செய்திகள் :

’மஞ்சள் துண்டு போடுவதில் என்ன பிரச்சனை?’ – அதிகாரிகளிடம் கடுகடுத்த செந்தில் பாலாஜி!

post image

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்த தி.மு.க பூத் ஏஜெண்டுகள் மஞ்சள் நிற துண்டு அணிந்து வந்தனர். சில இடங்களில் மஞ்சள் துண்டு அணிய அனுமதிக்கப்பட்ட நிலையில், சில இடங்களில் மஞ்சள் துண்டு அணிய அனுமதிக்கப்படவில்லை. குறிப்பாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி வாக்குச்சாவடிகளில் பூத் ஏஜெண்ட்கள் அணிந்திருந்த மஞ்சள் நிற துண்டை, அதிகாரிகள் அகற்ற வைத்தனர். இது குறித்து பூத் ஏஜெண்ட்கள் வாக்குப்பதிவை பார்வையிட வந்த தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியிடம் முறையிட்டனர்.

அந்த மையத்தில் இருந்த ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சென்று பார்த்த செந்தில் பாலாஜி, பூத் ஏஜெண்ட்கள் யாரும் மஞ்சள் நிற துண்டு அணியவில்லை என்பதை கவனித்தார். இதையடுத்து ’வாக்குச்சாவடிக்குள் கட்சி துண்டுதான் அணியக்கூடாது. ஆனால் பொதுவான மஞ்சள் நிற துண்டு அணிவதில் என்ன தவறு என்ன?’ என செந்தில் பாலாஜி தேர்தல் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். பூத் ஏஜெண்ட்களை மஞ்சள் நிற துண்டு அணிய அனுமதிக்க வேண்டும் என அவர் கூறினார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இதேபோல ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அகர வரிசைப்படி சரியாக வைக்கப்பட்டு இருக்கிறதா என்பதையும் செந்தில் பாலாஜி பார்வையிட்டார். அப்போது 91-வது பூத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அகர வரிசைப்படி இல்லாமல், மாற்றி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் அதிகாரிகளிடம் மின்னண் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரியாக வைக்குமாறு கூறினார். இதையடுத்து அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றி சரியாக வைத்தனர்.

"சினிமா என்பது வேறு, அரசியல் என்பது வேறு" – வானதி சீனிவாசன் காட்டம்

கோவை சிவானந்த காலனி பகுதியில் உள்ள காமராஜர் பள்ளியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் வாக்களித்தார்.பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு பதி... மேலும் பார்க்க

"வாக்களிக்க வெள்ளை சட்டை, பிரவுன் பேண்ட் அணிந்து வந்தது குறியீடா?" – அண்ணாமலை விளக்கம்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பி.எஸ்.ஜி. கலை கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில், பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வாக்களித்தார்.பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவ... மேலும் பார்க்க

‘வணக்கம் தமிழ்நாடு மக்களே’ – கோவையில் வாக்காளர்களை வரவேற்ற ‘டினா’ ரோபோ!

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 27 லட்சத்து 44 ஆயிரத்து 472 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 1,065 இடங்களில் 3,540 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 182... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: தங்கள் வாக்கினைத் தங்களுக்கே செலுத்த முடியாத பிரதான கட்சி வேட்பாளர்கள்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் என 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் தி.மு.க கூட்டணியில் தி.மு.க 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகி... மேலும் பார்க்க

தேனி: பழங்குடி மக்கள் வாக்களிக்க குதிரையில் பயணம் போன EVM இயந்திரங்கள்! | Photo Album

பழங்குடி மக்கள் பழங்குடி மக்கள் பழங்குடி மக்கள் பழங்குடி மக்கள் பழங்குடி மக்கள் பழங்குடி மக்கள் பழங்குடி மக்கள் பழங்குடி மக்கள் பழங்குடி மக்கள் பழங்குடி மக்கள் தேனி, அல்லிநகரம் சுயம்பு ஐயனார் கோயில்: ... மேலும் பார்க்க

நெல்லை: வாழைமரம், மாவிலைத் தோரணங்கள்!பிங்க், ஊதா நிற வாக்குசாவடிகள்! வாக்குபதிவு முன்னேற்பாடுகள்!

நெல்லை: வாழைமரம், மாவிலைத் தோரணங்கள்!பிங்க், ஊதா நிற வாக்குசாவடிகள்! வாக்குபதிவு முன்னேற்பாடுகள்! மேலும் பார்க்க