செய்திகள் :

டித்வா புயல்: பாம்பன் பாலத்தில் ரயில்கள் செல்ல தடை; ராமேஸ்வரத்தில் பலத்த காற்றுடன் தொடர் மழை

post image

இலங்கை அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக உருவெடுத்துள்ளது. ‘டித்வா’ என அழைக்கப்படும் இந்த புயல், இலங்கையின் வட பகுதியில் இருந்து வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயல், வரும் 30ஆம் தேதி சென்னை மற்றும் ஆந்திரக் கடலோர பகுதிகளில் கரையை கடந்துசெல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

இந்த புயலின் காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. இந்த காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. காற்றுடன் இடைவிடாத மழையும் பெய்து வருகிறது. இதனால் ராமேஸ்வரம் கோயிலுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளது. அதே போல் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் மண்டபம் ஆகிய பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

வீடுகளுக்குள் புகுந்த நீர்

இவற்றை அகற்றும் பணிகளில் நகராட்சி தலைவர் நாசர்கான் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் மழை நீரால் பாதிக்கப்பட்டு குண்டும் குழியாக மாறியுள்ளன.

புயல் காற்றினை தொடர்ந்து பாம்பன் துறைமுகத்தில் 4ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றின் வேகத்தின் காரணமாக ராமேஸ்வரம் தீவு பகுதியில் மறு அறிவிப்பு வரும் வரை விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்குள் புகுந்த மழை நீர்

மேலும் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பாதுகாப்புடன் கட்டுப்படுத்து நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக ராமேஸ்வரம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அறிவித்துள்ளார்.

சாலையில் சாய்ந்த மரம்
சாலையில் சாய்ந்த மரம்

இதனிடையே பாம்பன் கடல் பகுதியில் மணிக்கு 63 கி.மீ. வேகத்தில் காற்று பதிவானதை தொடர்ந்து பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து செல்ல வேண்டிய மதுரை பயணிகள் ரயில் மண்டபத்தில் இருந்து புறப்பட்டது.

சென்னை மற்றும் கன்னியாகுமரியில் இருந்து இன்று காலை ராமேஸ்வரம் வர வேண்டிய 3 ரயில்கள் மண்டபத்தில் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து பயணிகள் பேருந்து மூலம் ராமேஸ்வரம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

நெல்லை, தூத்துக்குடியில் தொடரும் கனமழை; தாமிரபரணியில் வெள்ளம்; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தென்குமரிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங்களில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதன் காரணம... மேலும் பார்க்க

திண்டுக்கல்: ``கழிவுநீர் கலப்பதால் பச்சை நிறத்துக்கு மாறிய நீர்'' - தவிக்கும் மக்கள்; காரணம் என்ன?

திண்டுக்கல், சீலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட எஸ். பெருமாள்கோவில்பட்டி மற்றும் ஏ. ஓடைப்பட்டியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள செல்லமந்தாடி பெரியகுளம் தண்ணீர் தா... மேலும் பார்க்க

முல்லை பெரியாறில் வெள்ளப்பெருக்கு: உப்பார்பட்டி தடுப்பணை உடைப்பு; தவிக்கும் தேனி விவசாயிகள்

தேனி வீரபாண்டி அருகே முல்லை பெரியாற்றின் குறுக்கே கட்டபட்டுள்ளது உப்பார்பட்டி தடுப்பணை. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பெய்த கனமழையால் முல்லை பெரியாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் உப... மேலும் பார்க்க