செய்திகள் :

ஆரஞ்சு அலர்ட் மீறல்; 'நோ' ஜாக்கெட் - மத்திய பிரதேச க்ரூஸ் விபத்து காரணங்கள்; 5 தமிழர்கள் உயிரிழப்பு

post image

நேற்று முன்தினம் (ஏப்ரல் 30), மத்திய பிரதேசம் பர்கி அணையில் க்ரூஸ் விபத்து ஒன்று நடந்தது. அது இரவு 6 - 6.30 மணியளவில் நடந்துள்ளது.

இந்த விபத்திற்கு காரணம் என்ன?

க்ரூஸ் விபத்து கமாரியா தீவிற்கு அருகே நடந்துள்ளது.

இந்த விபத்திற்கு அந்தப் பகுதியில் மணிக்கு 60-70 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றே காரணம் என்றும், இந்தக் காற்றால் க்ரூஸ் நிலைதடுமாறி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

இதுவரை இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 5 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

இன்னும் மூன்று குழந்தைகள் உள்பட நான்கு பேர் காணவில்லை. விபத்து நடந்த பகுதியில் கடும் மழை பெய்ததால், நேற்று தடைப்பட்ட மீட்புப்பணி இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று
பலத்த காற்று

வெளியாகியுள்ள வீடியோ

இந்த விபத்து நடந்த சமயத்திலான குறிப்பிட்ட க்ரூஸின் வீடியோ வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில்...

க்ரூஸில் பயணித்த சிலர் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் அமர்ந்திருக்கின்றனர்.

க்ரூஸ் கொஞ்சம் மூழ்கி, தண்ணீர் கப்பலுக்கு வந்துகொண்டிருக்கும் போது, க்ரூஸ் பணியாளர்கள் லைஃப் ஜாக்கெட்டுகளை பயணிகளுக்கு வழங்குகின்றனர்.

ஆனால், சட்டப்படி, க்ரூஸ் பயணம் தொடங்குவதற்கு முன்பே, பயணிகளுக்கு லைஃப் ஜாக்கெட் வழங்கப்பட்டிருக்க வேண்டும்... அவர்களும் அணிந்திருக்க வேண்டும்.

ஆனால், இந்தச் சட்டத்தை குறிப்பிட்ட க்ரூஸ் மீறியிருக்கிறது.

இன்னும் தவறுகள்..!

குறிப்பிட்ட க்ரூஸ் 40 பயணிகளுக்கு மேல் பயணித்திருக்கின்றனர். ஆனால், 29 பேருக்கு மட்டும் தான் டிக்கெட் வழங்கப்பட்டிருக்கின்றன.

பர்கி டேம் பகுதிக்கு இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதை மீறியும் அந்தக் க்ரூஸ் பர்கி டேம் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விபத்தையடுத்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் மத்திய பிரதேசம் முழுவதும் க்ரூஸ் பயணங்களை ரத்து செய்துள்ளார்.

குறிப்பிட்ட கப்பலின் ஓட்டுநர், உதவியாளர் மற்றும் டிக்கெட் கவுண்டர் இன்சார்ஜ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேச படகு விபத்து: தாய்-மகன் ஒரே Life Jacket அணிந்து தப்பிக்க முயன்று உயிரிழந்த பரிதாபம்

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகில் நர்மதா ஆற்றில் சொகுசு படகில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பார்க்கச் சென்றனர். படகு ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பலத்த புயல் காற்று வீசியது. இதன... மேலும் பார்க்க

டெல்லியிலிருந்து கிளம்பிய ஸ்விட்சர்லாந்து விமானம்; இன்ஜினில் தீ பிடித்து விபத்து: 6 பயணிகள் காயம்!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சூரிச் நகருக்கு Flight No. LX147 என்ற விமானம் புறப்படத்தயாராக இருந்தது. விமானத்தில் 223 பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை விமானம் புறப்பட்டபோது அதன் ஒரு ... மேலும் பார்க்க

கேரளம்: திருச்சூர் பூரத்துக்கு தயாரித்த பட்டாசு வெடித்து விபத்து; 13 பேர் பலி, 5 பேர் கவலைக்கிடம்!

கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் திருச்சூர் பூரம் எனப்படும் விழா மிகவும் பிரசித்திபெற்றதாகும். திருச்சூர் பூரத்தின்போது பட்டாசுகள் போட்டிப்போட்டுக்கொண்டு வெடிக்கப்படுவது மிகவும் பிரமாண்டமான நிகழ்வா... மேலும் பார்க்க

திறப்பு விழா நேரத்தில் விபரீதம்: ராஜஸ்தான் பெட்ரோகெமிக்கல் வளாகத்தில் தீ - பிரதமர் மோடி வருகை ரத்து!

ராஜஸ்தான் மாநிலம், பலோத்ராவில் உள்ள பச் பத்ரா (Pachpadra) சுத்திகரிப்பு நிலையத்தை பிரதமர் மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கவிருந்த நிலையில், இன்று அங்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாகத் திற... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீரில் கோர விபத்து: மலைப்பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 15-க்கும் மேற்பட்டோர் பலி!

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று ஒரு பயணிகள் பேருந்து மலையிலிருந்து உருண்டு விழுந்ததில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்... மேலும் பார்க்க

ரீல்ஸ் வீடியோவுக்காக கையில் துப்பாக்கியுடன் ஒரே பைக்கில் பயணம்; விபத்தில் சிக்கி 3 சகோதரர்கள் பலி

மத்திய பிரதேச மாநிலம் மௌகஞ்ச் மாவட்டத்தில் 3 சகோதரர்கள் ஒரே பைக்கில் அமர்ந்து கொண்டு சென்றனர். அவர்களில் ஒருவரிடம் துப்பாக்கி இருந்தது. அவர்கள் முன்னால் செல்ல பின்னால் இருந்து மற்றொரு பைக்கில் அவர்களை... மேலும் பார்க்க