செய்திகள் :

கிரிக்கெட் மட்டை, கையுறையில் மறைத்து ரூ.1,700 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்; மடக்கிய NCB!

post image

உலகம் முழுவதும் இருந்து மும்பைக்குள் அதிக அளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுகிறது. மும்பையில் கலம்பொலி மற்றும் பிவண்டி இடையே வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப்பொருள், குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை அதிகாரிகள் கலம்பொலி மற்றும் பிவண்டி இடையே உள்ள குடோன்களில் அதிரடி ரெய்டு நடத்தினர். கலம்பொலியில் உள்ள கே.டபிள்யூ.சி குடோனில் ரெய்டு நடத்தப்பட்டபோது அங்கிருந்து ஒரு கார் அவசரமாக வெளியில் செல்ல முயன்றது.

அந்த காரை மடக்கி ரெய்டு நடத்தப்பட்டதில் ,உள்ளே அதிக அளவில் கிரிக்கெட் மட்டைகளும், கையுறைகளும் இருந்தன. அந்த கிரிக்கெட் மட்டையை சோதித்தபோது அதனுள் 136 கிலோ கொகைன் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. கார் டிரைவரிடம் விசாரித்து பிவண்டி என்ற இடத்தில் உள்ள குடோனில் சோதனை நடத்தியபோது அங்கு 213 கிலோ அளவுக்கு கொக்கைன் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1,700 கோடியாகும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களின் உள் துவாரங்களுக்குள் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஒன்பது அடுக்கு பாலிஎதிலீன்கள் சுற்றப்பட்டிருந்ததாகவும், வெளியில் தெரியாமல் இருக்க கருப்பு க்ரீஸ் பூசப்பட்டு இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட இந்த போதைப்பொருள் மும்பை குடோன்களில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து இந்தியா முழுவதும் அனுப்பப்பட இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

‘ஆபரேஷன் ஒயிட் ஸ்டிரைக்’ என்ற பெயரிட்டு போதைப்பொருளுக்கு எதிராக கடந்த ஆறு மாததிற்கும் மேலாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், மும்பை முழுவதும் ரெய்டு நடத்தினர். இதில் உளவுத்துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் எந்த நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்டது என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை. ஆனால் இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 200-300 கிலோ வரையிலான கோகோயின் பறிமுதல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; கல்லால் அடித்துக் கொலை... சாணத்தில் உடலை புதைத்த 65 வயது முதியவர்!

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் உள்ள நஷ்வராபூர் என்ற கிராமத்தில் வசிக்கும் தனது தாத்தா வீட்டிற்கு 4 வயது சிறுமி ஒருவர் வந்திருந்தாள். விடுமுறைக்காக வந்திருந்த அச்சிறுமி வெளியில் விளையாடச் சென்ற போது... மேலும் பார்க்க

அண்ணனையும் தாயையும் கொன்று சாணக் குழியில் புதைத்த கொடூரம்; ஆட்டோ டிரைவர் சொன்ன தகவலால் சிக்கிய தம்பி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பச்சடி கிராமத்தில், ரெஜி (54), அவரது தம்பி சஜி (43) பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாய் மேரி (71) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். வழக்கமாக வீட்டு வேலைகளையும், விளைபொரு... மேலும் பார்க்க

கன்னியாகுமரி கடலில் குதித்து கேரள சகோதரிகள் தற்கொலை; திருமணம் ஆகாதது காரணமா? போலீஸ் விசாரணை!

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் பிலிப். இவரது மனைவி மேரி. இவர்களுக்கு எலிசபெத்பிலிப், ஆனிபிலிப் (35), மீராபிலிப் (32) என்ற மூன்று மகள்கள் உள்ளனர். இதில் எலிசபெத்பிலிப் திருமணமாகி லண்டனில் வசித்து... மேலும் பார்க்க

சென்னை: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - விலை உயர்ந்த பைக்கால் சிக்கிய இளைஞர்கள்

சென்னை, வேளச்சேரி பகுதியில் வசித்து வரும் 32 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனியார் வணிக வளாகத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 25.04.2026-ம் தேதி இரவு, வேலை முடந்து வீட்டிற்கு செல்ல வேளச்சேரி, நேரு நக... மேலும் பார்க்க

புதுச்சேரி: சாக்லேட் ஆசை காட்டி 9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; தீர்ப்பும் வழக்கின் பின்னணியும்

வழக்கின் பின்னணிபுதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி, கடந்த 2024 மார்ச் மாதம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை ... மேலும் பார்க்க

தெருநாய்களைப் பிடித்துச்சென்று ரத்தத்தை உறிஞ்சி விற்பனை; கால்நடை மருத்துவர் மீது பகீர் புகார்

பொதுமக்கள் நாய்கள் உட்பட வளர்ப்புப் பிராணிகள் மீது அதிக அன்பு மற்றும் பாசம் வைத்திருப்பார்கள். வளர்ப்புப் பிராணிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ அதன் உரிமையாளர்கள் பெரிய அளவில் மனவ... மேலும் பார்க்க