செய்திகள் :

சிறுமிக்குப் பாலியல் தொல்லை - தவெக ஆதரவாளர் பாம்பு தினேஷ் கைது!

post image

சென்னை காசிமேடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சிறுமி ஒருவர் சில தினங்களுக்கு முன்பு வந்திருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்கிற பாம்பு தினேஷ் என்பவர் சிறுமியுடன் அன்பாக பேசி பழகி வந்திருக்கிறார். சம்பவத்தன்று சிறுமி, தினேஷ் வீட்டுக்கு வந்தபோது அவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகத் தெரிகிறது. அதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததோடு தனக்கு நடந்த கொடுமையை உறவினரிடம் தெரிவித்திருக்கிறார். பின்னர் இந்தத் தகவல் சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரியவந்திருக்கிறது.

கைது

அதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர் ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார், சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த குற்றச்சாட்டில் தினேஷைப் பிடித்து விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தினேஷ் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தினேஷ், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக விசில் சின்னத்துக்கு தீவிரமாக வாக்குகளை சேகரித்தவர். மேலும் அவர் தவெகவின் தீவிர ஆதரவாளர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

நெல்லை: கூடுதல் வரதட்சணை கேட்டு தகராறு; தற்கொலை செய்த அக்கா... அக்காள் கணவரை கொலைசெய்த தம்பி!

நெல்லை மாவட்டம், களக்காடு அருகிலுள்ள கடம்போடு வாழ்வு கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் மனைவி ராஜலெட்சுமி. தம்பதியினர் நெல்லையில் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. ராஜலெட்சுமி, தனியார் ... மேலும் பார்க்க

9 ஆண்களைத் திருமணம் செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த பெண்; மகாராஷ்டிராவை உலுக்கிய 'கல்யாண மாஃபியா'!

மகாராஷ்டிரா கிராமங்களில் விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு திருமணம் செய்து கொள்ள பெண் கிடைப்பதில்லை. அனைத்து பெண் வீட்டுக்காரர்களும் தங்களது மகள் திருமணம் செய்து கொள்ளப்போகும் மணமகன் அரசு வேலை அல்லது நக... மேலும் பார்க்க

டெல்லி: மணிக்கணக்கில் மனைவியுடன் சண்டை; இளம் நீதிபதி தூக்குப்போட்டு தற்கொலை; என்ன நடந்தது?

டெல்லி தெற்கு பகுதியில் உள்ள கிரீன் பார்க் வீட்டில் அமன்குமார் சர்மா(30) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவர் வடகிழக்கு டெல்லியில் உள்ள கர்கர்தூமா கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். சர்... மேலும் பார்க்க

கிரிக்கெட் மட்டை, கையுறையில் மறைத்து ரூ.1,700 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்; மடக்கிய NCB!

உலகம் முழுவதும் இருந்து மும்பைக்குள் அதிக அளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுகிறது. மும்பையில் கலம்பொலி மற்றும் பிவண்டி இடையே வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப்பொருள், குடோன்களில் பதுக்கி வைக்... மேலும் பார்க்க

4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; கல்லால் அடித்துக் கொலை... சாணத்தில் உடலை புதைத்த 65 வயது முதியவர்!

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் உள்ள நஷ்வராபூர் என்ற கிராமத்தில் வசிக்கும் தனது தாத்தா வீட்டிற்கு 4 வயது சிறுமி ஒருவர் வந்திருந்தாள். விடுமுறைக்காக வந்திருந்த அச்சிறுமி வெளியில் விளையாடச் சென்ற போது... மேலும் பார்க்க

அண்ணனையும் தாயையும் கொன்று சாணக் குழியில் புதைத்த கொடூரம்; ஆட்டோ டிரைவர் சொன்ன தகவலால் சிக்கிய தம்பி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பச்சடி கிராமத்தில், ரெஜி (54), அவரது தம்பி சஜி (43) பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாய் மேரி (71) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். வழக்கமாக வீட்டு வேலைகளையும், விளைபொரு... மேலும் பார்க்க