லேபர் வார்டு பகுதியில் தங்கியிருக்கிறார்கள்.

இதனிடையே, அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனைக்குள் ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று பேர் தூங்கிக் கொண்டிருந்த ரௌடி ஆதியை சுற்றி வளைத்து வெட்டினர். இதில் அவரின் தலை, இடது கை, வலது கால் ஆகியவற்றில் வெட்டு விழுந்தது. ஆதியின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த நோயாளிகளும் மருத்துவமனை ஊழியர்களும் உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால் போலீஸார் வருவதற்குள் கொலையாளிகள் அங்கிருந்து தப்பியோடி, மருத்துவமனைக்கு வெளியில் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோ, பைக்குகளில் ஏறி தப்பிச் சென்றனர்.

இதற்கிடையில் உயிருக்குப் போராடிய ஆதியை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே ஆதி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கீழ்ப்பாக்கம் போலீஸார், கொலை வழக்குப்பதிந்து ரௌடி ஆதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு சென்றனர். ஆதியுடன் இருந்த சுசித்ரா, சாருமதி ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்து கொலையாளிகள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட ரௌடி ஆதி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதோடு ஆதியோடு தங்கியிருந்த சுசித்ரா, சாருமதி ஆகியோருக்கும் இந்தக் கொலையில் தொடர்பு இருப்பதாக எங்களுக்கு சந்தேகம் உள்ளது.

அதனால் அவர்களிடம் விசாரித்து வருகிறோம். மருத்துவமனை வளாகத்துக்குள் 24 மணி நேரமும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அப்படியிருந்தும் இந்தக் கொலை நடந்திருக்கிறது. அதனால் பாதுகாப்பு பணியில் அலட்சியமாக செயல்பட்ட இரவு போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 15 வயது சிறுமி; தாத்தா,தாய் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு!

திருச்சி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ராகுல் காந்தி, குழந்தைகள் நலக் குழு தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போதுதான், 15 வயது சிறுமிக்கு அவரது உறவினர்களே பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந... மேலும் பார்க்க

காதல் கணவனை கைவிட்டுவிட்டு வேறொருவருடன் திருமணம் - பழிவாங்க பெண் ஆட்டோ டிரைவரை சுட்டுக்கொன்ற காதலன்

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி என்ற இடத்தில் அனிதா செளதரி என்ற பெண் கடந்த 4ம் தேதி இரவு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ டிரைவராக கருதப்பட்ட அனிதா இரவில் ஆட்டோ ஓட்டிச்சென்று கொண்... மேலும் பார்க்க

சென்னை: பிரபல மருத்துவக் கல்லூரியின் பெயரைச் சொல்லி ரூ.11 லட்சம் மோசடி; இன்ஜினீயர் சிக்கியது எப்படி?

சென்னை, பாலவாக்கம், கரீம் நகரைச் சேர்ந்தவர் உமா (50). இவரின் மகள், உயர்கல்வி படிக்க சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் விண்ணப்பித்திருந்தார். அப்போது உமாவுக்குத் தெரிந்த குடும்ப ... மேலும் பார்க்க

சென்னை: பால்கோவாவில் மயக்க மருந்து; தாலிச் செயினைத் திருடிய பெண் - சிக்கியது எப்படி?

சென்னை, திருவல்லிக்கேணி, சின்னப்பா தெருவைச் சேர்ந்தவர் மாலத்திரி (44). இவர் கார் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சுஜாதா. இவர், வீட்டிலிருந்தபடியே டெய்லரிங் தொழில் செய்து வருகிறார். 0... மேலும் பார்க்க

All India Pregnant Job: குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் - சிக்கிய மோசடி கும்பல்

பீகாரில் இப்போது புது வகையாக மோசடி பரவி வருக்கிறது. சோசியல் மீடியாவில் All India Pregnant Job என்ற பெயரில் புதுமையான விளம்பரம் ஒன்று வைரலாகி இருக்கிறது. இந்த விளம்பரத்தை பார்த்து அந்த வேலைக்கு விண்ணப்... மேலும் பார்க்க

சபரிமலை கோயில் தங்கம் கொள்ளை வழக்கு: தேவஸ்தான தந்திரி கண்டரரு ராஜீவர் கைது! - என்ன நடந்தது?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலகர்கள் சிற்பம், திருநடை ஆகியவற்றில் பொதிந்த தங்கத்தகடுகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை கேரளா கோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக... மேலும் பார்க்க