செய்திகள் :

Meghalaya Honeymoon Murder: கணவனைக் கொன்ற மனைவிக்கு ஜாமீன்; 11 மாதங்களுக்குப் பிறகு வெளியே வருகிறார்

post image

கடந்த ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த சோனம் ரகுவன்சி என்ற பெண் திருமணமானவுடன் தனது கணவர் ராஜா ரகுவன்சியுடன் மேகாலயாவிற்கு தேனிலவு சென்றார்.

அவர்கள் மே 11ம்தேதி திருமணம் செய்த பிறகு 20ம் தேதி தேனிலவு சென்றனர். அவர்கள் ஹவுகாத்தி சென்று அங்கிருந்து ஷில்லாங் சென்றனர். ஆனால் மே 23ம் தேதி தம்பதியைக் காணவில்லை. போலீஸார் 10 நாட்கள் தேடிய பிறகு சோஹ்ரா என்ற இடத்தில் மலைபள்ளத்தில் ராஜா ரகுவன்சியின் உடல் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் சோனம் ரகுவனியைக் காணவில்லை. விசாரணையில் சோனம் தேனிலவு சென்ற இடத்தில் ராஜா ரகுவன்சியை தனது காதலன் ராஜ் குஷ்வாஹா என்பவருடன் சேர்ந்து கொலை செய்து அங்குள்ள பள்ளத்தில் போட்டுவிட்டு தலைமறைவானது தெரிய வந்தது.

இச்சம்பவம் கடந்த ஆண்டு மே மாதம் மேகாலயாவின் கிழக்கு காசி மலைப்பகுதியில் நடந்தது. ராஜாவைக் கொலை செய்வதற்காக தேனிலவு சென்றபோது தனது காதலன் மற்றும் அவனது நண்பர்களையும் சோனம் மேகாலயாவிற்கு அழைத்து சென்றார்.

அங்கு மலைப்பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ராஜா ரகுவன்சியை குஷ்வாஹாவும் அவனது ஆட்களும் அடித்து கொலை செய்து பள்ளத்தில் தூக்கிப்போட்டனர்.

உடலை பள்ளத்தில் தூக்கிப்போட சோனமும் உதவி செய்தார். 10 நாட்கள் கழித்து ராஜா ரகுவன்சியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக்கொலை வழக்கில் சோனமும், அவரது காதலன் குஷ்வாஹா மற்றும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சோனம் உத்தரப்பிரதேசத்தில் பதுங்கி இருந்து கொண்டு தனது சகோதரனுக்கு போன் செய்தபோது பிடிபட்டார்.

விசாரணையில் ராஜ் குஷ்வாஹா மற்றும் மூன்று பேருடன் சேர்ந்து சதி செய்து தனது கணகனைக் கொலை செய்ததை சோனம் ஒப்புக்கொண்டார். இவ்வழக்கில் மேகாலயா போலீஸார் ஏற்கனவே 790 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று கோரி சோனம் தரப்பில் 3 முறை மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மூன்று முறையும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நான்காவது முறை விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் கொடுத்துள்ளது.

சட்டநடைமுறைகளை அவரது குடும்பத்தினர் செய்தனர். இதற்காக சோனம் தந்தையும், அவரது சகோதரனும் வந்திருந்தனர். இதையடுத்து சோனம் 11 மாதங்கள் கழித்து சிறையில் இருந்து வெளியில் வந்து இருக்கிறார்.

நங்கநல்லூர்: கதவில் ரத்தக்கறை; கொடூரமாக கொல்லப்பட்ட பெண் தொழிலதிபர் - தூக்கில் தொங்கிய கணவர்!

சென்னை நங்கநல்லூர், தில்லை கங்கா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் நாகலட்சுமி (42). இவரின் கணவர் சுப்பிரமணியன். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நாகலட்சுமி, ... மேலும் பார்க்க

சிறையில் இருந்தபடி, குடும்பத்தினரைக் கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்திய `குண்டாஸ்’ கைதி - மனைவியும் கைது

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கள்ளூர் நேரு நகரைச் சேர்ந்தவர் சம்சுதீன். இவரின் மகன்கள் முபாரக் (வயது 30), அமீர் உசேன் (23). இவர்கள் இருவரும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனைச் செய்த வழக்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு; இடம் மாறி படுத்திருந்த தொழிலாளர் கொலை செய்யப்பட்ட கொடூரம்

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்தவர் குமார். சுகாதாரத்துறை ஊழியரான இவர், அய்யனடைப்பு பகுதியில் தனக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்டி வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் சட்ட விரோத மதுக்கடை; அடித்து நொறுக்கிய பெண்கள்; ஓட்டம் பிடித்த உரிமையாளர்

தங்கள் கிராமத்தில் இயங்கி வந்த சட்டவிரோத மது விற்பனைக்கடைகளை கிராமப் பெண்கள் ஒன்றுகூடி அடித்து உடைத்த சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மது வியாபாரி தப்பித்து ஓட்டம்தமிழகத்தில் ... மேலும் பார்க்க

சென்னை: தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை - வீட்டு உரிமையாளரின் மகன் கைது!

சென்னை, தி.நகர் காவல் மாவட்டத்தில் உள்ள வீட்டில் 27 வயதுடைய பெண் ஒருவர் அவரின் அக்காவுடன் வாடகைக்கு வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 25.04.2026-ம் தேதி இரவு, அ... மேலும் பார்க்க

பாவூர்சத்திரம்: போதையில் இளைஞர் அடித்து கொலை; `101'க்கு கால் செய்து நாடகம்- நண்பர் சிக்கியது எப்படி?

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கல்லூத்து, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பிரவீன் (வயது 26), இவரும் அதே ஊரில் வடக்குத் தெரு லிவிங்ஸ்டன் மகன் முகிலன் (எ) வசந்த் (20) இருவரும் சிறு... மேலும் பார்க்க