செய்திகள் :

'நீதி கிடைக்கவில்லை' - தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் இறங்கிய வேங்கைவயல் மக்கள்!

post image

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பகுதி பட்டியலின சமூக மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் எனும் கிராமத்தில் வசிக்கும் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் கடந்த 2022 ஆம் ஆண்டு மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிராக குரல் கொடுத்திருந்தனர். இந்த வழக்கு சிபிசிடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. அவர்கள் கடந்த மூன்று வருடங்களாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேங்கை வயல்
வேங்கை வயல்

பலரிடமும் டி.என்.ஏ சோதனையும் செய்யப்பட்டது. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பாக மூன்று நபர்களை போலீசார் சந்தேகப்பட்டனர்.

ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களும் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

அதோட இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.

வேங்கைவயல் சம்பவம் நடந்து மூன்று வருடங்களாகியும் இதுவரை யார் குற்றவாளிகள் என கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படவில்லை என்பது அந்த பகுதி மக்களுக்கு கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

வேங்கை வயல்வேங்கை வயல் மக்கள் புறக்கணிப்பு
வேங்கை வயல் மக்கள் புறக்கணிப்பு

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் உரிய நீதி கிடைக்கவில்லை என்பதால் வேங்கைவயல் பகுதி பட்டியலின சமூக மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்கம்: "பாஜகவிற்குச் சாதகமாக போலீஸ்" - "TMC-க்குச் சாதகமாக அடியாட்கள்?" - TMC vs BJP புகார்

இன்று மேற்கு வங்கத்தில் முதல்கட்ட சட்டமன்றத் தேர்தல் நடந்து வருகிறது.2011-ம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்து வரும் திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி, நான்காவது முறையாக ஆட்சியைத் ... மேலும் பார்க்க

"முன்பு வாரம் ஒருவரை அடித்து தூக்கிலிட்டுவிட்டு தற்கொலை என்பார்கள்" - மேற்கு வங்கத்தில் மோடி பேச்சு

மேற்கு வங்கத்தில் உள்ள கிருஷ்ணா நகரில் இரண்டாம் கட்ட தேர்தலுக்காகப் பரப்புரை செய்து வருகிறார் பிரதமர் மோடி. மேற்கு வங்கத்தில் இன்று நடந்து வரும் முதல் கட்ட தேர்தல் குறித்து மோடி பிரசாரத்தில் பேசியதாவத... மேலும் பார்க்க

'நேற்று இரவு கிளம்பிய பஸ் இன்று மாலை 6 மணிக்குத்தான்.!' - EC மீதான அண்ணாமலையின் 'தனிப்பட்ட' கருத்து

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை கவுண்டம்பாளையத்தில் வாக்களித்தார். அதன் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "சென்னையில் இருந்து தென் தமிழகத்த... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்து நொறுக்கிய ஏஜென்ட்; காவல்துறை விசாரணை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று (ஏப்ரல்.23) நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என எல்லோரும் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட... மேலும் பார்க்க