"முன்பு வாரம் ஒருவரை அடித்து தூக்கிலிட்டுவிட்டு தற்கொலை என்பார்கள்" - மேற்கு வங்...
திருவண்ணாமலை: வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்து நொறுக்கிய ஏஜென்ட்; காவல்துறை விசாரணை!
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று (ஏப்ரல்.23) நடைபெற்று வருகிறது.
அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என எல்லோரும் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சுயேச்சை வேட்பாளரின் ஏஜென்ட் ஒருவர் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

கலசபாக்கம் கீழ்பாலூர் வாக்குச்சாவடியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டிருக்கிறது.
திரும்ப பயன்படுத்த முடியாத அளவிற்கு வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டதால் மாற்று இயந்திரம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும், மாவட்ட ஆட்சியரும், சம்பவ இடத்திற்கு சென்றிருக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.















