செய்திகள் :

தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு; இடம் மாறி படுத்திருந்த தொழிலாளர் கொலை செய்யப்பட்ட கொடூரம்

post image

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்தவர் குமார். சுகாதாரத்துறை ஊழியரான இவர், அய்யனடைப்பு பகுதியில் தனக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்டி வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன், சந்திரன், ஜோஸ், மெர்லின், சசி உள்ளிட்ட 10 பேர் தங்கி வீடு கட்டும் வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் தினமும் காலை முதல் மாலை வரை அங்கு கட்டிட வேலை செய்துவிட்டு இரவில் இதே வீட்டிற்கு எதிரே உள்ள ஒரு கட்டிடத்தில் தங்கி வந்தனர்.

சிப்காட் காவல் நிலையம்
சிப்காட் காவல் நிலையம்

இந்த நிலையில், நேற்று இரவு அனைவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது சந்திரனுக்கும், மற்றொரு தொழிலாளரான மெர்லினுக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. சக தொழிலாளர்கள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர்.

இருப்பினும், ஆத்திரம் குறையாத சந்திரன், நள்ளிரவில் திடீரென எழுந்து மெர்லினைத் தேடியுள்ளார். அப்போது அங்கு படுத்திருந்த மனோகரனை மெர்லின் என நினைத்து சென்ட்ரிங் கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

கட்டையில் இருந்த ஆணி தலையில் பட்டு பலத்த காயம் அடைந்த மனோகரன் உயிரிழந்தார். இந்த நிலையில், காலையில் எழுந்த சக கட்டிடத் தொழிலாளர்கள் போர்வையால் மூடப்பட்டிருந்த மனோகரனை எழுப்பியுள்ளனர். ஆனால், மனோகரன் சத்தம் ஏதும் கொடுக்காததால் போர்வையை விலக்கிப் பார்த்துள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் மனோகரன் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிப்காட் காவல் நிலைய போலீஸார், மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்த சந்திரனைக் கைது செய்தனர்.

சிப்காட் காவல் நிலையம்
சிப்காட் காவல் நிலையம்

மெர்லினுகும், சந்திரனுக்கும் தகராறு நடந்த நிலையில், இரவில் வழக்கமாக தான் தூங்கும் இடத்தில் படுக்காமல் வேறு இடத்தில் தூங்கியுள்ளார். அத்துடன் போர்வையால் மூடப்பட்டிருந்ததால், தூங்கிக் கொண்டிருந்தது மெர்லின்தான் என நினைத்து மனோகரனைக் கட்டையால் தாக்கிக் கொலை செய்தது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.   

பென்னாகரத்தில் சட்ட விரோத மதுக்கடை; அடித்து நொறுக்கிய பெண்கள்; ஓட்டம் பிடித்த உரிமையாளர்

தங்கள் கிராமத்தில் இயங்கி வந்த சட்டவிரோத மது விற்பனைக்கடைகளை கிராமப் பெண்கள் ஒன்றுகூடி அடித்து உடைத்த சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மது வியாபாரி தப்பித்து ஓட்டம்தமிழகத்தில் ... மேலும் பார்க்க

சென்னை: தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை - வீட்டு உரிமையாளரின் மகன் கைது!

சென்னை, தி.நகர் காவல் மாவட்டத்தில் உள்ள வீட்டில் 27 வயதுடைய பெண் ஒருவர் அவரின் அக்காவுடன் வாடகைக்கு வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 25.04.2026-ம் தேதி இரவு, அ... மேலும் பார்க்க

பாவூர்சத்திரம்: போதையில் இளைஞர் அடித்து கொலை; `101'க்கு கால் செய்து நாடகம்- நண்பர் சிக்கியது எப்படி?

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கல்லூத்து, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பிரவீன் (வயது 26), இவரும் அதே ஊரில் வடக்குத் தெரு லிவிங்ஸ்டன் மகன் முகிலன் (எ) வசந்த் (20) இருவரும் சிறு... மேலும் பார்க்க

திருச்சி: பட்டப்பகலில் நகை மதிப்பீட்டாளரை கட்டிப்போட்டு ஒரு கிலோ நகை கொள்ளை! - 5 பேரை தேடும் போலீஸ்

மகாராஷ்டிராவைச் சேர்ந்த உதய் (வயது: 36) என்பவர் திருச்சியில் நகை மதிப்பிடும் பணியைச் செய்து வருகிறார். அவர், குடும்பத்தோடு பெரிய செட்டித் தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது குடும்பத்தினர் ... மேலும் பார்க்க

மகளிர் விடுதிக்குள் நுழைந்து மாணவியை வன்கொடுமை செய்த மளிகைக்கடைக்காரர் - ஒடிசாவில் அதிர்ச்சி

ஒடிசா மாநிலம் புபனேஷ்வரில் உள்ள கங்காபாடா என்ற இடத்தில் மளிகைக்கடை வைத்திருப்பவர் தீபக் பிரதான்(67). இவரது கடைக்கு அருகில் மகளிர் விடுதி ஒன்று இருக்கிறது. அடிக்கடி அவரது கடை வழியாக பெண்கள் மற்றும் மாண... மேலும் பார்க்க

'பஸ் எல்.இ.டியில் என்ன எழுதியிருக்கிறது?' - MTC பஸ் தகராறில் முதியவரை கொன்ற போதையில் இருந்த இளைஞன்

'பஸ் எல்.இ.டியில் என்ன எழுதியிருக்கிறது' என்று கேட்டு தகராறு ஆகி, சென்னையில் ஒரு கொலை நடந்துள்ளது.சென்னை தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் 25 வயதான இளைஞர் அமர்நாத் 70-G மாநகர பஸ்ஸில் ஏறியுள்ளார். அதே பஸ்ஸில் 74... மேலும் பார்க்க