செய்திகள் :

சென்னை: மாடியிலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம்; போலீஸ் தீவிர விசாரணை

post image

சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் நவீன் (41). இவரின் மகள் க்ஷிபிஜா (13).

இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய க்ஷிபிஜா, வீட்டின் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கால்தவறி மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதில் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே மாணவி உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

மாணவி மரணம்
மாணவி மரணம்

இதுகுறித்து பல்லாவரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மாணவி க்ஷிபிஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

அப்போது சில கேமராக்கள் பழுதாகியிருந்ததால் மாடியிலிருந்து மாணவி எப்படி கீழே விழுந்தார் என்பது உடனடியாகத் தெரியவில்லை. தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

மதுரை: ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக பள்ளி மாணவிகள் புகார் - 4 பேர் மீது வழக்குப் பதிவு

மதுரை மாவட்டம் விரகனூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 2025-26ல் பயின்ற +2 மாணவிகளுக்கு நேரடியாகவும், போன் மூலமாகவும் பாலியல் தொந்தரவு அளித்ததாக இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் என்பவர் மீது மாணவ... மேலும் பார்க்க

சென்னை: வியாபாரியிடம் பைக்கை திருடிய போலி போலீஸ் - சிக்கியது எப்படி?

சென்னை, கோயம்பேடு, பள்ளிக்கூட தெருவில் வசித்து வருபவர் சங்கர் (53). இவர், கோயம்பேடு, 100அடி சாலையில் டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். 31.07.2026-ம் தேதி மாலை, கோயம்பேடு மார்க்கெட் செல்ல சங்கர், தன்ன... மேலும் பார்க்க

திருத்தணி: வீல்சேருடன் அம்மாவை ரயிலில் தள்ளி கொலை செய்த மகன் - அதிர்ச்சி பின்னணி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவலங்காடு ஒன்றியம் மணவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மாவதி (71). இவரின் கணவர் பத்தாண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். அவர், மத்திய அரசு பணியிலிருந்து ஓய்வு... மேலும் பார்க்க

நாகை: வீட்டுக்கு தெரியாமல் தோழிக்கு நகை கொடுத்து உதவி; மன உளைச்சலில் விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவி!

நாகை மாவட்டத்தில் வீட்டுக்கு தெரியாமல் நகை கொடுத்து உதவ முயன்று சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நாகப்பட்டினம் அந்தணப்பேட்டை புடவை கடை தெருவைச் சேர்ந்தவரின் மகள் ச... மேலும் பார்க்க

ரூ.77 லட்சம் தருகிறேன்: தமிழக முதல்வர் விஜய்யின் ஏ.ஐ வீடியோவை பயன்படுத்தி பெண்ணிடம் 12 லட்சம் மோசடி

ஏழைகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் பேசவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. அந்த வீடியோவை மும்பை வசாய் பகுதியை சேர்ந்த வத்சலா(66) என்ற பெண் பார்த்து விஜ... மேலும் பார்க்க

`நீ எனக்குக் கிடைக்கலைனா, உன் புருஷனைக் கொன்னுடுவேன்’- குடியாத்தம் மோசடிப் பேர்வழியின் கைது பின்னணி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள பெரும்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏ.டி.கே தினேஷ் என்கிற தினேஷ்குமார். பத்திரிகை ஒன்றில் அந்தப் பகுதி நிருபராக சுற்றிவந்த தினேஷ்குமார் மீது ஏற்கெனவே மிரட்டல், பண... மேலும் பார்க்க