செய்திகள் :

தேர்தலில் 'டெபாசிட் காலி'னு சொல்றாங்களே; அப்படியென்றால் என்ன?

post image

லை'டெபாசிட்டே போயிடுச்சு', 'டெபாசிட் காலி' போன்ற வார்த்தைகளை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அடிக்கடி கேட்டிருப்போம்.

ஆனால், அப்படி என்றால் என்ன என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா... அப்படி யோசித்திருந்தால் உங்களுக்கான பதில்.

வங்கியில் எப்படி குறிப்பிட்ட ஒரு தொகையை டெபாசிட் செய்து வைக்கிறோமோ... அதே போல, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட்டாகச் செலுத்த வேண்டும்.

தேர்தல்
தேர்தல்

யார் எவ்வளவு செலுத்த வேண்டும்?

அந்த வேட்பாளர் குறிப்பிட்ட தொகுதியில் பதிவாகியிருக்கும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றிருந்தால்தான், அந்த வேட்பாளருக்கு டெபாசிட் பணம் திருப்பிக் கொடுக்கப்படும்.

இல்லையென்றால், அந்த டெபாசிட் தேர்தல் ஆணையத்திற்கே சென்று சேர்ந்துவிடும்.

இப்படி தேர்தல் ஆணையத்திடம் டெபாசிட் பெற முடியாமல் போகும் வேட்பாளர்களையே டெபாசிட் இழந்த வேட்பாளர்கள் என்று கூறுகிறார்கள்.

சட்டமன்றத் தேர்தலுக்கு பொதுப்பிரிவினர் ரூ.10,000-மும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் ரூ.5,000-மும் டெபாசிட் செலுத்த வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பொதுப்பிரிவினர் ரூ.25,000-மும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் ரூ.12,500-மும் டெபாசிட் செலுத்த வேண்டும்.

உதாரணம்

சென்னை ராயபுரம் தொகுதியின் ஸ்டார் வேட்பாளர் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வாக்குகளை வைத்து டெபாசிட் இழப்பு உதாரணத்தைப் பார்ப்போம்.

ராயபுரம் தொகுதியில் மொத்தம் 1,27,356 வாக்குகள் பதிவாகியுள்ளன.

1,27,236-ஐ 6-ஆல் வகுத்தால் வரும் எண் அளவிற்கு ஜெயகுமார் வாக்குகள் பெற்றிருந்தால், அவர் டெபாசிட் பணத்தைப் பெறுவார். அப்படி இல்லையென்றால், அவருக்கு டெபாசிட் பணம் கிடைக்காது.

1,27,236-ஐ 6-ஆல் வகுத்தால் 21,226 வாக்குகள் வருகிறது.

ஆனால், ஜெயகுமார் பெற்றிருக்கும் வாக்குகளோ 18,170.

21,226-க்கும் கீழ் எண்ணிக்கை வந்துள்ளதால், ஜெயகுமார் டெபாசிட் இழந்திருக்கிறார். அவருக்கு ரூ.10,000 மீண்டும் கிடைக்காது.

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க

PM SHRI திட்டம்: `புதிய கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசின் முடிவென்ன?' - கடிதம் எழுதிய மத்திய அரசு!

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ (PM SHRI) திட்டத்தில் இணையுமாறு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) ஒரு பகுதி... மேலும் பார்க்க

காங்கிரஸ்: 'பச்சைத் துரோகம்; சந்தர்ப்பவாதத்துக்கு கொள்கை முகமூடி' - டி.ஆர்.பாலு காட்டம்!

தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவளித்திருக்கிறது. இந்த விவகாரம் திமுக தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக கூட்டணியில் போட்டியிட்டு, கூட்டணி பலத்தில் 5 தொ... மேலும் பார்க்க