செய்திகள் :

அண்ணனையும் தாயையும் கொன்று சாணக் குழியில் புதைத்த கொடூரம்; ஆட்டோ டிரைவர் சொன்ன தகவலால் சிக்கிய தம்பி

post image

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பச்சடி கிராமத்தில், ரெஜி (54), அவரது தம்பி சஜி (43) பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாய் மேரி (71) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். வழக்கமாக வீட்டு வேலைகளையும், விளைபொருட்களைச் சந்தைக்குக் கொண்டு செல்லும் பணிகளை ரெஜியே கவனித்து வந்தார். ஆனால், ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு ரெஜியைக் காணவில்லை. அவருக்குப் பதிலாக சஜி அந்த வேலைகளைச் செய்வதைக் கண்ட உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அவர் ரெஜியின் சகோதரி சினிக்கும், போலீஸாருக்கும் தகவல் அளித்தார்.

இடுக்கி இரட்டைக் கொலை
இடுக்கி இரட்டைக் கொலை

இதற்கிடையில், ஏப்ரல் 9-ம் தேதி கேரளச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, சஜி மட்டும் தனியாக வந்து வாக்களித்துள்ளார். அப்போது உடலில் கட்டுகளுடன் வந்த அவர், கழிவறையில் விழுந்துவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். தனது தாயார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தனது சகோதரி சினிவிடம் பொய் கூறி நம்ப வைக்க முயன்றுள்ளார்.

இந்த நிலையில், தகவல் அறிந்து வந்த போலீஸார், பொன்னூட்டில் குடும்பத்தின் கொல்லைப்புறத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள பயன்படுத்தப்படாத சாணக் குழியில் ரெஜி மற்றும் மேரியின் சிதைந்த உடல்கள் தளர்வான மண்ணால் மூடப்பட்டுக் கண்டெடுக்கப்பட்டன. அந்த இடத்திற்கு யாரும் வராமல் இருக்க, அங்கு ஒரு ஆக்ரோஷமான நாயைச் சஜி கட்டிப்போட்டிருந்தது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த சஜி, பின்னர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இடுக்கி
இடுக்கி

விசாரணையில் சஜி அளித்த வாக்குமூலத்தின்படி, தங்களுக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தைப் பிரிப்பதில் சகோதரர்களுக்கு இடையே நீண்ட நாட்களாகத் தகராறு இருந்துள்ளது. மேலும், சஜியின் திருமண முயற்சிகளுக்கு அண்ணன் ரெஜி முட்டுக்கட்டையாக இருந்ததாகவும், சஜிக்குக் குழந்தை பிறப்பதில் உள்ள சிக்கல்களைச் சொல்லி ரெஜி கேலி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த சஜி, மது போதையில் அண்ணனை மூச்சுத்திணறச் செய்தும், தாயைச் சுவரில் மோதியும் கொலை செய்துள்ளார். இந்தக் கொலைகள் ஏப்ரல் முதல் வாரத்தில் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இதேப் போல கடந்த 2018-ம் ஆண்டு, இவர்களது தந்தை மேத்யூ திடீரென மாயமானார். இது குறித்து அப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. தற்போது நடந்துள்ள இரட்டைக் கொலைகளின் பாணியைப் பார்க்கும்போது, தந்தையின் மறைவிலும் சஜிக்குத் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

நேரடிச் சாட்சிகள் இல்லாத இந்த வழக்கில், தடயவியல் நிபுணர்களின் ஆய்வுகள் மற்றும் சூழ்நிலைச் சான்றுகளையே போலீஸார் பெரிதும் நம்பியுள்ளனர். கைதான சஜியைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக இடுக்கி மாவட்ட எஸ்பி சாபு மேத்யூ தெரிவித்துள்ளார். அமைதியான மலைக்கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவம் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி கடலில் குதித்து கேரள சகோதரிகள் தற்கொலை; திருமணம் ஆகாதது காரணமா? போலீஸ் விசாரணை!

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் பிலிப். இவரது மனைவி மேரி. இவர்களுக்கு எலிசபெத்பிலிப், ஆனிபிலிப் (35), மீராபிலிப் (32) என்ற மூன்று மகள்கள் உள்ளனர். இதில் எலிசபெத்பிலிப் திருமணமாகி லண்டனில் வசித்து... மேலும் பார்க்க

சென்னை: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - விலை உயர்ந்த பைக்கால் சிக்கிய இளைஞர்கள்

சென்னை, வேளச்சேரி பகுதியில் வசித்து வரும் 32 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனியார் வணிக வளாகத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 25.04.2026-ம் தேதி இரவு, வேலை முடந்து வீட்டிற்கு செல்ல வேளச்சேரி, நேரு நக... மேலும் பார்க்க

புதுச்சேரி: சாக்லேட் ஆசை காட்டி 9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; தீர்ப்பும் வழக்கின் பின்னணியும்

வழக்கின் பின்னணிபுதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி, கடந்த 2024 மார்ச் மாதம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை ... மேலும் பார்க்க

தெருநாய்களைப் பிடித்துச்சென்று ரத்தத்தை உறிஞ்சி விற்பனை; கால்நடை மருத்துவர் மீது பகீர் புகார்

பொதுமக்கள் நாய்கள் உட்பட வளர்ப்புப் பிராணிகள் மீது அதிக அன்பு மற்றும் பாசம் வைத்திருப்பார்கள். வளர்ப்புப் பிராணிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ அதன் உரிமையாளர்கள் பெரிய அளவில் மனவ... மேலும் பார்க்க

பிஞ்சு உயிரைக் கொன்ற வன்கொடுமை: `மறைக்க முயன்ற அதிகாரிகள்; தூங்கும் காவல்துறை' - பியூஷ் மனுஷ்

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த டிசம்பர் 11, 2026 அன்று இரண்டரை வயது பட்டியலினக் குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச்... மேலும் பார்க்க

Meghalaya Honeymoon Murder: கணவனைக் கொன்ற மனைவிக்கு ஜாமீன்; 11 மாதங்களுக்குப் பிறகு வெளியே வருகிறார்

கடந்த ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த சோனம் ரகுவன்சி என்ற பெண் திருமணமானவுடன் தனது கணவர் ராஜா ரகுவன்சியுடன் மேகாலயாவிற்கு தேனிலவு சென்றார். அவர்கள் மே 11ம்தேதி திருமணம் செய்த பிறகு 20ம... மேலும் பார்க்க