"சில தொகுதிகளில் விசிக தோழர்களிடம் ஒற்றுமை குறைவு" - திருமாவளவன் வருத்தம்
AI-யின் மேஜிக்: கிபி 79-ல் இத்தாலியில் எரிமலை வெடித்த போது ஓடிய நபர்; கண்முன்னே கொண்டு வந்த AI
வளர்ந்து வரும் இந்த நவீன யுகத்தில் ஏஐ என்கிற செயற்கை நுண்ணறிவு நினைத்துப் பார்க்காதவற்றையும் நிகழ்த்திக் காட்டி வருகிறது.
தற்போது மீண்டும் அதை நிரூபிக்கும் வகையில் இத்தாலிய நாட்டு பாம்பே நகரில் கிபி 79-ல் மவுண்டு வெசுவியஸ் எரிமலை வெடித்தபோது எரிமலையிலிருந்து வெளியான எரிமலை குழம்புகளில் சிக்கி உயிரிழந்த பலருடைய எச்சங்கள் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டன.
இரண்டு ஆண்களின் எலும்புக்கூடுகள் போர்ட்டா ஸ்டேபியா நெக்ரோ போலிஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. அப்போது கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் இறுதி வாழ்க்கை நிகழ்வுகளை ஏஐ தொழில்நுட்பம் மூலம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மீட்டுருவாக்கம் செய்திருக்கின்றனர்.

இதில் ஒரு நபர் தன்னுடைய தலையில் 'டெரகோட்டா மோர்டார்' என்ற பெரிய மண் பாத்திரத்தை கவசமாக பயன்படுத்தியதையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எலும்புக்கூட்டின் அளவீடு, தொல்பொருள் தரவுகள் மற்றும் புகைப்பட எடிட்டிங் நுட்பங்களைச் சேர்த்து பயன்படுத்தி ஏஐ மூலம் மனித உருவமாக வடிவம் கொடுத்துள்ளனர். எலும்புக்கூட்டை வெறும் எலும்புக்கூடாக மட்டும் பார்க்காமல், எரிமலை வெடித்தபோது அருகில் இருந்த மனிதர் எப்படி உணர்ந்திருப்பார், என்ன வகையான மனநிலையில் இருந்திருப்பார் என்பதையெல்லாம் ஒரு காட்சியாக வடிவமைத்து ஏஐ உருவாக்கியுள்ளது.
வடிவமைப்பு:
முதலில் டிஜிட்டல் வடிவில் எலும்புக்கூட்டை 3டி ஸ்கேனிங் செய்துள்ளனர். அந்த எலும்புக் கூட்டின் வயது, இனம், உடல், ஆரோக்கியம் மற்றும் மரபணு சார்ந்த தகவல்களை ஏ.ஐ அல்காரிதம்கள் பகுப்பாய்வு செய்துள்ளது.
சேகரிக்கப்பட்ட வரலாற்றுத் தகவல்கள் மூலம் எதார்த்தமான மனித தோற்றம் பின்னர் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொல்பொருள் ஆய்வில் புதிய விஷயமாகவும், நேரடியாக வரலாற்றைக் காண்பதற்குரிய அனுபவத்தையும் தருகிறது.
இந்தத் தொழில்நுட்பம் மூலம் வரலாற்றை எளிமையாகப் புரிந்துகொண்டு, அனுபவமாக மாற்ற இது பெரிதும் உதவுவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் வரலாற்று தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ளவும், அழிந்துபோன நாகரீக வாழ்க்கையை டிஜிட்டல் முறையின் மூலம் மீட்டுருவாக்கம் செய்யவும் சிறந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.




















